ஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன?

ஸுஹுத் – زهد- என்ற அறபுப் பதத்திற்கு தமிழில் துறவறம், பற்றற்ற தன்மை மற்றும் சன்னியாசம் போன்ற அர்த்தங்களை தருகிறது. ஏழ்மையான வாழ்வை இஸ்லாம் வெறுக்கிறது. ஆனால் எளிமையான வாழ்வை இஸ்லாம் வரவேற்கின்றது. உலகை ஆளும் அரசனாலும், உலகமகா பணக்காரனாலும் எளிமையான வாழ்வு வாழ முடியும். நபிமார்கள் நல்லோர்கள் வாழ்ந்து காட்டிய அறநெறி வாழ்வும் இதுவாகும். இந்த எளிமையான வாழ்வமைப்பைத்தான் பற்றற்ற வாழ்வாக, வெற்றிக்கான வழியாக, பாதுகாப்பான மார்க்கமாக சன்மார்க்கம் அறிமுகப்படுத்துகிறது. பின்வரும் நபி போதனை அதற்கு ... Read more

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி : தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே? பதில் : முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது. ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம். பார்வை இழந்த ஒருவர் ... Read more

பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது?

கேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 43

ஹனபிய்யாக்கள் தண்ணீர் தேடுவதில் வரையரை வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காத போது தண்ணீர் அருகாமையில் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர் நானூறு அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும். அப்போது அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

ஷாபியாக்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தனக்கு தன்னைச்சுற்றி தண்ணீர் கிடைக்காது என்று உறுதி கொள்ளும் போது அவர் தண்ணீரை தேடாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் போது பயமில்லாத போது அல்லது தன்னுடைய பொருள் மீது பயமில்லாத போது அல்லது தன்னோடு வந்தவர் தன்னைவிட்டு பிரிந்து விடுவார் என்ற பயமில்லாத போது அவர் அரை ஃபர்ஸக் நடக்கவேண்டும். அல்லது ஆறாயிரம் அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் ஒருவர் அவர் வாகனத்தில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஓட்டினரிடம் வண்டியை தொழுகைக்காக நிறுத்தச் சொல்லவேண்டும். நிறுத்தினால் தொழுது கொள்ள வேண்டும்.

நிறுத்தவில்லையெனில்..
அப்போது தொழுகையின் நேரம் முடிவதற்குள் தனது சொந்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்று நம்பினால் அவர் தொழுகையை தாமதப்படுத்தில் தனது இடத்திற்கு சென்ற பின்பு தொழுகையை நிறைவேற்றலாம்.அல்லது தனது இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பு தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்று கருதினால் வாகனத்திற்குள்ளே சக்திக்கு உட்பட்டு நிற்குதல் ருகூவு செய்தல் ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை செய்து தொழுது கொள்ளவேண்டும்.

அல்லாஹ்தஆலா சொல்கிறான்:

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சகத்திக்கு மீறி சிறமப்படுத்தமாட்டான். பகரா 286.

அல்லாஹ்வை உங்கள் சக்திக்கு உட்பட்டு பயந்து கொள்ளுங்கள். தப்ôபூன் 16.

உங்கள் தந்தையரான இப்ராஹீமின் மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை. ஹஜ் 78.

நான் ஒன்றை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் முடிந்தளவிற்கு அதை செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நூல் : புகாரி முஸ்லிம்.

சிரமம் எளிதைக் கொண்டு வரும் என உசூல் ஃபிக்ஹ் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பயணி தன்னுடைய வாகனத்தில் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து கொள்வார். அல்லது தன்னோடு இருக்கும் சக பயணிகளிடம் கேட்பார். அல்லது முடிந்தால் வாகனத்திலிருந்து இறங்கி தண்ணீரை தேடுவார். கிடைக்கவில்லையெனில் தயம்மும் செய்து தொழுது கொள்வார்.

அல்லாஹ் மிக அறிந்தவன். (உலமாக்களின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான செய்திகள்.)

