அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப, வ ஷாபான… என்று வரும் துஆ ஸஹீஹானதா?

ரஜப் மாதத்தின் முதல் நாள், பின்வரும் துஆவை கேட்பது சுன்னத்தாகுமா என்று அறிய விரும்புகிறேன் اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ  அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷாபான, வ பல்லிக்னா ரமதான. யா அல்லாஹ் ரஜப், மற்றும் ஷாபான் மாதங்களில் எங்களுக்கு பரகத் தருவாயாக, மேலும் ரமதான் மாதத்தை எங்களை அடைய செய்வாயாக. தூய்மை மற்றும் கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்விடம், ஆதாரப்பூர்வமான சுன்னத்தின் அடிப்படையில் செயல்படும் பாக்கியத்தை கொடுக்குமாறு ... Read more

மறுமையையும் சொர்க்கம்,நரகம் ஆகியவற்றையும் மறுப்பவர்களின் நிலை என்ன?

கேள்வி : சிலர் மறுமையையும் சொர்க்கம் நரகம் ஆகியவற்றையும் மறுக்கின்றனரே இவர்களின் நிலை என்ன? பதில் : இவ்வாறு கூறுபவர் ஒரு முஸ்லிமாக மட்டுமன்றி யூத, கிறிஸ்தவராக கூட இருக்க முடியாது. (இவ்விடயத்தில்) யூத, கிறிஸ்தவர்கள் அவரை விட சிறந்தவர்கள். அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பாத நாத்திகராகவே இருப்பார். அல்லாஹ் கூறுகிறான் : மேலும், அவன் தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை மறந்துவிட்டு, “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று ... Read more

குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?

கேள்வி: குர்ஆனில் நாம் ஸஜ்தா திலாத்திற்காக ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள் எத்தனை? அந்த இடங்கள் என்ன?   பதில்: அல்ஹம்துலில்லாஹ்…, குர்ஆனில் ஸஜ்தாவுடைய இடங்கள் 15 ஆகும். அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் 15 ஸஜ்தா வசனங்களை ஓதினார்கள். அதில் மூன்று முஃபஸ்ஸலிலும் சூரா ஹஜ்ஜிலே இரண்டு வசனங்களும் ஆகும். இந்த செய்தி அபூதாவூத், இப்னுமாஜா,ஹாகிம்,தாரகுத்னீ இமாம் முன்திரி (ரஹ்) இமாம் நவவீ (ரஹ்) ஆகியோர் இந்த செய்தி ... Read more

4.மரணித்தவர் ,உடன் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை

18. மரணித்தவரின்‌ முகத்தைத்‌ திறந்து பார்ப்பதும்‌ இரு கண்களுக்கு மத்தியில்‌ முத்தமிடுவதும்‌ (ஆர்ப்பாட்டமில்லாமல்‌) அழுவதும்‌ கூடும்‌. இதற்குரிய அதாரங்களாவன :- நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ மரணித்த செய்தியை கேட்டு அபூபக்கர்‌ (رضي الله عنه) அவர்கள்‌ குதிரையில்‌ விரைந்து வந்தார்கள்‌. நபியவர்கள்‌ மரணிக்கும்‌ போது அபூபக்கர்‌(رضي الله عنه) அவர்கள்‌ மதினாவுக்குப்‌ பக்கத்திலுள்ள ஸூன்‌ஜு என்னும்‌ இடத்தில்‌ இருந்தார்கள்‌. அங்கிருந்து விரைந்து வந்தார்கள்‌. நபியவர்களின்‌ பள்ளிவாயிலுக்கு வந்தபோது, உமர்‌ (رضي الله عنه) ... Read more

3. மரணமடைந்தவருக்குப்‌ பக்கத்திலிருப்பவர்கள்‌ செய்ய வேண்டியவை

இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலின் மூன்றாம் தலைப்பில் கூறுகிறார்: 17. நோயினால்‌ பீடிக்கப்பட்டவர்‌ மரணமடைந்து விட்டால்‌ பக்கத்திலிருப்பவர்கள்‌ செய்ய வேண்டிய பல வேலைகள்‌ உள்ளன. (அ) என்‌ கணவர்‌ அபூஸலமா மரணமடைந்தவுடன்‌ நபி (صلى الله عليه وسلم) அவர்கள்‌ வந்திருந்தார்கள்‌. அப்போது என்‌ கணவரின்‌ கண்‌ திறந்திருந்தது. நபியவர்கள்‌ இலேசாகக்‌ கசக்கிக்‌ கண்ணை மூடிவிட்டு ‘உயிர்‌ கைப்பற்றப்‌ பட்டவுடன் (பிரிந்தவுடன்‌) பார்வை அதனை நோக்கியே இருக்கும்‌’ எனக்‌ கூறினார்கள்‌. ... Read more

