மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 1

இமாம் அல் அல்பானி கூறுகிறார் ஒருவர்‌ இறந்து விட்டால்‌ ஏனைய மக்கள்‌ சிலரின்‌ மீது மரணித்தவரைக்‌ குளிப்பாட்ட அவசரப்படுவது கடமையாகும்‌. இவ்வாறு அவசரப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை மூன்றாம்‌ பிரிவில்‌ கூறிவிட்டோம்‌. குளிப்‌பாட்டுவதற்குரிய ஆதாரத்தையும்‌ முன்னரே கூறிவிட்டோம்‌. ஹஜ்ஜுக்‌ கடமையின்‌ போது வாகனத்திலிருந்து விழுந்து கழுத்து முறிந்து இறந்த தோழரை தண்ணீரினாலும்‌, இலந்தையிலையினாலும்‌ குளிப்பாட்டுங்கள்‌…. என்ற நபிமொழி முதலாவதாகவும்‌, இரண்டாவதாக நபி (ஸல்‌) அவர்களின்‌ மகள்‌ ஜைனப்‌ (ரழி) அவர்கள்‌ மரணமடைந்த வேளை அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ... Read more

மரணித்தவரை மக்கள்‌ புகழ்தல்‌

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: உண்மையான முஸ்லிமாக மரணித்தவருக்கு அயல்‌ ஊரிலுள்ள அவரையறிந்த முஸ்லிம்கள்‌ பலர்‌ அவரைப்பற்றி நல்லது கூறுவார்களேயானால்‌ அவரும்‌ சுவனவாசியே யாவார்‌. மரணித்தவரைப்‌ போற்றுபவர்கள்‌ குறைந்த பட்சம்‌ இரண்டு பேராயிருப்பினும்‌ சரியே! இதற்கு ஆதாரமாகப்‌ பல நபிமொழிகள்‌ உள்ளன. அவற்றில்‌ மூன்று நபிமொழிகளை மட்டும்‌ இங்கு பார்ப்போம்‌.   ௮. அனஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:  ‘நபியவர்களுக்குப்‌ பக்கத்தில்‌ ஒரு ஜனாஸா ஊர்வவம்‌ சென்றது.    ... Read more

சிறந்த மவ்த்தின் அடையாளங்கள்

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: சத்திய சன்மார்க்கத்தை நிலை நிறுத்திய நுண்ணறிவாளர்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ நற்பேறுடன்‌ மரணிப்‌பவன்‌ (சுவனவாசியாக) மரணிக்கிறானா? என்பதை மரண வேளையில்‌ அறியக்கூடியவாறு, சில அடையாளங்களைக்‌ கூறியுள்ளார்கள்‌. இந்த அடையாளங்களுடன்‌ மரணிப்‌பவனுக்கு நற்பேறு கிடைக்கும்‌. முதலாவது: மரணவேளையில்‌ கலிமாவை உரைப்‌ பவன்‌.   இதற்குச்‌ சான்றாகப்‌ பல நபி மொழிகள்‌ வந்துள்ளன. அவற்றிலொன்று முஆத்‌ (ரழி) அவர்கள்‌ மூலம்‌ “யாருடைய கடைசி வார்த்தை ‘லா இலாஹ ... Read more
கேள்வி : ஆய்வுக்குட்படுத்தப்பட முடியாதவாறான வணக்க வழிபாடுகள் உட்பட மார்க்க விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலை பின்பற்றுவது கட்டாயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தக்லீத் செய்யக் கூடிய சில ஷைகுமார்கள் இதற்கு மாறாக கருத்து வேறுபாடுகளை அங்கீகரிக்கப்பது மட்டுமல்லாமல் கருத்து வேறுபடுவதை சமூகத்திற்கு ஒரு வரம் என்று கருதுகிறார்கள். இது குறித்து ஸுன்னாவை பின்பற்றுபவர்கள் பேசும் போது பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர். ” எனது சமூகம் கருத்து வேறுபடுவது அருளாகும்” இந்த ... Read more
கேள்வி ;தொழுகையில் நவ நாகரிக ஆடை என்று சிலர் முழங்கால்களில் அல்லது ஆடையின் சில பகுதிகளில் கிழிந்த கால் சட்டையை (பேண்ட்) அணிந்து தொழுகிறார்கள்? அவர்கள் இதை தெரிந்தே தொழுகையில் ஈடுபடுகிறார்கள் ? இது சார்ந்து மார்க்க சட்டம் என்ன? பதில்; இவ்வாறான நவ நாகரிக ஆடையாக கருதப்படுகின்ற கால்சட்டைகளை (பேண்ட்) ஆடைகளை தொழுகையில் மட்டுமல்ல தொழுகைக்கு வெளியிலும் அணிவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆடைகளை முஸ்லிம்கள் அணியமாட்டார்கள். இவை முஸ்லிம்களின் ஆடையல்ல , மாறாக ... Read more

ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன?

