11.சத்தியத்தை நோக்கிய அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன?

கேள்வி: தற்போது அழைப்பு பணியை மேற்கொள்ளும் கூட்டமைப்புகள் அதிகமாகக் காணப்படுவதோடு அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்பாளர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். ஆனாலும் அந்த அழைப்புப்பணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைவாகவே காணப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? பதில்: முதலாவதாக, அழைப்புப் பணியிலும் அதுவல்லாத ஏனைய விடயங்களிலும் அதிகமான கூட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்வதன்பால் நாம் மக்களைத் தூண்ட மாட்டோம். அதற்கு மாறாக அல்லாஹ்வின்பால் அறிவுடன் அழைக்கும் ஒரு கூட்டமைப்பையே நாம் விரும்புகிறோம். அதிகமான கூட்டமைப்புகளும், வழிமுறைகளும் நமக்கு மத்தியில் தோல்வியையும், ... Read more

நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா?

கேள்வி: 10.நாம் எச்சரித்துக் கொண்டிருக்கின்ற (வழிகெட்ட) நபர்களின் நலவுகளை மக்களுக்குக் கூறிக் காட்டுவது கட்டாயமாகுமா? பதில்:-   (( அவர்களின் நலவுகளை மக்களுக்கு நீ கூறிக் காட்டுவது அவர்களை பின்பற்றுமாறு அம்மக்களை அழைத்துக் கொண்டிருக்கின்றாய் என்பதே அர்த்தமாகும். அவர்களின் நலவுகளை நீ கூறிக்காட்ட வேண்டாம். அவர்களிடம் உள்ள பிழைகளை மாத்திரம் கூறிவிடு. அவர்களின் நிலமைகளை தூய்மைப்படுத்துவது உனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. மாறாக அவர்களிடம் உள்ள பிழைகளை தெளிவுபடுத்துவதே உனது பொறுப்பாகும். (அவ்வாறு நீ செய்யும் பட்சத்தில்) அவர்கள் ... Read more

9️⃣ பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது?

கேள்வி: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை கேட்பதும் கூடுமா? இதன் சரியான கருத்து யாது? பதில்: பித்அத் வாதிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதும், அவர்களின் ஆடியோப் பதிவுகளை செவிமடுப்பதும் ஆகுமாக மாட்டாது. ஆனால், அவர்களின் வழிகேட்டை தெளிவுபடுத்தி அவர்களின் (கருத்துகளுக்கு) மறுப்புக் கூற விரும்பும் மார்க்க விடயங்களில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களுக்கு வாசிக்க முடியும். ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்களும், அறிவைக் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அவர்களின் புத்தகங்களை வாசிக்கக் ... Read more

பாவி,பித்அத்-வாதி இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்?

கேள்வி: இவர்கள் இருவரிலும் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் யார்? பாவத்தில் ஈடுபடும் பாவிகளா? அல்லது மார்க்கத்தில் புதுப் புது விடயங்களை உருவாக்கும் பித்அத்வாதிகளா? பதில்: பித்அத் செய்பவர்களே கடுமையாக தண்டிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், பித்அத் என்பது பாவத்தை விட மிகக் கடுமையானதாகவும், ஷைத்தானுக்கு மிக விருப்பமானதாகவும் இருக்கிறது. ஏனெனில் பாவம் செய்பவர்கள் தனது (பாவத்தை நினைத்து) அல்லாஹ்விடம் பாவமீட்சியில் ஈடுபடுபவர்கள். அத்துடன் தான் ஒரு பாவி என்பதையும் அவர்கள் அறிந்துள்ளார்கள். (அதற்கு மாறாக) பித்அத் செய்பவர் ... Read more

அழைப்புப் பணியை மேற்கொள்வதற்கு முன் மார்க்க அறிவை கற்பதில் கவனம் செலுத்துவோம்

கேள்வி: இவ்விரண்டிலும் எது மிகவும் சிறப்புக்குரியதாகும்?முதலில் மார்க்க அறிவை தேடுவதா? அல்லது அழைப்புப் பணியை மேற்கொள்வதா? பதில்:- முதலில் மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு மனிதனுக்கு மார்க்க அறிவு இல்லாவிட்டால் அவனுக்கு இந்த அழைப்பு பணியை (சிறப்பாக) மேற்கொள்ள முடியாமல் போய்விடும். (மார்க்க அறிவு இல்லாத நிலையில்) ஒருவன் அழைப்புப் பணியில் ஈடுபட்டால் அவனின் மூலம் அதிகமான தவறுகள் ஏற்படும். அழைப்புப் பணியில் ஈடுபடுவதற்கு முன் மார்க்கத்தை கற்று (தெளிவு பெற்றுக் கொள்வது) ... Read more

நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா?

