இபாழிய்யாக்கள் என்போர் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது ... Read more

ஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா?

கேள்வி: ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா? பதில்:புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும். ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், ... Read more

இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ?

கேள்வி: இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மா(ஒருமித்த கருத்து)வை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இஜ்மா என்பது இஸ்லாமிய மூலதாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இஜ்மாவிற்கு பல வரைவிலக்கணங்கள் அறியப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்பட்ட வரைவிலக்கணம் இமாம் சுப்கீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பிறகு ... Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

கேள்வி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்…. அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், ... Read more

வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா?

கேள்வி: வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன அதேபோன்று அதை வெள்ளிக்கிழமையில் ஓதுவதன் சிறப்பு பற்றியும் அதிகம் ஹதீஸ்களில் வந்துள்ளன அவைகளில் சிலது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாகவும் இன்னும் சிலது பலவீனமான ஹதீஸ்களாகவும் உள்ளன. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி தன்னுடைய நூலில் ‘சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு’ என்று தலைப்பு இட்டு பின்வரும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார் பராஉ(رضي الله عنه) அறிவித்தார்: ... Read more

ஒரு பித்அத்தைச் செய்யக்கூடியவர் பித்அத்வாதியாக கருதப்படுவாரா…?இது தொடர்பான அளவுகோல் என்ன…?

கேள்வி : ஒரு பித்அத்தைச் செய்யக்கூடியவர் பித்அத்வாதியாக கருதப்படுவாரா?இது தொடர்பான அளவுகோல் என்ன? ஷெய்க் முக்பில் பின் ஹாதி அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்) பதில் கூறுவதாவது : “இது தொடர்பாக நாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பேசியுள்ளோம், இவ்விடயத்தின் அளவுகோல் என்னவெனில், பித்அத்தை செய்யும் ஒருவர் “பித்அத்வாதி (புதுமைக்காரர்)”தான்? இது போதுமானதா இல்லையா? ஆமாம்! இதன் மூலம் நான் கூற விரும்புவது என்னவெனில், மீலாத் விழா கொண்டாட்டம், ரஜப் மாதத்தின் 27-ம் நாள் கொண்டாட்டம், ஹிஜ்ரத் கொண்டாட்டம், ஷாபானின் ... Read more

நபி صلى الله عليه وسلم ஒளியால் படைக்கப் பட்டார்களா?

கேள்வி: அல்லாஹ் உங்களுக்கு நன்மையும், பரகத்தும் செய்யட்டும். சூடாணிலிருந்து இந்த நபர் கேள்வி கேட்கிரார்: சிலர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார் என்று கூறுகிறார்கள், இது உண்மையா? பதில்: இந்த கருத்து தவரானது, முஹம்மது صلى الله عليه وسلم ஆதாமின் பிள்ளைகளில் ஒருவர், அவாின் மூதாதையர்களின் வமிசம் அறியப்பட்டதே, மேலும் அல்லாஹ் கட்டளை இட்டது போல அவரே தான் ஒரு மனிதர் தான் என்பதை தெளிவாக கூறியுள்ளார். அல்லாஹ் கூறுகின்றான்: ... Read more

மனைவி தன் உறவினர்களுடன் உறவு பேண கணவர் தடுக்களாமா?

கண்ணியம் வாய்ந்த ஷெய்கு அவர்களே, தன் மனைவியை அவளின் குடும்பத்தாரின் உறவுகளை புறக்கணிக்குமாறு கட்டளை இட கணவனுக்கு அனுமதி உண்டா? பதில்: புகழனைத்தும் அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்விற்க்கே, நம் நபியாகிய முஹம்மதின் மீதும், அவாின் குடும்பத்தார், தோழர்கள், மற்றும் அவரை கியாமத்து நாள் வரை பின்பற்றுவோரின் மீதும் ஸலாத்தும், ஸலாமும் கூறுகின்றேன். கணவன் தன் மனைவியை அவளின் இரத்த உறவுகளை புறக்கணிக்க, உறவை துண்டிக்க கட்டளை இட அனும்திக்க பற்து அல்ல. குடும்பத்தாருடன் உறவு பேணுவது வாஜிப் ... Read more

ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன?

கேள்வி: ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன? பதில்: அல்ஹம்துலில்லாஹ்.. இரவு தொழுகையைப் போல உபரியான(நஃபில்) தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. பர்ளான தொழுகையில் பெரும்பாலும் குர்ஆனை பார்த்து ஓதுவதின் பால் தேவையில்லாத காரணத்தினால் அது மக்ருஹ் ஆகும். பர்ளான தொழுகையில் தேவை ஏற்பட்டால் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. இமாம் இப்னுல் குதாமா (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்முக்னீ பாகம் 1 பக்கம் 335 ல் ... Read more

தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா?

தற்கொலை செய்து கொள்வது பாவங்களில் மிகப் பெரிய ஒரு பாவமாகும்.யார் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் ஒரு பாவியாகக் கருதப்படுபவர். ஆனாலும் அவர் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற மாட்டார். தற்கொலை செய்து கொள்வது பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன. ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் “நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் ... Read more