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

ஜனாஸா சட்டங்கள் – நோயாளியின்‌ கடமைகள்

மொழிபெயர்ப்பு : S. M. முஸ்தபா மவ்லானா ஜமாலி இமாம் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் (தல்கீஸ் அஹ்காம் அல்ஜனாயிஸ்) எனும் நூலில் நோயாளியின் கடமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்: 1. அல்லாஹ்வின்‌ தீர்ப்பை ஏற்பதும்‌, அவன்‌ தரும் சோதனையில்‌ பொறுமையாயிருப்பதும்‌, தன்‌ அதிபதியான அல்லாஹ்வின்‌ மீது நல்லெண்ணம்‌ வைப்பதும்‌ அவசியமாகும்‌. “முஃமினின் செயல்களைப்‌ பார்த்து வியப்படைகின்றேன்‌. அவனுடைய எல்லாச்‌ செயல்களும்‌ நன்மையே தருகின்றன. இது நம்பிக்கையாளரை (முஃமினை)த்‌ தவிர வேறு யாருக்கும்‌ கிடையாது. மகிழ்ச்சி ஏற்பட்டால்‌ ... Read more

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் தவிர்த்து வேறு கருத்துகள் உள்ளனவா?

குப்ர் என்பதற்கு நிராகரித்தல் என்று மட்டும் தான் கருத்தா அல்லது பெருமை, புறக்கணிப்பு, மறுத்தல் போன்ற கருத்துக்களும் இருக்கின்றனவா? பதில் : செயல் ரீதியான நிராகரிப்பு (குப்ர்), நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) என்று இரு பிரிவுகள் இருப்பதாக முன்னர் கூறியிருந்தோம். குப்ர் என்ற சொல்லுக்கு நிராகரிப்பு அல்லாத வேறு கருத்துக்களும் இருக்கின்றன. தொழுகையோடு தொடர்பு படுத்தி குப்ரை இரு வகைப்படுத்தலாம் 1. நம்பிக்கை சார்ந்த நிராகரிப்பு (குப்ர்) : தொழுகையை மறுத்து விடுபவர் காபிராகி விடுகிறான் ... Read more

இஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள்

ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது இஸ்திஜ்மார் என்றால் என்ன? மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா? தூய்மை விடயத்தில் சிறந்தது எது? பதில்: இஸ்திஜ்மார் என்பது மலம், சிறுநீர் கழித்த பின்பு முன்-பின் உறுப்புகளை, கல் அல்லது அது போன்றவற்றை கொண்டு தூய்மை செய்வதை குறிக்கும் சொல். இதற்காக டிஸ்யூ போபரும் பயன் படுத்தலாம், ஆனால், குறைந்தது மூன்று ... Read more

தொழாதவருக்குரிய சட்டம் என்ன? செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?

கேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா? என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ ... Read more

வஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கேள்வி : வஸனிய்யத் என்ற வார்த்தையின் நோக்கம் என்ன? இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா? பதில் : அல்ஹம்துலில்லாஹ் இதன் நோக்கம் சிலைவணக்கம் மற்றும் அதோடு தொடர்பில் இருப்பது ஆகும். இந்த வார்த்தை சிலை வணக்கம் புரியும் அரபிய இணை கற்பிப்பாளர்கள், இந்தியாவில் உள்ளோர், ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிகாட்டுகிறது. இது யூத கிரிஸ்தவ வேதக்காரர்களை குறிக்காது. குர்ஆனிலும் சுன்னாவிலும் சிலை வணக்கத்தை தடுத்து அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஆயத்துகள் ... Read more

கப்ர் இருக்கும் பள்ளியில் ஜமாஅத் தொழலாமா?