கேள்வி: நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்வது கட்டாயமாகுமா? பதில்:- ஆம், நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான வழிமுறைகளை (விட்டும் மக்களை) எச்சரிக்கை செய்வது நம் மீது கடமையாகும். இது, அல்லாஹ்வுடனும், அவனுடைய வேதமான அல்குர்ஆனுடனும், அவனுடைய தூதருடனும், முஸ்லிமான தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடனும் மனத்தூய்மையாக நடந்து கொள்வதில் உள்ளதாகும். கெட்டவர்களை விட்டும் மக்களை நாம் எச்சரிக்கை செய்வதோடு, இவ்விடயங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் நாம் அவர்களுக்கு ... Read more

தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா??

கேள்வி: தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா? பதில்:- ஆம், இஸ்லாத்தின் பால் தம்மை இணைத்துக் கொண்ட எந்தவொரு கூட்டத்தினராவது, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அழைப்புப் பணியிலோ அல்லது கொள்கையிலோ அல்லது ஈமானின் அடிப்படை அம்சங்களின் ஒன்றிலோ மாற்றம் செய்வார்களாயின் அந்த வழிகெட்ட கூட்டத்தினுள் அவர்கள் நுழைந்து விடுவார்கள். மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு (மறுமையில்) இழிவும், தண்டனையும் கிடைக்கும். ... Read more

அகீதாவிற்கும் மன்ஹஜ்ஜிற்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி: அகீதா எனும் “கொள்கை கோட்பாடிற்கும்”, மன்ஹஜ் எனும் “வழிமுறைக்கும்” இடையே உள்ள வித்தியாசம் என்ன?? பதில்: மன்ஹஜ் என்பது அகீதாவை விட அதிக கருத்தை பொதிந்துள்ள பொதுவான ஒரு வார்த்தையாகும். எனவே, (ஒரு முஸ்லிமின்) கொள்கை கோட்பாடிலும், பண்புகளிலும், கொடுக்கல் வாங்கல் உற்பட அவனது வாழ்வின் எல்லா பகுதிகளிலும் “மன்ஹஜ்” எனும் வழிமுறை காணப்படுகிறது. ஆகவே, ஒரு முஸ்லிம் நடந்து போகும் ஒவ்வொரு பாதைக்கும் “மன்ஹஜ்” என்று கூறப்படுகிறது. ஆனால், அகீதா என்பது ஈமானின் அடிப்படை ... Read more

அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…!

கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் இஸ்லாமிய கொள்கையை (அகீதாவை) கற்பதில் பாராமுகமாக இருக்கின்றனர். அத்துடன், வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வாலிபர்களுக்கு நீங்கள் என்ன உபதேசம் செய்ய விரும்புகிறீர்கள்?? பதில்: “எல்லா விடயங்களுக்கும் முன் முதலில் கொள்கையில் (அகீதாவில்) கவனம் செலுத்துமாறு வாலிபர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன். ஏனெனில், அதுவே (இஸ்லாத்தின்) அத்திவாரமாகும். அதன் மீது தான் அனைத்து அமல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. எனவே, அகீதா சரியானதாக இருப்பதோடு மனத்தூய்மையுடனும், நபி ... Read more

இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன?

கேள்வி: இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன? பதில்: “ஏகத்துவக் கொள்கைகளை அல்குர்ஆன், நபிமொழி மற்றும் நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (நபித்தோழர்கள், அவர்களை பின்தொடர்ந்த தாபிஈன்கள், அவர்களை பின்தொடர்ந்த தபஉத் தாபிஈன்கள்) விளக்கங்களிலிருந்தும் நாம் எடுக்க வேண்டும். (இதற்கு மாறாக) மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான கலாச்சாரத்திலிருந்தும், அங்கிருந்தும் இங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளிலிருந்து ஏகத்துவக் கொள்கைகளை எடுப்பதில் எவ்விதமான பயன்களையும் நாம் அடைந்து ... Read more