ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன?

ஈத் நாள் வெள்ளிக்கிழமை அன்று வந்தால், ஈத் தொழுகையை ஒருவர் இமாமுடன் தொழுதிருந்தால், அன்றைய தினம் அவர் மீது ஜும்ஆ தொழுவது கடமை அல்ல, சுன்னத் மட்டும் தான். அவர் ஜும்ஆ தொழுகைக்கு வரவில்லை என்றால் அவர் மீது ளுஹர் தொழுவது கடமை. இச்சட்டம் இமாம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான். இமாமைப் பொறுத்தவரை அவர், ஜும்மா தோழ வேண்டும் முஸ்லிம்களுக்கு ஜுமுஆ தொழுகை நடத்துவது அவர் மீது கடமை. மக்கள் அனைவரும் முற்றிலுமாக ஜும்ஆ தொழுகையை விட்டு விடக்கூடாது.

(ஷேக் ஸாலிஹ் அல் ஃபௌஸான்)

தமிழாக்கம் : நயீம் இப்னு அப்துல் வதூத்

மூலம்: https://islamqa.info/ar/answers/7857/

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply