குஃப்ரின் வகைகள், படித்தரங்கள்

கேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா? அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை ... Read more

அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா?

கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா?அவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலா?நிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா? பதில்: தாங்கள் கூறியதைப்போன்று அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடமும்,இறந்தவர்களிடமும்,இன்னும் உயிருடன் இருப்பவர்களில் மறைவாக உள்ளவர்களிடத்திலும்,மேலும் மரங்கள்,கற்சிலைகள்,நட்சத்திரங்கள் போன்றவற்றிடம் உதவிதேடுபவர்களாக இருந்தால் அவர்கள் இனைவைப்பாளர்கள் ஆவார்கள் இத்தகைய இனைவைப்பு அவர்களை இஸ்லாத்தைவிட்டு வேளியேற்றிவிடும் பெரிய வகை இனைவைப்பாகும். நிராகரிப்பாளர்களிடம் நேசம்பாராட்டுவது எவ்வாறு ... Read more

கப்ர் ஸியாரத்(சந்திப்பு) செய்வதின் சட்டம் என்ன? பெண்கள் கப்ரு ஸியாரத் செய்வது குறித்த மார்க்க தீர்ப்பு

கேள்வி: கப்ர் ஸியாரத் செய்வது குறித்த சட்டம் என்ன? பதில்: கப்ருகளை ஸியாரத் செய்வது நபி صلى الله عليه وسلم வழிகாட்டிய ஒரு சுன்னத்தான விடையம். முதலில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை தடுத்திருந்தார்கள், பின்னர் கப்ரு ஸியாரத் செய்யுமாறு கட்டளை இட்டார்கள். நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “நான் உங்களை கப்ரு ஸியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். இனி நீங்கள் கப்ரு ஸியாரத் செய்யுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) ... Read more

ஷீஆக்கள் அறுத்த பிராணிகளை உண்ணுதல் தொடர்ப்பில் மார்க்க தீர்ப்பு

கேள்வி: நாங்கள் ஷீஆ சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம்; அவர்கள் இஸ்லாமியர்கள் என தங்களை கூறிகொண்டபோதிலும்,அல்குர்ஆனுக்கும்,சுன்னாவுக்கும்முரண்பட்ட அவர்களின் கொள்கைகள் பற்றி உங்களுக்குத் தெரியும். இந்நிலையில், அவர்கள் நேர்ச்சைகாகவோ, மரணித்தவர்களுக்காகவோ, மண்ணறையில் உள்ளவர்களுக்காகவோ, சந்தையில் விற்கப்படுவதற்காகவோ, வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ அவர்கள் அறுக்கும் பிராணிகளை நாம் உண்ணுவது அனுமதிக்கப்பட்டதா? பதில்: அல்ஹம்துலில்லாஹ் அறுக்கப்படும் பிராணிகள் உண்ண அனுமதிக்கப் படுவதற்கு, அறுப்பவர் முஸ்லிமாக அல்லது ஏற்கனவே இறைனால் அனுப்பப்பட்ட மார்க்கங்களை அதன் உண்மை நிலையில் பின்பற்றுகிறவராக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். ... Read more

அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று கூறுவோருக்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் சட்டம் என்ன?

கேள்வி: ஒரு வானொலி நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் கூறப்பட்டது. அதில், ஒரு சிறுவன் தன்னுடைய தந்தையிடம் அல்லாஹ்வைப் பற்றி கேட்கின்றான், அதற்கு அந்தத் தந்தை அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று பதில் கூறினார். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இதுபோன்ற கூற்றுக்களின் சட்டம் என்ன? பதில்: இந்த பதில் தவறானது. இது ஜஹமிய்யா மற்றும் முஃதஸிலா மற்றும் அவர்களின் வழியில் பயணிக்கும் பித்அத்வாதிகளின் கருத்தாகும்.. அல்லாஹ் வானத்திலே அர்ஷின் மீது இருக்கிறான் என்பதுதான் சரியானது. இதில்தான் ... Read more

இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்

கேள்வி: மார்கத்தின் பால் மக்களை ஆழைப்பதைவிட, இனம்/மொழியின் அடிப்படையில் மக்களை அழைப்பதற்கு முக்கியத்துவம் தரும் தேசியவாதம்/இனவாதம் பற்றி உங்களின் கருத்து என்ன. இந்த கூட்டம் நாங்கள் மார்கத்தை எதிர்க்கவில்லை, ஆனால் இனவாதம்/தேசியவாதத்திற்க்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறுகின்றனர்.இந்த அழைப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? பதில்: இந்த அழைப்பு ஜாஹிலியா எனும் அறியாமை ஆகும், இந்த அழைப்பில் இணைவதும், இந்த அழைப்பில் ஈடுபடுவோருக்கு துணை நிற்பதும்,இஸ்லாத்தில் ஆகுமானது அல்ல. இன்னும் கூறினால் இதை தடுப்பது மார்கக் கடமை. ... Read more

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன? அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா

கேள்வி:அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது பற்றிய சட்டம் என்ன?அது இணை வைப்பா (ஷிர்க்) இல்லையா? பதில்:அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது- வானவர்கள்-நபி- வலீ- அல்லது அல்லாஹ்வுடைய படைப்புகளில் ஏதேனும் ஒரு படைப்பின் மீது சத்தியம் செய்வது என்பது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆதாரமாக நபி ﷺ அவர்களிடம் இருந்து இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் இருக்கின்ற காரணத்தால் (அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது ஹராம் ஆக்கப்பட்டுள்ளது). ஒரு பயணத்தில் ... Read more

பித்அத் என்றால் என்ன

கேள்வி: இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் எப்போது ஒரு செயல் பித்அத் என்று கூறப்படும்? பித்அத் என்பது வெறுமனே வணக்க வழிபாடுகளில் மட்டுமா அல்லது வணக்க வழிபாடுகள் மற்றும் நடைமுறைகளிலும் உள்ளதா? பதில்: பித்அத் என்பது தூய்மையான இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் மக்களால் புதிதாக செய்யப்பட்ட குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படை ஆதாரம் இல்லாத செயல்பாடுகள் ஆகும். நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் ... Read more

குர்ஆன் ஓதிய பிறகு சதகல்லாஹுல் அதீம் என்று கூறுவது

கேள்வி: குர்ஆன் ஓதி முடிக்கும் போது ُصَدَقَ اللّٰه ٱلعَظِيْمُ என்று கூறுவது ‘பித்அத்’ என்று கூறும் பலரை கேட்டிருக்கிறேன். சிலர் இது கூடும் என்றும் அதற்கு ஆதாரமாக (அல்லாஹ் உண்மையே கூறினான், முற்றிலும் நேரான வழியில் சென்ற இப்ராகிம் (அலை) அவர்களை பின்பற்றுங்கள்-3:195) எனும் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். மேலும் சில கல்விமான்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதும் நபரை (ஓதுவதை) நிறுத்த நாடினால் “போதுமானது” என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள் அல்லாஹ் உண்மையே ... Read more

கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன?

கேள்வி: கவிதைகளை எழுதுவது, படிப்பது, கேட்பது ஆகியவற்றின் சட்டம் என்ன? ஷேக் உஸைமீனு: கவிதைகளை படிப்பது, கேட்பது, எழுதுவது ஆகியவை குறித்த சட்டம், அதில் உள்ள பொருளை பொறுத்து அமைகிறது. அந்த கவிதையில் உள்ளது, நன்மையான விடயங்களாக இருந்தால், நல்லது. அதில் உள்ளது தீமையாக இருந்தால், அது தீமையானது. அந்த கவிதையில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்றால் அதுவெரும் வீன் பேச்சாகும்,அதில் இருந்து தவிர்ந்து கொள்வது மனிதனுக்கு சிறந்தது. மேலும் பூமியில் பணிவாக நடக்கக்கூடிய அர்ரஹ்மானின் ... Read more