ஒருவரின் மரண வேளையில் அருகில் இருக்கும் மற்றவர்கள் செய்ய வேண்டியவை

இந்த நூலின் முதல் பாடத்தை பார்க்க இமாம் அல் அல்பானி தனது ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார்: நோயாளிக்கு மரணவேளை வந்ததும்‌ அருகில்‌ இருப்பவர்களுக்குச்‌ சில செயல்கள்‌ கடமையாகின்றன. அவருக்குக்‌ கலிமாவை எடுத்துக்‌ கூறி அதனைச்‌ சொல்லும்படி. செய்ய வேண்டும்‌.“உங்களில்‌ யாருக்காவது மரணம்‌ நெருங்கினால்‌ அவருக்கு கலிமாவை எடுத்துக்‌ கூறுங்கள்‌. எவனுடைய பேச்சின்‌ கடைசிச்‌ சொல்‌ “லா இலாஹ இல்லல்லாஹு’ என்றிருக்கிறதோ அவன்‌ சுவனம்‌ புகுவான்‌. அதற்கு முன்னுள்ள பாவச்‌ செயல்களுக்குப்‌ பரிகாரமாகவும்‌ இருக்கும்‌ ... Read more

ஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன?

ஸுஹுத் – زهد- என்ற அறபுப் பதத்திற்கு தமிழில் துறவறம், பற்றற்ற தன்மை மற்றும் சன்னியாசம் போன்ற அர்த்தங்களை தருகிறது. ஏழ்மையான வாழ்வை இஸ்லாம் வெறுக்கிறது. ஆனால் எளிமையான வாழ்வை இஸ்லாம் வரவேற்கின்றது. உலகை ஆளும் அரசனாலும், உலகமகா பணக்காரனாலும் எளிமையான வாழ்வு வாழ முடியும். நபிமார்கள் நல்லோர்கள் வாழ்ந்து காட்டிய அறநெறி வாழ்வும் இதுவாகும். இந்த எளிமையான வாழ்வமைப்பைத்தான் பற்றற்ற வாழ்வாக, வெற்றிக்கான வழியாக, பாதுகாப்பான மார்க்கமாக சன்மார்க்கம் அறிமுகப்படுத்துகிறது. பின்வரும் நபி போதனை அதற்கு ... Read more

தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா?

கேள்வி : தனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளுமாறு நாம் ஏவப்படவில்லை என்று ஷைகுல் இஸ்லாம் அவர்கள் கூறியுள்ளார்களே? பதில் : முடிந்தவரை எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அது தான் சிறந்தது. ஆனால் பிறரிடம் வேண்டிக் கொள்வதில் தடையேதும் இல்லை. வாகனத்தில் இருப்பவர் தனது கையிலிருந்து விழுந்த பொருளை வாகனத்திலிருந்து இறங்கி அவரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை (மாறாக)இன்னொருவரிடம் உதவி பெறலாம். பார்வை இழந்த ஒருவர் ... Read more

பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது?

கேள்வி : பயணம் செய்பவர் அவருக்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டால் வாகனத்திற்குள் தயம்மும் செய்து தொழுகையை நிறைவேற்றலாமா?

பதில் : அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அஜ்மயீன்.

ஒரு பயணி அவர் முயற்சி செய்தும் அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

அல்லாஹ் தஆலா குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4 : 43

ஹனபிய்யாக்கள் தண்ணீர் தேடுவதில் வரையரை வைத்திருக்கிறார்கள்.
ஒருவர் தண்ணீர் கிடைக்காத போது தண்ணீர் அருகாமையில் இருக்கிறது என்ற எண்ணம் இருந்தால் அவர் நானூறு அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும். அப்போது அவருக்கு தண்ணீர் கிடைக்காத போது அவர் தயம்மும் செய்யலாம்.

