ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் – ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி 

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி  அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

  بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣8️⃣ : ரமழான் மாதத்தின்போது, மாதவிடாய்/ பிரசவத்துடக்கு ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை தொட்டு ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா.? பதில் : அவ்வாறு ஒதுவதற்கு எதிரான ஆதாரங்கள் எதையும் நான் அறியவில்லை. لا يمس القرآن إلا طاهر “… தூய்மையானவர்களை தவிர வேறெவரும் குர்ஆனை தொடமாட்டார்கள்”. -என்ற ஹதீஸானது ‘முர்ஸல்’ வகையை சேர்ந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்னபிற அறிவிப்புகளை ... Read more

ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

___﷽_____   கேள்வி: ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?   பதில்: 🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:   ▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.   ▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.   ▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.   ▪️ அவர்கள் ... Read more

ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா?

ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா? «إذا انتصف شعبان فلا تصوموا» أبو داود (٢٣٣٧) واللفظ له، والترمذي (٧٣٨)، وابن ماجه (١٦٥١) “ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்ற ஒரு ஹதீஸ் அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜஹ் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமான ஒரு ஹதீஸ் என்பதை ஆரம்பகால ஹதீஸ் துறை வல்லுனர்களான அபூ சுர்அஹ் அர்-றாஸி, இப்னு மஈன், ... Read more

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்

ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்   ஷஃபான் மாதத்தின் 15வது இரவுக்கு அல்லது பகலுக்கு எந்த ஒரு சிறப்பும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை.   ஒரு ஹதீஸில், “அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் இணை வைப்பவரையும் மற்றவர்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருப்பவரையும் தவிரவுள்ள தன்னுடைய படைப்புகள் அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகள் பலவீனமாக இருந்தாலும், இது பல வழிகளாலும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதனை சில அறிஞர்கள் ... Read more

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்கள்   பராத் தினமென்று அழைக்கப்படும் ஷஃபானின் 15ம் தினத்தில் விஷேட நோன்பு நோற்று, இரவு நேரங்களை விஷேட வணக்க வழிபாடுகள் மூலம் உயிர்ப்பிக்கலாம், மார்க்கத்திலும் ஷாபி மத்கபிலும் அதற்கு ஆதாரமுண்டு, வஹ்ஹாபிகள் என்போர்தான் அதனை மறுக்கின்றனர் என சிலர் பிரச்சாரம் செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.   ஆனால் உண்மையில் ஷாபி மத்கபில் கூட இவற்றுக்கு அனுமதி கிடையாது. முக்கிய அறிஞர் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் ... Read more

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா?

பராஅத் இரவு தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களா? – ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.   அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! ... Read more

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம் | ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி |   அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும்.   “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் ... Read more

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 06 | இறுதி தொடர் |     -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து… மாதவிடாய் வராது தடுக்கின்ற அல்லது அதனை வரவழைக்கத்தக்க, அல்லது கருவுறாது தடுக்கக்கூடிய அல்லது கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடியவற்றை பயன்படுத்தல்:   ஒரு பெண் மாதவிடாயை தடுப்பதற்குரிய மாத்திரை அல்லது அது போன்றவற்றை பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் பயன்படுத்த அனுமதியுள்ளது. முதலாவது : பெண்ணுக்கு ... Read more

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 05 |

பெண்கள் [மாதவிடாய்] சுத்தம் தொடர்பான முழுமையான சட்டங்கள் | தொடர் – 05 |   -அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உஸைமின் [ரஹிமஹுல்லாஹ்] அவர்களின் புத்தகத்தில் இருந்து…   நிபாஸும் (பேறுகால உதிரப்போக்கும்) அதன் சட்டங்களும்: நிபாஸ் என்பது, பேறு காலத்தின் போதோ, பிரசவத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களளுக்கு முன்போ அல்லது பின்போ பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து வலியுடன் வெளியாகும் இரத்தத்தைக் குறிக்கும். ஷெய்ஹூல் இஸ்லாம் இப்னு தைமியா கூறுகிறார்: ஒரு பெண் பிரசவ வேதனை ... Read more