கேள்வி : கப்ரு இருக்கும் பள்ளிவாசல் ஒன்றில் ஜமாஅத்தாக தொழ வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தொழ முடியுமா? பதில் : நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டாயம் தொழ வேண்டும். ஜமாஅத் தொழுகையை விடக் கூடாது. (பொதுவாக)அந்தக் கப்ராளியை வைத்து இணை வைப்பு போன்ற பாவங்கள் நடப்பதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதற்காகவே இவ்வாறான பள்ளிகளில் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்:இமாம் அல்பானி(ரஹிமஹுல்லாஹ்) மூலம் : أساس الباني ... Read more

தௌபா செய்த பாவங்களும் மறுமையில் காட்டப்படுமா?

புத்தக அறிமுகம்

நமது இஸ்லாமிய அறிஞர்கள் பல நூல்களை தமது கைப்பட தொகுத்து தந்திருந்தாலும் சில அறிஞர்கள்  வழங்கிய மார்க்கத் தீர்ப்புகள் அவர்களது மாணவர்களாலோ அல்லது பின்வந்தவர்களாலோ  தொகுக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் நவீன கால முஜத்தித்களில் ஒருவரும் ஹதீஸ் கலை வல்லுனருமான இமாம் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புகள் பத்வாக்கள் தொகுக்கப்பட்ட நூலே أساس الباني في تراث الألباني என்ற புத்தகமாகும்.

அவரது மாணவர்களில் ஒருவரான கலாநிதி அபூ இப்ராஹீம் அஹ்மத் இப்னு நஸ்ருல்லாஹ் ஸப்ரி என்பவரே தொகுத்துள்ளார்.

நான்கு பாகங்களையும் 2550 பக்கங்களையும் கொண்ட இந்நூலை ஆசிரியர் நன்கு ஒழுங்கு படுத்தி வாசிப்பவருக்கு   இலகுவான விதத்தில் வடிவமைத்துள்ளார்.

இந்த கிதாபில் மார்க்கத்தின் பல பகுதிகளுக்கான தீர்ப்புகள் பதியப்பட்டுள்ளன.
முதலாவது பாகத்தில் 83 பக்கங்கள் அகீதாப் பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

கேள்வி :
“அனுவளவு தீமை செய்திருந்தாலும் அவர் (மறுமையில்) அதைக் கண்டு கொள்வார்” என்ற வசனம் என்னை கவலையடையச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனது பாவங்களை மறுமையில் மக்கள் மத்தியில் பார்த்துக் கவலைப்படுவாரே என்று சஞ்சலப்படுகிறேன். தௌபா செய்திருந்தாலும் இவ்வாறு காண்பானா?

பதில்:
மனிதன் தனது பாவத்தை விட்டும் தௌபா செய்து அல்லாஹ் அதனை அழித்திருந்தால் மறுமையில்அதைதக் காண மாட்டார். உலகில் தௌபா செய்யாத பாவத்தையே அவன் காண்பான்.

இமாம் அல்பானி
மூலம் : أساس الباني في تراث الألباني

மொழிபெயர்ப்பு:ஷெய்க் ஷுஐப் உமரீ (இஸ்லாமிய அழைப்பாளர்,இலங்கை)

 

அரபி மூலம்:

هل يرى المرء ذنوبه في الآخرة حتى لو تاب منها؟

السؤال:
سألت بنفسي فضيلته قائلا : شيخنا الفاضل! السلام عليكم ورحمة الله وبركاته لقد أهمني معنى قوله تعالى “ومن يعمل مثقال ذرة شرا يره” وأصابني قلق وخوف أن يرى المرء ذنوبه يوم القيامة فيستاء ويفضح ، فهل لا بد أن يراها حتى لو تاب منها؟

الجواب :
قال لي فضيلته ما معناه “لا يراها… إن الإنسان إذا تاب من ذنبه ومحى الله عنه هذا الذنب فلا يراه يوم القيامة. إنما الذنب الذي يراه هو الذي لم يتب منه”

المفتي : العلامة ناصر الدين الألباني رحمه الله
السائل : تلميذه الدكتور أبو إبراهيم أحمد بن نصر الله صبري