ஷாபியாக்கள் கூறுகிறார்கள்: ஒருவர் தனக்கு தன்னைச்சுற்றி தண்ணீர் கிடைக்காது என்று உறுதி கொள்ளும் போது அவர் தண்ணீரை தேடாமல் தயம்மும் செய்யலாம். தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் போது பயமில்லாத போது அல்லது தன்னுடைய பொருள் மீது பயமில்லாத போது அல்லது தன்னோடு வந்தவர் தன்னைவிட்டு பிரிந்து விடுவார் என்ற பயமில்லாத போது அவர் அரை ஃபர்ஸக் நடக்கவேண்டும். அல்லது ஆறாயிரம் அடி எடுத்து வைத்து தேடிச் செல்லவேண்டும்.

இதன் அடிப்படையில் ஒருவர் அவர் வாகனத்தில் இருக்கும் போது தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் ஓட்டினரிடம் வண்டியை தொழுகைக்காக நிறுத்தச் சொல்லவேண்டும். நிறுத்தினால் தொழுது கொள்ள வேண்டும்.

நிறுத்தவில்லையெனில்..
அப்போது தொழுகையின் நேரம் முடிவதற்குள் தனது சொந்த இடத்திற்கு சென்றுவிடலாம் என்று நம்பினால் அவர் தொழுகையை தாமதப்படுத்தில் தனது இடத்திற்கு சென்ற பின்பு தொழுகையை நிறைவேற்றலாம்.அல்லது தனது இடத்திற்கு சென்றடைவதற்கு முன்பு தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்று கருதினால் வாகனத்திற்குள்ளே சக்திக்கு உட்பட்டு நிற்குதல் ருகூவு செய்தல் ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை செய்து தொழுது கொள்ளவேண்டும்.

அல்லாஹ்தஆலா சொல்கிறான்:

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சகத்திக்கு மீறி சிறமப்படுத்தமாட்டான். பகரா 286.

அல்லாஹ்வை உங்கள் சக்திக்கு உட்பட்டு பயந்து கொள்ளுங்கள். தப்ôபூன் 16.

உங்கள் தந்தையரான இப்ராஹீமின் மார்க்கத்தில் உங்களுக்கு எந்த சிரமத்தையும் அவன் ஏற்படுத்தவில்லை. ஹஜ் 78.

நான் ஒன்றை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் முடிந்தளவிற்கு அதை செய்யுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நூல் : புகாரி முஸ்லிம்.

சிரமம் எளிதைக் கொண்டு வரும் என உசூல் ஃபிக்ஹ் சட்டங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு பயணி தன்னுடைய வாகனத்தில் தண்ணீர் இருந்தால் அந்த தண்ணீரைக் கொண்டு ஒளு செய்து கொள்வார். அல்லது தன்னோடு இருக்கும் சக பயணிகளிடம் கேட்பார். அல்லது முடிந்தால் வாகனத்திலிருந்து இறங்கி தண்ணீரை தேடுவார். கிடைக்கவில்லையெனில் தயம்மும் செய்து தொழுது கொள்வார்.

அல்லாஹ் மிக அறிந்தவன். (உலமாக்களின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான செய்திகள்.)

 

மொழிபெயர்ப்பு:ஷெய்க் யூசுப் ஃபைஜி (இஸ்லாமிய அழைப்பாளர்,கடையநல்லூர்)

ஜனாஸா சட்டங்கள் – நோயாளியின்‌ கடமைகள்

மொழிபெயர்ப்பு : S. M. முஸ்தபா மவ்லானா ஜமாலி இமாம் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் (தல்கீஸ் அஹ்காம் அல்ஜனாயிஸ்) எனும் நூலில் நோயாளியின் கடமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்: 1. அல்லாஹ்வின்‌ தீர்ப்பை ஏற்பதும்‌, அவன்‌ தரும் சோதனையில்‌ பொறுமையாயிருப்பதும்‌, தன்‌ அதிபதியான அல்லாஹ்வின்‌ மீது நல்லெண்ணம்‌ வைப்பதும்‌ அவசியமாகும்‌. “முஃமினின் செயல்களைப்‌ பார்த்து வியப்படைகின்றேன்‌. அவனுடைய எல்லாச்‌ செயல்களும்‌ நன்மையே தருகின்றன. இது நம்பிக்கையாளரை (முஃமினை)த்‌ தவிர வேறு யாருக்கும்‌ கிடையாது. மகிழ்ச்சி ஏற்பட்டால்‌ ... Read more