கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? 📝 பதில் : அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது. ... Read more

அஸ்ல்  செய்வது ஆகுமானது

"குர்ஆன் இறங்கிக்கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்வோராக இருந்தோம்"  என்று ஜாபிர் அறிவித்தார். [புஹாரி, முஸ்லிம்,   ] மற்றோர் அறிவிப்பில்  "நாங்கள் நபியின்  ﷺ காலத்தில் அஸ்ல் செய்வோராக இருந்தோம், அது நபி ﷺ அவர்களுக்கு தெரிய வந்தது ஆனால் அவர் எங்களை தடுக்கவில்லை" என்று அறிவிக்கிறார்

ஜனாஸாவை தூக்கிச்‌ செல்லல்‌, ஜனாஸாவை பின்தொடர்தல் – பாகம் 2

ஜனாஸாவைக்‌ கொண்டு செல்பவர்கள்‌ நடையை விரைவுபடுத்துவது வாஜிபாகும்‌. அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்‌: “ஜனாஸாவை வேகமாகக்‌ கொண்டு செல்லுங்கள்‌. ஜனாஸாவுக்குரியவர்‌ நல்லவராக இருந்தால்‌ அவரைச்‌  சீக்கிரமாக நல்லடக்கத்திற்குக்‌ கொண்டு சென்றவராவீர்கள்‌” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.  (புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, இப்னுமாஜா)   இந்த நபிமொழி ஓடாமல்‌ வேகமாக நடப்பதும்‌ கட்டாயம்‌ என்றே வலியுறுத்துகிறது. இதனையே “இப்னு ஹஸீம்‌” (5ம்‌ பாகம்‌, 154, 155ம்‌ பக்கங்களில்‌) உறுதிப்‌ படுத்துகின்றார்‌. ... Read more

ஜனாசா சட்டங்கள் – மையித்தைக்‌ கபனிடுதல்‌ – பாகம் 2

ஒரே துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. அல்லது அதற்கதிகமான துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. முஸ்‌அப்‌ (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ செய்தது. (இதே பிரிவு பாடத்தில்‌ 34ம்‌ பகுதி) ஆதாரமாக இருக்கின்றது.   இஹ்ராம்‌ கட்டியவராக மரணித்தவரை அவருடைய இரு ஆடைகளிலேயே கபனிடப்பட வேண்டும்‌. (இதற்குரிய ஆதாரம்‌ முன்னர்‌ 17ம்‌ இலக்கத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது)   கபன் செய்யும் போது சில விடயங்கள் விரும்பத்தக்கது முதலாவது: கபன்‌ துணி வெள்ளையாக இருத்தல்‌.    “நீங்கள்‌ வெண்மையான ஆடைகளை அணியுங்கள்‌. ... Read more

ஜனாசா சட்டங்கள் – மையித்தைக்‌ கபனிடுதல்‌ – பாகம் 1

ஒரு மையித்தைக்‌ குளிப்பாட்டி முடிந்தவுடன்‌ அதனைக்‌ கபனிடுவது கட்டாயமாகும்‌. அதற்குரிய நபி மொழி ஆதாரம்‌ மூன்றாவது பிரிவில்‌ கூறப்பட்டுள்ளது. (இஹ்ராம்‌ கட்டிய நிலையில்‌ வாகனத்திலிருந்து வீழ்ந்து  மரணித்தவர்‌ செய்தியில்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌).   மரணமடைந்தவரின்‌ சொந்தப்‌ பணத்திலிருந்து கபனிடுதல்‌ வேண்டும்‌. வேறு யாராவது முன்‌ வந்தும்‌ செலவு செய்யலாம்‌. கப்பாப்‌ இப்னுல்‌ அரத்‌ (ரழி) அவர்கள்‌ அறிவித்துள்ள நபிமொழி இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.  “நாங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களோடு அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்‌) சென்றோம்‌. அல்லாஹ்வின்‌ ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2

