அவ்வாபீன் தொழுகை

கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா? பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு  கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை ... Read more

ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

கேள்வி: ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்… ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன? ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ... Read more

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? 📝 பதில் : அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது. ... Read more

ரமழானில் நோன்பு நோற்ற ஒருவர்,பகலில் உடலுறவில் ஈடுபட்டவருக்கான பரிகாரம் என்ன? அதனை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?

பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும் ரமழானில் நோன்பு நோற்ற நிலையில், பகல் (நேரத்தில்) உடலுறவில் ஈடுபட்டவருக்கான பரிகாரம் மேற்கண்ட பாவச்செயலுக்குறிய பரிகாரமானது பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றாக அமையும். நமது விருப்பத்தின் அடிப்படையில் (மூன்றில் ஏதேனும் ஒன்றை) தேர்வு செய்ய முடியாது. (அதாவது, முதல் பரிகாரத்தை செய்ய சக்தியிருந்தும், இரண்டாவது பரிகாரத்தை நோக்கி செல்வதற்கு அனுமதிக்கப்படாது). அவையாவன : 1. அடிமையை விடுவித்தல்; ஒருவரால் அவ்வாறு செய்ய முடியாவிட்டால்,…⤵️ 2. ஒருவர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு ... Read more

சஜ்தாவில் துஆ கேட்பது குறித்து சில கேள்விகள்

கேள்வி 1: சஜ்தாவில் துஆ கேட்பதின் சட்டம் என்னவென்று கேட்கிறார். பதில்: சஜ்தாவில் துஆ கேட்பது சுன்னத்தாகும், நபி ﷺ ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஒரு ஹதீஸில் சஜ்தாவில் துஆ  கேட்கும்படி ஏவினார்கள்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அடியான் தனது இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸுஜுதில் இருக்கும் நேரமாகும். அதில் நீங்கள் அதிகம் துஆ கேளுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், அறிவிப்பவர் அபூ ஹுறைரா رضي الله عنه) இந்த ஹதீஸ் ஸஜ்தாவில் துஆ செய்வது ... Read more

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா?

கேள்வி: லைலத்துல் கத்ர் இரவை நாம் எப்படி கழிக்க வேண்டும்? பிரார்த்தனை செய்வதன் மூலமும், குர்ஆன் மற்றும் சீரா (நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) படிப்பதன் மூலமும், பிரசங்கங்கள் மற்றும் பாடங்களைக் கேட்பதன் மூலமும், அதை மசூதியில் கொண்டாடுவதன் மூலமும் கழிக்க வேண்டுமா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முதலில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் மற்ற நாட்களில் செய்யாத அளவிற்கு வணக்கத்தில் கடுமையாக ஈடுபட்டு, தொழுகையிலும், குர்ஆன் ... Read more

கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..?

கேள்வி நான் சுய தேவைக்காக கழிவறைக்குச் சென்றபோது கழிப்பறையில் ஒரு துளி இரத்தம் (கசிந்ததை) கண்டேன். ஆனால் அது மாதவிடாய் இரத்தமா என சரியாகத் தெரியவில்லை. எனவே நான் எனது தொழுகை மற்றும் நோன்பினை தொடரலாமா..? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒரு துளி இரத்தம் (கசிந்தது) என்பது மாதவிடாய்க்கான அறிகுறி அல்ல. எனவே நோன்பையும் தொழுகையையும் விட்டுவிடக் கூடாது (தொடர வேண்டும்). ரமழான் மாத நோன்பை மேற்கொண்டிருக்கும் பெண்ணிற்கு (மாதவிடாய் முடிந்த பிறகும்) சிறு இரத்தப் புள்ளிகள் ... Read more

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

ஒருவன்‌ தொழுது முடித்த பிறகு தனது ஆடையில்‌ அசுத்தத்தைக்‌ கண்டால்‌ அந்தத்‌ தொழுகையை அவன்‌ திருப்பித்‌ தொழ வேண்டுமா?

அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌

ஒரு பெண்‌ அஸர்‌ அல்லது இஷா நேரத்தில்‌ மாதவிடாயிலிருந்து சுத்தமானால்‌ அவள்‌ அஸருடன்‌ ளுஹரையும்‌ சேர்த்து அல்லது இஷாவுடன்‌ மஃக்ரிபையும்‌ சேர்த்து ஜம்வு செய்தல்‌ என்ற அடிப்படையில்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொலலப்படூம்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அலலது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா?

ஒருவருக்கு ஒரு தொழுகை தவறிவிட்டது! உதாரணமாக ளுஹர்‌ தொழுகை. அஸர்‌ தொழுகைக்கு இகாமத்‌ சொல்லப்படும்போதுதான்‌ அவருக்கு அது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர்‌ அஸரை நிய்யத்‌ செய்து ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹருடைய நிய்யத்துடன்‌ ஜமாஅத்துடன்‌ சேர வேண்டுமா? அல்லது ளுஹரைத்‌ தனியாகத்‌ தொழுதுவிட்டு பின்னர்‌அஸர்‌ தொழ வேண்டுமா? “நடப்புத்‌ தொழுகை தவறிவிடுமென அஞ்சினால்‌ (தவறிப்போன தொழுகையைத்‌ தொழுது விட்டுத்தான்‌ அடுத்த தொழுகையைத்‌ தொழவேண்டும்‌ என்கிற) வரிசைக்கிரமத்தைப்‌ பேண வேண்டியதில்லை” என்று பிக்ஹு கலை அறிஞர்கள்‌ ... Read more