நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி: நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? பதில்: அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும்.‌ எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ... Read more

இபாதத்களிலிருந்து திசை திருப்பும் ஸ்மார்ட் போன்கள்

கேள்வி: ஷேக்,மேற்கு உலகில் மற்றும் பிற இடங்களிலும் நாம் இப்போது சிரமமான காலங்களில் வாழ்ந்து வருகிறோம். நம்மிடம் கற்கும் திறன், பயன்தரும் வேளைகளில் ஈடுபடும் திறன், செயல் திறன் ஆகியவை குறைந்துவிட்டது. நாம் செல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறோம், சமூக ஊடகங்ககள், வாட்ஸாப் போன்றவற்றில் அடிமைகளாக இருக்கிறோம். இச்சூழலில் குர்ஆனை நாம் எவ்வாறு மனனம் செய்வது என்று எங்களுக்கு அறிவுரை அளியுங்கள். நாங்கள், எங்களுக்கு நேரம் இல்லை என்று குறைசொல்லுகிறோம் ஆனால், இந்த செல்போன்களில் நமக்கு திரும்ப திரும்ப ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர். பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. *முதலாவது :* இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும். *இரண்டாவது :* யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும். அல்லாஹ் ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

  திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.  நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் ... Read more

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?அது கட்டாய கடமையா?

கேள்வி ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அது கட்டாய கடமையா? பதிலின் சுருக்கம்: ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போல் அவருக்கு நற்கூலியைப் பதிவு செய்திருப்பார். மேலும் அறிய, விரிவான பதிலைப் பார்க்கவும். பதில்: உள்ளடக்கம்: • ஷவ்வால் நோன்பு கடமையா? • ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஷவ்வால் நோன்பு கடமையா? ரமழானின் கடமையான நோன்பிற்குப் ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2

இமாம் அல் அல்பானி கூறுகிறார்: இரண்டு நிபந்தனைகளுடன் குளிப்பாட்டுபவர்களுக்கு நிறைந்த நற்கூலி அல்லாஹ்வினால்‌ வழங்கப்‌படுகின்றது. முதலாவது: குளிப்பாட்டுபவர்‌ மையித்தின்‌ உடம்பில்‌ எதாவது குறைபாடுகளைக்‌ கண்டால்‌ அதை வேறு யாருக்கும்‌ கூறாமல்‌ மறைத்து விட வேண்டும்‌. “ஒரு முஸ்லிமைக்‌ குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக்‌ கொண்டால்‌ நாற்பது முறை அல்லாஹ்‌ குளிப்பாட்டியவனை மன்னிக்கிறான்‌. கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப்பிடத்தை மறுமை வரை அளிக்கின்றான்‌. கபனிட்டவனுக்கு அல்லாஹ்‌ மறுமையில்‌ சுவர்க்கத்தில்‌ மெல்லியதும்‌ அழுத்தமான துமான உடைகளை அணிவிக்கின்றான்‌” என நபி ... Read more

தௌபா செய்த பாவங்களும் மறுமையில் காட்டப்படுமா?

புத்தக அறிமுகம்

நமது இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை தமது கைப்பட தொகுத்து தந்திருந்தாலும் சில அறிஞர்கள்  வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் அவர்களது மாணவர்களாலோ அல்லது பின்வந்தவர்களாலோ  தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் நவீன கால முஜத்தித்களில் ஒருவரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புகள் பத்வாக்கள் தொகுக்கப்பட்ட நூலே أساس الباني في تراث الألباني என்ற புத்தகமாகும்.

அவரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி அபூ இப்ராஹீம் அஹ்மத் இப்னு நஸ்ருல்லாஹ் ஸப்ரி என்பவரே தொகுத்துள்ளார்.

நான்கு பாகங்களையும் 2550 பக்கங்களையும் கொண்ட இந்நூலை ஆசிரியர் நன்கு ஒழுங்கு படுத்தி வாசிப்பவருக்கு   இலகுவான விதத்தில் வடிவமைத்துள்ளார்.

இந்த கிதாபில் மார்க்கத்தின் பல பகுதிகளுக்கான தீர்ப்புகள் பதியப்பட்டுள்ளன.
முதலாவது பாகத்தில் 83 பக்கங்கள் அகீதாப் பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :
“அனுவளவு தீமை செய்திருந்தாலும் அவர் (மறுமையில்) அதைக் கண்டு கொள்வார்” என்ற வசனம் என்னை கவலையடையச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனது பாவங்களை மறுமையில் மக்கள் மத்தியில் பார்த்துக் கவலைப்படுவாரே என்று சஞ்சலப்படுகிறேன். தௌபா செய்திருந்தாலும் இவ்வாறு காண்பானா?

பதில்:
மனிதன் தனது பாவத்தை விட்டும் தௌபா செய்து அல்லாஹ் அதனை அழித்திருந்தால் மறுமையில்அதைதக் காண மாட்டார். உலகில் தௌபா செய்யாத பாவத்தையே அவன் காண்பான்.

இமாம் அல்பானி
மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

 

அரபி மூலம்:

هل يرى المرء ذنوبه في الآخرة حتى لو تاب منها؟

السؤال:
سألت بنفسي فضيلته قائلا : شيخنا الفاضل! السلام عليكم ورحمة الله وبركاته لقد أهمني معنى قوله تعالى “ومن يعمل مثقال ذرة شرا يره” وأصابني قلق وخوف أن يرى المرء ذنوبه يوم القيامة فيستاء ويفضح ، فهل لا بد أن يراها حتى لو تاب منها؟

الجواب :
قال لي فضيلته ما معناه “لا يراها… إن الإنسان إذا تاب من ذنبه ومحى الله عنه هذا الذنب فلا يراه يوم القيامة. إنما الذنب الذي يراه هو الذي لم يتب منه”

المفتي : العلامة ناصر الدين الألباني رحمه الله
السائل : تلميذه الدكتور أبو إبراهيم أحمد بن نصر الله صبري

இபாழிய்யாக்கள் என்போர் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது ... Read more

ஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா?

கேள்வி: ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா? பதில்:புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும். ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், ... Read more

அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ?

மொழிப்பெயர்ப்பு: முஹம்மது ரித்வான், அபூ sஸாலிஹ் கேள்வி: “அல்லாஹ்வினுடைய தூதரே ! எங்களுக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று கேட்கலாமா ? பதில்:ஷைய்ஃக் உஸ்மான் அல்-ஃகமீஸ் (ஹ) கூறிகின்றார்கள். கேட்கலாம் நபி (صلى الله عليه وسلم), ஆனால் அவர்கள் உயிரோடு இருக்கும்போது. நபி (صلى الله عليه وسلم) அவர்களுடன் வாழ்ந்தவர்கள் சிபாரிசு செய்ய கேட்டிருக்கின்றார்கள். ஆனால் இப்போது நபி (صلى الله عليه و سلم) அவர்களிடம் சிபாரிசு கேட்கக்கூடாது. காரணம் நபி (صلى الله ... Read more