கேள்வி: ஷிஆக்கள் என்பவர்கள் யார்?அவர்கள் குறித்த மார்க்க தீர்ப்பு என்ன?அவர்களுக்கு ஹஜ்/உம்ரா செய்வதற்கு அனுமதி தருவதன் சட்டம் என்ன? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஷீஆக்கள் பல குழுக்கள்.அவர்கள் ஒரு குழு கிடையாது.அவர்கள் 22 குழுக்கள் என்று ஸிஹ்ரிஸ்தானி என்பவர் கூறியுள்ளார். அவர்கள் பல தரப்படுகின்றனர் .அவர்களில் சிலர்களின் பித்அத் அவர்களை காபிராக மாற்றும்.இன்னும் சில கூட்டத்தினர்களின் பித்அத் அவர்களை காபிராக்காது. சுருக்கமாக கூறுவதாயின் அவர்கள் அனைவரும் பித்அத் வாதிகள். இவர்களில் மிகவும் குறைந்த நிலையில் உள்ளவர்கள் ... Read more

ஏகத்துவத்தை பற்றி அறிவதற்கு வாய்ப்பு இல்லாமல் மரணிக்கும் முஸ்லீம்களின் மறுமை நிலை என்ன?

கேள்வி: ஷைக் அவர்களே! சிலர் ஏகத்துவத்தைப் பற்றி அறியாதிருக்கின்றனர். ஸூபித்துவத்தை இபாதத் என்று நினைத்து அவர்களும் ஸூபிகளாகவே இருக்கின்றனர். இதற்குக் காரணம் எழுத வாசிக்கத் தெரியாததால் ஏற்பட்ட அறியாமையாக இருக்கலாம். அல்லது மார்க்க அறிவற்ற ஸூபி ஆலிம்கள் போன்றவர்கள் அழைப்பாளர்களாக இருந்திருக்கலாம். இவ்வாறான நிலையில் மரணித்த முஸ்லிம்களின் நிலை என்ன? அழைப்புப்பணி பற்றியும், உண்மையான அழைப்புப்பணி சென்றடையாமல் மரணிக்கும் மனிதரைப் பற்றி பேசும் போது, அவர்களுக்கு பிரத்தியேகமான நடைமுறை இருக்கிறது என்று கூறினீர்கள். இது பற்றி உங்கள் ... Read more

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி : இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?   பதில் : ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால் ... Read more

முஸ்லிம் அல்லாத மக்களின் ஜனாஸாவினை மதசடங்குகளின் அடிப்படையில் அடக்கம் செய்ய முடியுமா?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவதாக ஒரு காபிர் நோய்வாய்ப் பட்டால் அவரிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அவரை அழைப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்க ஒரு விடயமாகும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிப் மரணத் தருவாயில் இருக்கும்போது அவரிடம் சென்று கலிமாவை மொழியும் படி ஏவினார்கள். அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்த ... Read more

ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்கலாமா

ஷேக் பின் பாஸ்: ஆம், ஜனாஸா தொழுகையை ஆண்கள், பெண்கள், அனைவரும் தொழலாம். பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டிலோ, அல்லது மஸ்ஜிதிலோ தொழலாம். இவற்றில் யாதொரு தவறுமில்லை. ஆயிஷா   رضي الله عنها மற்றும், சில பெண்கள் சஅது இப்னு அபீ வக்காஸ் رضي الله عنه அவா்களின் ஜனாஸா தொழுகையில் பங்கெடுத்தனர். ஆகையால் ஜனாஸா தொழுகையை அனைவரும் தொழலாம், ஆனால் கப்றுகளுக்கு செல்வது, ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வது, கப்ருஸ்தானுக்கு செல்வது, ஆகியவை பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. ... Read more