உழ்ஹிய்யா (குர்பானி) கொடுப்பவரின் குடும்பத்தினர் நகங்கள், முடியை நீக்கலாமா

கேள்வி ; துல் ஹஜ் மாதம் ஆரம்பமாகிவிட்டால் உழ்ஹிய்யா கொடுக்கும் நபரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு (அகற்றவேண்டிய) முடிகள் மற்றும் நகங்களை நீக்க அனுமதி உள்ளதா…? பதில் ; ஆம், அனுமதி உள்ளது, துல் ஹஜ் முதல் பத்து நாட்களில் உழ்ஹிய்யா கொடுப்பவரின் குடும்பத்தாருக்கு (அகற்றவேண்டிய) முடிகளை களைதல், நகங்களை வெட்டுதல் போன்றன அனுமதிக்கப்பட்டவையாகும். (இதற்க்கு முன் உழ்ஹிய்யா கொடுப்பவர் பற்றிய கேள்விக்கு பதில் வழங்கியதில்,) உள்ஹிய்யா கொடுப்பவருக்கு முடிகள் நகங்கள் மற்றும் உடலில் உள்ள எந்த ... Read more

தன் பிரதேச மக்களுடன் சேர்ந்து நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது எவ்விடத்தில் பிறை பார்த்தாலும் நோன்பு வைக்க வேண்டுமா?

கேள்வி: சில முஸ்லிம் நாடுகளில் பிறை பார்க்கப்பட்ட பின்னரும், நான் வசிக்கும் நாட்டில் ஷாபன், ரமழான் மாதங்களில் 30 நாட்களாக பூர்த்தி செய்கின்றனர், இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் என்ன செய்ய வேண்டும்? மக்கள் மத்தியில் ரமழான் விடயத்தில் முரண்பாடுகள் ஏற்பட காரணங்கள் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நீங்கள் உங்கள் பிரதேச மக்களுடன் சேர்ந்தே செயல்படவேண்டும். அவர்கள் நோன்பு வைக்கும் போது நோன்பு வையுங்கள், அவர்கள் நோன்பை விடும்போது நீங்களும் விடுங்கள், ஏனென்றால் ... Read more

நீங்கள் பிறை பார்த்ததை மக்கள் ஏற்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்

கேள்வி: ஒரு  மனிதர் ரமழான், ஷவ்வால் பிறைகளை கண்டு, காழியிடம் (நீதிபதியிடம்), அல்லது மக்களிடம் சொல்லி அவர்கள், அவரின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு வைக்க வேண்டுமா? அல்லது அந்த பிரதேச மக்கள் வைக்கும்போதுதான் நோன்பு வைக்க வேண்டுமா? பதில்: இது விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் மூன்று கருத்துகள் உள்ளன: 1 – நோன்பு வைப்பதிலும், விடுவதிலும் அவர் பிறை பார்த்தபடி தனியாக செயல்படவேண்டும். இது இமாம் அஷ் ஷாஃபியின் கருத்து. ஆனால் அவர், ... Read more

எந்தவித காரணமுமின்றி ரமழானின் ஒரு நோன்பை விட்டால்? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்

கேள்வி : எந்தவித காரணங்களுமில்லாமல் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை விட்ட காரணத்தினால் அதற்காக ஒரு நோன்பு நோற்றால் போதுமானதா அல்லது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டுமா? பதில் : ஏன் அவர் நோன்பை விட்டார் என்பது தெரியாது. நோன்பு காலத்தில் பகல்பொழுதில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமான விடயம் என்பது அறிந்தநிலையில்; மனைவியுடனான உடலுறவினால் நோன்பை விட்டார் என்றிருந்தால், அவர்மீது (கீழ்வரும் ஒன்றில்) குற்றப்பரிகாரம் கடமையாகின்றது, – ஒரு அடிமையை விடுதலை செய்வது. (இது முடியவில்லை ... Read more

சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?

கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா? பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு ... Read more

வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா?

கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் ... Read more

வாந்தி வுழூவை முறித்துவிடுமா?

கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா? பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும். ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும். ”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிரயோஞனமானதாகும். வாந்தி என்பது ... Read more

நோன்பு காலத்தில் இன்ஹேலர் பயன்படுத்தலாம்

கேள்வி: ரமதானில், ஆஸ்துமா நோயால் மூச்சு திணறல் ஏற்பட்ட ஒருவர் இன்ஹேலர் பயன் படுத்தினால் நோன்பு முறிந்துவிடுமா? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கே ரமதான் மாதத்தில் பகலில் ஒருவர் ஆஸ்துமாவிற்காக இன்ஹேலர் பயன்  படுத்தினால், அது அவரின் நோன்பை முறிக்காது. ஏனென்றால், அது உணவு அல்ல, அது நுரையீரலை  சென்றடையும் ஒருவகை வாயு. மேலும் அது ரமதான், ரமதான் அல்லாத காலம் என அனைத்து நேரங்களிலும் தேவைப்படுகிறது. ஃபதாவா அத்தவா, இப்னு பாஸ் 979 ஷேக் இப்னு உஸைமீன் ... Read more

ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு, ஜுமுஆ தொழுகை வீட்டில் நிறைவேற்றலாமா? மெளலவி அன்ஸார் ஹூஸைன் ஃபிர்தவ்ஸி: ஜுமுஆ தொழுகை நிறைவேற்றுவதிலுருந்து “அஹ்லுல் அஃதார்” (ஷரீஅத் வழங்கும் தகுந்த காரணங்கள் படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்) விதிவிலக்கு வழங்கப்படுகிறார்கள். உதாரணமாக பிரயாணி 10 பேருடன் பிரயாணம் செய்கிறார் என்றால் தொழுகை நேரம் வரும்போது சுருக்கியோ, சேர்த்தோ தொழுவார் அதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிரயாணிகள் ஜுமுஆ தொழுகை நடத்தியதாக எந்த ... Read more

கொள்ளை நோய், அல்லது கொள்ளை நோய் பரவும் எனும் அச்ச காலத்தில் ஜும்ஆ தொழுகை, ஜமாஆத் தொழுகைக்கு செல்வதன் சட்டம்

கேள்வி: கொள்ளை நோய் பரவும் காலத்திலும் கொள்ளை நோய் பரவும் எனும் அச்சம் நிலவும் சூழ்நிலையிலும், ஜும்ஆ மற்றும் ஜமாஅத் தொழுகையில் பங்கெடுக்காமல் இருப்பதன் சட்டம் என்ன? பதில்: புகழனைத்தும் அல்லாஹ்விற்கு. சவூதி அரேபியாவின் மூத்த அறிஞர்கள் குழு ஹிஜ்ரி 16/7/1441 தேதி அன்று பின் வரும் ஃபத்வாவை வெளியிட்டது: எல்லா புகழும் இறைவனுக்கே, அவன் தான் அகிலங்களின் அதிபதி, ஸலாத்தும் ஸலாமும் நம் முஹம்மது நபியின் மீதும் அவாின் குடும்பத்தார், தோழர்களின் மீதும், அவரை பின் ... Read more