பாலஸ்தீன மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸா மீதுள்ள நமது கடமை

ஷைக்ஹ் உத்மான் அல் கமீஸ் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடப்பதை கண்டு ஒவ்வொரு முஸ்லிமும் வலியை உணர வேண்டும். இந்த நிகழ்வுகள் நம்மை கடந்து செல்லுகையில் சாதாரண விடயங்களாக கடந்து செல்ல அனுமதியில்லை, எந்தளவுக்கு என்றால் நம்மில் சிலர் இந்நிகழ்வுகளின் செய்திகளை தொலைக்காட்சியிலோ அல்லது வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ கண்டால் அதை பார்ப்பதோ படிப்பதோ இல்லை, இதைக்கண்டு சலித்துக் கொள்கிறார்கள்! முஸ்லிம்களிடமிருந்து பரிக்கப்பட்டு முஸ்லிம் அல்லாதவர்களால் ஆட்சி செய்யப்படக் கூடிய மேன்மைமிகு நிலங்களில் ஃபலஸ்தீன் முதன்மையானதாகும் என்பதை ... Read more

நோன்பு காலத்தில் கண்ணுக்கு சொட்டு மருந்து இடலாமா

கண்ணிற்கு இடும் சொட்டு மருந்தின் சுவை தொண்டையை அடைந்தால், நோன்பு முறிந்து விடுமா?அவ்வாறு நோன்பு முறிந்து விடுமென்றால் , நான் நோன்பின் பகல் பொழுதில் சொட்டு மருந்து பயன் படுத்தினேன் பின்னர் உறங்கிவிட்டேன், மருந்தை நான் விழுங்கினேனா இல்லையா என்று தெரியவில்லை, இதன் சட்டம் என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. கண்ணிற்கு பயன் படுத்தும் சொட்டு மருந்துகள் நோன்பை முறிக்குமா இல்லையா எனும் விடையத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. ஷேக் அல் ... Read more

பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? உத்ஹியா கொடுக்கும் ஆட்டின் வயது எவ்வளவு இருக்க வேண்டும்

கேள்வி: பெண் பிராணிகளை உத்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? பதில்: உத்ஹிய்யா கொடுக்கக் கூடிய பிராணிகள் பின் வரும் நிபந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும்: கால்நடைகளில் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றில்) ஒன்றாக இருக்க வேண்டும், உடல் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும், ஷரியத் விதித்த வயதை அடைந்திருக்க வேண்டும். அப்பிராணி பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் சரியே, அதை உத்ஹியா கொடுக்கலாம். இமாம் அந் நவவீ رحمه الله கூறுகிறார்கள்: உத்ஹியா கொடுக்க தகுதியான பிராணிகள் ... Read more

அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன?

கேள்வி : சிலர் அல்வலா வல்பரா என்ற வாக்கியத்தை கவாரிஜ்கள் உருவாக்கியது என்றும் அது இஸ்லாமிய அகீதாவில் உள்ளதல்ல என்றும் கூறுகிறார்களே உங்களது பதில் என்ன? பதில் : அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீது உண்டாகுவதாக. அவர்களுடைய தோழர்கள், குடும்பத்தார் அனைவரின் மீதும் உண்டாகுவதாக. அல்வலா வல்பரா என்பது தவ்ஹீதின் அடிப்படைகளில் ஒன்றாகும். இந்த வார்த்தைகள் குர்ஆன் சுன்னாவில் வந்திருப்பவையாகும். அல்லாஹ் தஆலா குர்ஆனில் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! ... Read more

சோதனைக் காலங்களில் கேட்கும் துஆ

சோதனை ஏற்பட்டால் ஒரு மனிதர், என்ன கூறுவது மிகச் சிறந்தது? பதில்: அல்லாஹ் தெளிவுபடுத்தியது போன்று:  الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, ... Read more

5. மரணித்தவரின்‌ உறவினர்களுக்கு கடமையானவை

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: 19. தனது உறவினர்‌ ஒருவர்‌ மரணித்து விட்டார்‌ என்ற செய்தியை அறிந்த சொந்தக்காரர்களுக்கு இரண்டு விஷயங்கள்‌ கடமையாகிவிடுகின்றன. وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ நிச்சயமாக நாம்‌ உங்களை ... Read more

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா?ஆதாரம் என்ன?

கப்ரு வேதனை மறுமை வரை நீடிக்குமா அல்லது இடையில் நிறுத்தப்படுமா? ஆதாரம் என்ன? பதில் : பிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள். (அல்குர்ஆன் : 40:46) மிகப்பெரும் நிராகரிப்பாளரான பிர்அவ்னையும் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய அவனது கூட்டத்தாரையும் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. பாவம் செய்த முஸ்லிம்களின் தண்டனை இதை விடக் குறைந்தளவாக இருக்கும் என்பதில் ... Read more

அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான… என்று வரும் துஆ ஸஹீஹானதா?

ரஜப் மாதத்தின் முதல் நாள், பின்வரும் துஆவை கேட்பது சுன்னத்தாகுமா என்று அறிய விரும்புகிறேன் اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ  அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷாபான, வ பல்லிக்னா ரமதான. யா அல்லாஹ் ரஜப், மற்றும் ஷாபான் மாதங்களில் எங்களுக்கு பரகத் தருவாயாக, மேலும் ரமதான் மாதத்தை எங்களை அடைய செய்வாயாக. தூய்மை மற்றும் கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்விடம், ஆதாரப்பூர்வமான சுன்னத்தின் அடிப்படையில் செயல்படும் பாக்கியத்தை கொடுக்குமாறு ... Read more

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன? பதில் : இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று ... Read more

குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?

கேள்வி: குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?   பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, குர்ஆனில் ஸஜ்தாவுடைய இடங்கள் 15 ஆகும். அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் 15 ஸஜ்தா வசனங்களை ஓதினார்கள். அதில் மூன்று முஃபஸ்ஸலிலும் சூரா ஹஜ்ஜிலே இரண்டு வசனங்களும் ஆகும். இந்த செய்தி அபூதாவூத், இப்னுமாஜா,ஹாகிம்,தாரகுத்னீ இமாம் முன்திரி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) ஆகியோர் இந்த செய்தி ... Read more