இமாம் அல் அல்பானி கூறுகிறார்: இரண்டு நிபந்தனைகளுடன் குளிப்பாட்டுபவர்களுக்கு நிறைந்த நற்கூலி அல்லாஹ்வினால்‌ வழங்கப்‌படுகின்றது. முதலாவது: குளிப்பாட்டுபவர்‌ மையித்தின்‌ உடம்பில்‌ எதாவது குறைபாடுகளைக்‌ கண்டால்‌ அதை வேறு யாருக்கும்‌ கூறாமல்‌ மறைத்து விட வேண்டும்‌. “ஒரு முஸ்லிமைக்‌ குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக்‌ கொண்டால்‌ நாற்பது முறை அல்லாஹ்‌ குளிப்பாட்டியவனை மன்னிக்கிறான்‌. கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப்பிடத்தை மறுமை வரை அளிக்கின்றான்‌. கபனிட்டவனுக்கு அல்லாஹ்‌ மறுமையில்‌ சுவர்க்கத்தில்‌ மெல்லியதும்‌ அழுத்தமான துமான உடைகளை அணிவிக்கின்றான்‌” என நபி ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 1

இமாம் அல் அல்பானி கூறுகிறார் ஒருவர்‌ இறந்து விட்டால்‌ ஏனைய மக்கள்‌ சிலரின்‌ மீது மரணித்தவரைக்‌ குளிப்பாட்ட அவசரப்படுவது கடமையாகும்‌. இவ்வாறு அவசரப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை மூன்றாம்‌ பிரிவில்‌ கூறிவிட்டோம்‌. குளிப்‌பாட்டுவதற்குரிய ஆதாரத்தையும்‌ முன்னரே கூறிவிட்டோம்‌. ஹஜ்ஜுக்‌ கடமையின்‌ போது வாகனத்திலிருந்து விழுந்து கழுத்து முறிந்து இறந்த தோழரை தண்ணீரினாலும்‌, இலந்தையிலையினாலும்‌ குளிப்பாட்டுங்கள்‌…. என்ற நபிமொழி முதலாவதாகவும்‌, இரண்டாவதாக நபி (ஸல்‌) அவர்களின்‌ மகள்‌ ஜைனப்‌ (ரழி) அவர்கள்‌ மரணமடைந்த வேளை அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ... Read more

மரணித்தவரை மக்கள்‌ புகழ்தல்‌

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: உண்மையான முஸ்லிமாக மரணித்தவருக்கு அயல்‌ ஊரிலுள்ள அவரையறிந்த முஸ்லிம்கள்‌ பலர்‌ அவரைப்பற்றி நல்லது கூறுவார்களேயானால்‌ அவரும்‌ சுவனவாசியே யாவார்‌. மரணித்தவரைப்‌ போற்றுபவர்கள்‌ குறைந்த பட்சம்‌ இரண்டு பேராயிருப்பினும்‌ சரியே! இதற்கு ஆதாரமாகப்‌ பல நபிமொழிகள்‌ உள்ளன. அவற்றில்‌ மூன்று நபிமொழிகளை மட்டும்‌ இங்கு பார்ப்போம்‌.   ௮. அனஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:  ‘நபியவர்களுக்குப்‌ பக்கத்தில்‌ ஒரு ஜனாஸா ஊர்வவம்‌ சென்றது.    ... Read more

சிறந்த மவ்த்தின் அடையாளங்கள்

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: சத்திய சன்மார்க்கத்தை நிலை நிறுத்திய நுண்ணறிவாளர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ நற்பேறுடன்‌ மரணிப்‌பவன்‌ (சுவனவாசியாக) மரணிக்கிறானா? என்பதை மரண வேளையில்‌ அறியக்கூடியவாறு, சில அடையாளங்களைக்‌ கூறியுள்ளார்கள்‌. இந்த அடையாளங்களுடன்‌ மரணிப்‌பவனுக்கு நற்பேறு கிடைக்கும்‌. முதலாவது: மரணவேளையில்‌ கலிமாவை உரைப்‌ பவன்‌.   இதற்குச்‌ சான்றாகப்‌ பல நபி மொழிகள்‌ வந்துள்ளன. அவற்றிலொன்று முஆத்‌ (ரழி) அவர்கள்‌ மூலம்‌ “யாருடைய கடைசி வார்த்தை ‘லா இலாஹ ... Read more