கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா?

கேள்வி : கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா? பதில் : நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்) மூலம் : أساس الباني ... Read more

தௌபா செய்த பாவங்களும் மறுமையில் காட்டப்படுமா?

புத்தக அறிமுகம்

நமது இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை தமது கைப்பட தொகுத்து தந்திருந்தாலும் சில அறிஞர்கள்  வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் அவர்களது மாணவர்களாலோ அல்லது பின்வந்தவர்களாலோ  தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் நவீன கால முஜத்தித்களில் ஒருவரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புகள் பத்வாக்கள் தொகுக்கப்பட்ட நூலே أساس الباني في تراث الألباني என்ற புத்தகமாகும்.

அவரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி அபூ இப்ராஹீம் அஹ்மத் இப்னு நஸ்ருல்லாஹ் ஸப்ரி என்பவரே தொகுத்துள்ளார்.

நான்கு பாகங்களையும் 2550 பக்கங்களையும் கொண்ட இந்நூலை ஆசிரியர் நன்கு ஒழுங்கு படுத்தி வாசிப்பவருக்கு   இலகுவான விதத்தில் வடிவமைத்துள்ளார்.

இந்த கிதாபில் மார்க்கத்தின் பல பகுதிகளுக்கான தீர்ப்புகள் பதியப்பட்டுள்ளன.
முதலாவது பாகத்தில் 83 பக்கங்கள் அகீதாப் பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :
“அனுவளவு தீமை செய்திருந்தாலும் அவர் (மறுமையில்) அதைக் கண்டு கொள்வார்” என்ற வசனம் என்னை கவலையடையச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனது பாவங்களை மறுமையில் மக்கள் மத்தியில் பார்த்துக் கவலைப்படுவாரே என்று சஞ்சலப்படுகிறேன். தௌபா செய்திருந்தாலும் இவ்வாறு காண்பானா?

பதில்:
மனிதன் தனது பாவத்தை விட்டும் தௌபா செய்து அல்லாஹ் அதனை அழித்திருந்தால் மறுமையில்அதைதக் காண மாட்டார். உலகில் தௌபா செய்யாத பாவத்தையே அவன் காண்பான்.

இமாம் அல்பானி
மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

 

அரபி மூலம்:

هل يرى المرء ذنوبه في الآخرة حتى لو تاب منها؟

السؤال:
سألت بنفسي فضيلته قائلا : شيخنا الفاضل! السلام عليكم ورحمة الله وبركاته لقد أهمني معنى قوله تعالى “ومن يعمل مثقال ذرة شرا يره” وأصابني قلق وخوف أن يرى المرء ذنوبه يوم القيامة فيستاء ويفضح ، فهل لا بد أن يراها حتى لو تاب منها؟

الجواب :
قال لي فضيلته ما معناه “لا يراها… إن الإنسان إذا تاب من ذنبه ومحى الله عنه هذا الذنب فلا يراه يوم القيامة. إنما الذنب الذي يراه هو الذي لم يتب منه”

المفتي : العلامة ناصر الدين الألباني رحمه الله
السائل : تلميذه الدكتور أبو إبراهيم أحمد بن نصر الله صبري

ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா?

கேள்வி:ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா? பதில்:அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இது விடயத்தில் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகளில் தொழுவதே மிகச் சிறந்தாகும் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஜும்ஆ தினத்தில் இரண்டு பாங்கு சொல்லுதல், இதுபோன்ற சுன்னாவுக்கு முரணான செயல்கள் நடைபெறக்கூடிய அல்லது இறை நிராகரிப்பை ஏற்படுத்தாத பித்அத் நடைபெறக்கூடிய பள்ளியில் தொழுவது கட்டாயமாகும். ஏனெனில் ... Read more

ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன? உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன?

கேள்வி : ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன? உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… சுருக்கமான பதில்: ஷரீஆ என்றால் மார்க்கம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல். ஃபிக்ஹ் என்ற வார்த்தை விரிவான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட (அமல்) செயல் சார்ந்த ஷரீயத் கிளை, உட் பிரிவு சட்டங்களைக் கொண்ட ஒரு கல்விக்கு ... Read more

மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா?

بسم الله الرحمن الرحيم கேள்வி: மண்ணறைகளின் மீது மரம், செடி முளைப்பது நல்லடியார்களின் அடையாளமா? பதில்: (அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…) அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மண்ணறைகளின் மீது மரம், புற்கள் முளைப்பது அதில் இருப்பவர் நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மாறாக அது பிழையான எண்ணமாகும். மரங்கள் நல்லவர்களின் மண்ணறைகளின் மீதும் தீயவர்களின் மண்ணறைகளின் மீதும் முளைக்கின்றன. ... Read more

இபாழிய்யாக்கள் என்போர் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது ... Read more

ஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா?

கேள்வி: ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா? பதில்:புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும். ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், ... Read more

இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ?

கேள்வி: இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மா(ஒருமித்த கருத்து)வை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன ? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இஜ்மா என்பது இஸ்லாமிய மூலதாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இஜ்மாவிற்கு பல வரைவிலக்கணங்கள் அறியப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்பட்ட வரைவிலக்கணம் இமாம் சுப்கீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பிறகு ... Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

கேள்வி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்…. அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், ... Read more

வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா?

கேள்வி: வெள்ளிக்கிழமை அன்று சூரா கஹ்ஃப் ஓதுவது ஸுன்னத்தா? பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு பற்றி அதிகமான ஹதீஸ்கள் வந்துள்ளன அதேபோன்று அதை வெள்ளிக்கிழமையில் ஓதுவதன் சிறப்பு பற்றியும் அதிகம் ஹதீஸ்களில் வந்துள்ளன அவைகளில் சிலது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாகவும் இன்னும் சிலது பலவீனமான ஹதீஸ்களாகவும் உள்ளன. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி தன்னுடைய நூலில் ‘சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதன் சிறப்பு’ என்று தலைப்பு இட்டு பின்வரும் ஹதீஸை கொண்டு வந்துள்ளார் பராஉ(رضي الله عنه) அறிவித்தார்: ... Read more