ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

கேள்வி: ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஷீஆக்கள் பல குழுக்கள்.அவர்கள் ஒரு குழு கிடையாது.அவர்கள் 22 குழுக்கள் என்று ஸிஹ்ரிஸ்தானி என்பவர் கூறியுள்ளார். அவர்கள் பல தரப்படுகின்றனர் .அவர்களில் சிலர்களின் பித்அத் அவர்களை காபிராக மாற்றும்.இன்னும் சில கூட்டத்தினர்களின் பித்அத் அவர்களை காபிராக்காது. சுருக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் பித்அத் வாதிகள். இவர்களில் மிகவும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் ... Read more

ஏகத்துவத்தை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லாமல் மரணிக்கும் முஸ்லீம்களின் மறுமை நிலை என்ன?

கேள்வி: ஷைக் அவர்களே! சிலர் ஏகத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்றனர். ஸூபித்துவத்தை இபாதத் என்று நினைத்து அவர்களும் ஸூபிகளாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் எழுத வாசிக்கத் தெரியாததால் ஏற்பட்ட அறியாமையாக இருக்கலாம். அல்லது மார்க்க அறிவற்ற ஸூபி ஆலிம்கள் போன்றவர்கள் அழைப்பாளர்களாக இருந்திருக்கலாம். இவ்வாறான நிலையில் மரணித்த முஸ்லிம்களின் நிலை என்ன? அழைப்புப்பணி பற்றியும், உண்மையான அழைப்புப்பணி சென்றடையாமல் மரணிக்கும் மனிதரைப் பற்றி பேசும் போது, அவர்களுக்கு பிரத்தியேகமான நடைமுறை இருக்கிறது என்று கூறினீர்கள். இது பற்றி உங்கள் ... Read more

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி : இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?   பதில் : ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால் ... Read more

முஸ்லிம் அல்லாத மக்களின் ஜனாஸாவினை மதசடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய முடியுமா?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவதாக ஒரு காபிர் நோய்வாய்ப் பட்டால் அவரிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அவரை அழைப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்க ஒரு விடயமாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணத் தருவாயில் இருக்கும்போது அவரிடம் சென்று கலிமாவை மொழியும் படி ஏவினார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்த ... Read more

ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்கலாமா

ஷேக் பின் பாஸ்: ஆம், ஜனாஸா தொழுகையை ஆண்கள், பெண்கள், அனைவரும் தொழலாம். பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டிலோ, அல்லது மஸ்ஜிதிலோ தொழலாம். இவற்றில் யாதொரு தவறுமில்லை. ஆயிஷா   رضي الله عنها மற்றும், சில பெண்கள் சஅது இப்னு அபீ வக்காஸ் رضي الله عنه அவா்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர். ஆகையால் ஜனாஸா தொழுகையை அனைவரும் தொழலாம், ஆனால் கப்றுகளுக்கு செல்வது, ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வது, கப்ருஸ்தானுக்கு செல்வது, ஆகியவை பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ... Read more

ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா?

கேள்வி:ஜும்ஆவில் உறங்குபவரை எழுப்புபவர் வீணான காரியத்தை செய்தவராக கருதப்படுவாரா? பதில்: செயலால் அவர்களை எழுப்ப முடியும். பேசுவதன் மூலம் அவர்களை எழுப்பக்கூடாது. ஏனெனில் குத்பா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசுவது கூடாது. ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய். (ஸஹீஹ் புகாரி : 934) அவர் நன்மையான ஒரு விடயத்தை ஏவக்கூடியவராக இருந்தும் அவரை நபியவர்கள் வீணான காரியத்தைச் ... Read more

ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுகின்றனரே இது அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது “சில நாடுகளில் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் தொழுகையாளிகளை முன்னோக்கி சில உபதேசங்களை கூறுவார் இது அனுமதிக்கப்பட்டதா? பதில்: இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது இப்படியான செயல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவருடைய காலத்தில் இருக்கவில்லை.நபியவர்கள் பள்ளிக்கு நுழைந்தால் மிம்பரை நாடி முஅத்தின் அதானை கூறிமுடிக்கும் வரை அதிலேயே உட்கார்ந்திருப்பார்கள் .பின்பு உரையை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்னர் எவ்வித உபதேசத்தையும் அவர் ... Read more

சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது ... Read more