அல்ஹய், அல்கய்யூம் – அஸ்மாஉல் ஹுஸ்னா

ஷேக் அப்துர்ரஸ்ஸாக் அல்பத்ர் கூருகிறார்: அல்லாஹ்வின் இவ்விரு பெயர்களும் குர்ஆனில் மூன்று இடங்களில் சேர்த்து வந்துள்ளது. 1) ஆயதுல் குரஸியில்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ   அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. அவன் அல் ஹய், அல்கய்யூம். அல் பகரா: 266 2) சூரா ஆலி இமறானின் ஆரம்பம்: ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ 2. அல்லாஹ், அவனைத் தவிர ... Read more

அல்பாஸித், அல் காபித் – அஸ்மாஉல் ஹுஸ்னா

அல்பாஸித், அல்காபித் – القابض ، الباسط ஷேக் அப்துர்ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பத்ர் கூறுகிறார்: இவ்விரு பெயர்களும் நபி صلى الله عليه وسلم அவா்களின் சுன்னாஹ்வில் வந்துள்ளது. அனஸ் இப்னு மாலிக் رضي الله عنه அறிவிக்கிறார்கள்: “நபி صلى الله عليه وسلم அவா்களின் காலத்தில் ஒரு முறை, பொருள்களின் விலைவாசி அதிகரித்தது. சஹாபாக்கள் ‘ யா ரசூலல்லாஹ் நீங்கள் விலைகளை நிர்ணயிக்கலாமே!’ என்று கேட்டனர். அதற்கவர்கள் ‘அல்லாஹ்தான் அல்காலிக் ... Read more

துஆ ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள். நிலைகள், மற்றும் இடங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ லைலதுல் கத்ர் இரவு இரவின்மூன்றாம் பகுதி. கடமையானதொழுகைகளுக்குப்பின், அதான்- இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம். ஒவ்வொரு இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரம். பாங்குசொல்லப்படும் போது. மழை இறங்கும்போது. அல்லாஹ்வின் பாதையில் வீரர்கள் போரைத் துவங்கும் போது. வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம், (அந்த நேரம் மாலை நேரங்களின் இறுதி நேரமாகும் என்று பெறும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையுடைய ... Read more

வலீமா விருந்து கொடுப்பது யார் மீது கடமை ?

கேள்வி: திருமண ஏற்பாடுகளையும், வலீமா விருந்தும் யார் செய்ய வேண்டும்? மணமகன் வீட்டாரா அல்லது மணமகள் வீட்டாரா ? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே. அடிப்படையாக, வலீமா விருந்தை மணமகன் தான் கொடுக்கவேண்டும். அவர் தான் அதற்க்கு கட்டளை இடப்பட்டிருக்கிறார், புகாரி மற்றும் முஸ்லிமில் வரும் ஹதீஸ் இதற்க்கு ஆதாரம். நபி صلى الله عليه وسلم அப்துர்ரஹ்மான் இப்ன் அவ்ஃபிடம் رضي الله عنه : பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை/வளத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ... Read more

சூரா அல் இஃக்லாஸ் விளக்கம் – இமாம் அஸ் ஸஅதி

  قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே! அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி  கூறுகிறார்கள்: “(நபியே!) நீர் கூறுவீராக:” உறுதியுடனும், நம்பிக்கையுடனும், அதன் அர்த்தங்களை உணர்த்தும் நபியே நீர் ... Read more

சூரா அல்-மஸத் விளக்கம் – இமாம் அஸ்-ஸஅதி

 {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ * مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ * سَيَصْلَى  نَارًا ذَاتَ لَهَبٍ * وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ * فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} . அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.   அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.   விறகு சுமப்பவளான அவனுடைய ... Read more

பழைய தங்கத்தை புது தங்கத்திற்கு பகரமாக மாற்றி(exchange-எக்ஸ்சேஞ் ), மீதி தொகையை பணமாக கொடுப்பது – ஹலால் அல்ல

கேள்வி: நான் என்னிடம் உள்ள பழைய தங்கத்தை, புது தங்கத்திற்கு பகரமாக மாற்றிவிட்டு, மீதி தொகையை ரொக்கமாக கொடுப்பது அனுமதிக்கப்பட்டதா? பதில்: எல்லாப்புகழும் இறைவனுக்கே: உங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தை கொடுத்துவிட்டு புது தங்கத்தை வாங்கி, மீத தொகையை ரொக்கமாக கொடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல. இது ஹராம் ஆகும். இதற்க்கு ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிமிலும், ஷஹீஹ் அல் புகாரியிலும், மற்ற ஹதீஸ் கிரந்தங்களிலும் வரும் ஹதீஸ்: 3248. அபூசயீத் அல்குத்ரீ (رضي الله عنه ) அவர்கள் ... Read more

சூரா அந்-நஸ்ர் விளக்கம் – இமாம் ஆஸ்-ஸஅதி

 இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்ஸஅதி கூறுகிரார்: இந்த கண்ணியமிகு சூராவில்  அல்லாஹ்வின் புறத்திலிருந்து தன் தூதருக்கு صلى الله عليه وسلام  நற்செய்தியும், அது  நடந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் எனும் கட்டளையும், அதற்க்கு பின் என்ன நடக்கும் எனும்  குறிப்பும் உள்ளது . நற்செய்தி: அல்லாஹ்வின் உதவியும், மக்கா வெற்றியும், மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும், மனிதர்களில் அல்லாஹ்வின் தூதருடைய صلى الله عليه وسلام  எதிரிகளாய் இருந்த பலர் பின்னர் அவரின் உதவியாளர்களாகவும் , ... Read more

சூரா அல்ஃபலக் விளக்கம் – இமாம் அல்-ஸஅதி

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ   (நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் ஃபலக்கின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன். இமாம் அப்துர்ரஹ்மான் இப்ன் நாஸிர் அஸ்-ஸஅதி கூறுகிறார்கள்: அதாவது, நபியே நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடும் வகையில் கூறுங்கள், “ஃபலக்கின் இறைவனிடத்தில், நான் பாதுகாப்பும் காவலும் தேடுகிறேன்”. ஃபலக்கின் இறைவன் என்பதின் அர்த்தம், விதைகளையும், அதிகாலையையும் பிளப்பவாவன் என்பதாகும். أي: {قل} متعوذًا {أَعُوذُ} أي: ألجأ وألوذ، وأعتصم {بِرَبِّ الْفَلَقِ} أي: فالق الحب ... Read more