முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள்

முஹர்ரம், ஆஷூரா நோன்பு அறிய வேண்டிய தகவல்கள் அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். அவனுடைய சாந்தியும் சமாதானமும் இறுதித்தூதர் முஹம்மத் ( ﷺ ) அவர்கள் மீதும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற நம் அனைவர் மீதும் என்னென்றும் நின்று நிலவட்டுமாக !   முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷூரா நோன்பு குறித்த சுருக்கமான தொகுப்பு. இக்கட்டுரை முஹம்மத் ஸாலிஹ் அல் முனஜ்ஜித் (ஹஃபிழஹுழ்ழாஹ்) அவர்களின் சிறு ... Read more

உடலிலிருந்து ரத்தம் வெளியேறுவது வுழு-வினை முறிக்குமா?

பதிலின் சுருக்கம்: இரத்தம் வெளியாவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் இரத்தப்போக்கு ஒருவருடைய வுழூவை முறிக்காது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். பெண்ணுறுப்பைத் தவிர உடலின் வேறு எந்தப்பகுதியிலிருந்தும் இரத்தம் வெளியாவது ஒருவருடைய வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இரத்தம் வெளியாகுவது வுழூவை முறிக்காது என்பது அடிப்படைக் கொள்கை. வணக்கங்கள் வஹியின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், எனவே எந்தவொரு வணக்க வழிபாடும் இஸ்லாத்தில் சொல்லப்பட்டதாக ஆதாரங்கள் ... Read more

நேர்ச்சை

நேர்ச்சை தொடர்பான மார்க்க விளக்கங்கள் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.   நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ... Read more

கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?

கேள்வி:   கடமையான தொழுகையை நிறைவேற்றிய பின் திக்ர் செய்துவிட்டு கையேந்தி அல்லாஹ்விடம் துஆ கேட்பது பித்அத் ஆகுமா ?   பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். துஆ: ஒரு இபாதத் ஆகும். துஆ என்பது ஒரு வழிபாட்டுச் செயல் என்பது அடிப்படை, மேலும் ஒவ்வொரு வழிபாட்டுச் செயலும் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (சில குறிபிட்ட நேரத்தில்) துஆவின் போது கைகளை உயர்த்துதல்: துஆ செய்யும் போது கைகளை உயர்த்துதல் ... Read more

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் – ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி 

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் வழிமுறையும் ஷைய்க். M. பஷீர் ஃபிர்தவ்ஸி  அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள அவனது கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான் ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம் அதே போன்று தான் ஃபர்ளான ரமளான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் ... Read more

பெண்களும் அவர்களுக்கான நோன்பின் சட்டங்களும்

பெண்களும் அவர்களுக்கான நோன்பின் சட்டங்களும் – எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன். மாத, பிரசவ, தீட்டுடைய பெண்கள்: ஹைல், நிபாஸ் எனப்படும் ... Read more

ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள்

ரமழான் மாதத்தில் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்க்கு 1350 க்கும் மேலான சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன.   ரமழான் மாதம் பரக்கத்துக்களும் நன்மைகளும் பொருந்திய மாதம்.   அனைத்து மாதங்களை விட இந்த மாதத்திலேயே பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் நேரங்கள் அதிகம், மேலும் நன்மைகளை பன்மடங்குகளாக்கும் காரணங்களும் அதிகம். அதன் விளைவாகவே முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் 1350 யும் தாண்டியது. இது ஒரு மிகப்பெரிய அருளாகும். இதனாலேயே முஃமீன்கள் ஆனந்தமடைகிறார்கள்,அவர்களின் உள்ளங்களும் அதனால் மகிழ்ச்சியடை கின்றது.   அச்சந்தர்ப்பங்களை குறிப்பிட ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

  بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 2️⃣8️⃣ : ரமழான் மாதத்தின்போது, மாதவிடாய்/ பிரசவத்துடக்கு ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை தொட்டு ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா.? பதில் : அவ்வாறு ஒதுவதற்கு எதிரான ஆதாரங்கள் எதையும் நான் அறியவில்லை. لا يمس القرآن إلا طاهر “… தூய்மையானவர்களை தவிர வேறெவரும் குர்ஆனை தொடமாட்டார்கள்”. -என்ற ஹதீஸானது ‘முர்ஸல்’ வகையை சேர்ந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இன்னபிற அறிவிப்புகளை ... Read more

ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

___﷽_____   கேள்வி: ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?   பதில்: 🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:   ▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.   ▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.   ▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.   ▪️ அவர்கள் ... Read more

ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா?

ஷஃபான் மாதம் நடுப்பகுதிக்கு பிறகு நோன்பு நோற்பது தடையா? «إذا انتصف شعبان فلا تصوموا» أبو داود (٢٣٣٧) واللفظ له، والترمذي (٧٣٨)، وابن ماجه (١٦٥١) “ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்ற ஒரு ஹதீஸ் அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜஹ் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமான ஒரு ஹதீஸ் என்பதை ஆரம்பகால ஹதீஸ் துறை வல்லுனர்களான அபூ சுர்அஹ் அர்-றாஸி, இப்னு மஈன், ... Read more