“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?   பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.   முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது.   அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.   “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் ... Read more

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? (ஆய்வுக் கட்டுரை) | அஷ்ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி |   மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களை நாம் நேர்வழியில் உறுதியாக இருந்து, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவனது மார்க்கத்தை பின்பற்றுவதற்காக அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்களை மனிதர்களுக்கான முன்மாதிரியாகவும் ஆக்கினான்.   அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய இபாதத்களில் தலையாயது தொழுகையாகும் தொழுகையை தவறாமல் கடைபிடிக்குமாறு பல் வேறு வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் (24:56).   அல்குர்ஆனில் ... Read more

மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா?

மாதவிடாய்ப் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்லல்: பெண்கள் மாதவிடாய் காலத்தில் மார்க்கச் சொற்பொழிவு, அல்குர்ஆன் வகுப்பு போன்ற தேவைகளுக்காக பள்ளிவாசலுக்கு செல்வது தொடர்பில் இஸ்லாமிய அறிஞர்களிடையே இரு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. பல அறிஞர்கள் அவ்வாறு செல்வது கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அதே வேளை, மற்றும் சில அறிஞர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல முடியும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.   இவ்விரு நிலைப்பாடுகளுள் இரண்டாவது நிலைப்பாடே ஆதாரங்களுடன் கூடிய வலுவான நிலைப்பாடாக தெரிகிறது. இதற்கான நியாயங்கள் ... Read more

ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன?

ஈத் நாள் வெள்ளிக்கிழமை அன்று வந்தால், ஈத் தொழுகையை ஒருவர் இமாமுடன் தொழுதிருந்தால், அன்றைய தினம் அவர் மீது ஜும்ஆ தொழுவது கடமை அல்ல, சுன்னத் மட்டும் தான். அவர் ஜும்ஆ தொழுகைக்கு வரவில்லை என்றால் அவர் மீது ளுஹர் தொழுவது கடமை. இச்சட்டம் இமாம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான். இமாமைப் பொறுத்தவரை அவர், ஜும்மா தோழ வேண்டும் முஸ்லிம்களுக்கு ஜுமுஆ தொழுகை நடத்துவது அவர் மீது கடமை. மக்கள் அனைவரும் முற்றிலுமாக ஜும்ஆ தொழுகையை விட்டு ... Read more

இந்த பெண்ணின் தந்தை அவளுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார்

நான் 31 வயதான ஒரு ஆசிரியை, 1996இல் இருந்து நான் ஆசிரியை பணியில் இருக்கிறேன், 1997இல் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர் என்னை பெண் கேட்டு வந்தார், நான் “எனது மூத்த சகோதரியின் திருமணம் முடியும் வரை காத்திருங்கள்: என்று கூறினேன். எனது சகோதரிக்கு 2000ஆம் ஆண்டு திருமணம் முடிந்த பின் அவர் எனது வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். எனது தாய் அவரை ஏற்ற போதும் எனது தந்தை மறுத்துவிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், நான் ... Read more

திருமணம், திருமண நிச்சயத்தில் மோதிரங்கள், தாலி போன்றவற்றை அணிவது, அதற்கு விசேட சக்தி உள்ளதாக நம்புவது

திருமணத்தில்/திருமண நிச்சயத்தில் அணியப்படும் மோதிரங்களைப் பொறுத்தவரை, இது முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் ஒன்றல்ல. மேலும் இந்த மோதிரங்கள் கணவன்-மனைவி மத்தியில் உறவை மேம்படுத்தும், அதை கழட்டினால், அல்லது அணியாவிட்டால் அது கணவன்-மனைவி மத்தியிலான உறவை பாதிக்கும் என்று நம்பினால் அது ஒரு வகை ஷிர்க் மற்றும் ஜாஹிலி (மடமை) சிந்தனை. மேற்குறிப்பிடப்பட்ட காரணங்களினால் இது போன்ற திருமண மோதிரங்களை அணிவது அனுமதிக்கப்பட்டது அல்ல. அதற்கான காரங்கங்கள்: முதலாவதாக, அது நன்மை இல்லாத ஏதும் மக்களை பின்பற்றுவதாகும். இது மாற்று ... Read more

ரமலானுக்கு தயராவதற்கான 10 குறிப்புகள்

  நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்? இந்த புனித மாதத்தில் செய்யும் அமல்களிலேயே மிகச் சிறந்த அமல்கள் என்ன? பதிலின் சுருக்கம் ரமலானுக்காக தயராகவது 1) உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது 2) துஆ(பிராத்தனை) செய்வது 3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது 4) விடுபட்ட நிலுவையில் உள்ள கடமையான நோன்புகளை நோற்பது 5) மார்க்க அறிவை தேடுவது 6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய  பணிகளையு விரைந்து முடிப்பது. 7) குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து ... Read more

முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவார்களா?

முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவார்களா?   கேள்வி: பிறந்தநாள் கொண்டாடுவதற்கு என்ன ஆதாரம் உண்டு, இஸ்லாத்தில் அதற்கு அனுமதி உள்ளதா?   பதில்:   அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.   குர்ஆன் மற்றும் சுன்னாவில் உள்ள ஆதாரங்கள், பிறந்தநாட்களைக் கொண்டாடுவது ஒரு வகையான பித்அத் அல்லது மார்க்கத்தில் புதுமை என்றும்; இதற்கு தூய மார்க்க சட்டத்தில் (ஷரீஅத்தில்) எந்த அடிப்படையும் இல்லை என்பதையும் குறிக்கிறது.   பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான அழைப்புகளை ஏற்பதற்கும் அனுமதி இல்லை, ஏனெனில் இது பித்அத்தை ஆதரிப்பதும் ... Read more

குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது

கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக ... Read more

வானியல் கணக்குகளை பின்பற்றாமல் பிறை பார்ப்பது நபிவழியாகும்

கேள்வி: ரமழான் மற்றும், ஈதுல் பித்ர் தொடங்கும் நேரம் குறித்து முஸ்லிம் அறிஞர்களிடையே பெரும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் பிறை பார்த்தவுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில் ஹதீஸ்களில், பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; என்று வந்துள்ளது. மற்றவர்கள், வானியல் நிபுணர்களின் கணக்குகளை நம்பி, இந்த விஞ்ஞானிகள் வானியல் அறிவியலில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சந்திர மாதங்கள் எப்போது தொடங்குகிறது என்பதை அவர்களால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் யார் ... Read more