கடன் கொடுத்தவர் யார் என்று மறந்துவிட்டால்

____﷽_____ கேள்வி:கடனை கொடுத்தவரை மறந்தால் என்ன செய்வது. பதில்:ஷைய்ஃக் முஹம்மது பின் ஸாலிஹ் உஸைமீன் (ரஹி) கூறிகின்றார்கள். கடன் கொடுத்தவர் இன்னார் என்று தோன்றினால் அவரிடம் சென்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நபர் ஆம் இந்த தொகையை நீங்கள் என்னிடம் கடனாக பெற்றீர்கள் என்று கூறினால் அந்த நபரிடம் அந்த கடனை அடைக்க வேண்டும்.கடன் கொடுத்த நபர் யார் என்று ஒரு நினைவும் இல்லாதபோது. கடன் கொடுத்தவரை மறந்தால் அதை ஏழைகளுக்கு சதகாவாக கொடுக்கலாம் அல்லது ... Read more

நபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது

﷽ கேள்வி: எப்படி எனக்கு நபி ﷺ அவர்கள் மீதுள்ள நேசத்தை அதிகப்படுத்த முடியும்? பதில்ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹய்லி (حفظه الله) கூறிகின்றார்கள். நீங்கள் நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ அவர்களுடைய வாழ்க்கையை படித்த ஒரு நபருக்கும் அவர் மீது நேசம் அதிகமாகாமலிருப்பதில்லை. நபி ﷺயுடைய ஒரு வாழ்க்கை சம்பவத்தை நீங்கள் இன்று வாசியுங்கள். அதேபோன்று நாளை மீண்டும் அதே சம்பவத்தை வாசித்தாலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக நபிﷺ மீது இன்னும் ... Read more

துஆவின் போது கை உயர்த்துவது

____﷽_____ கேள்வி:பிரார்த்தனை செய்யும்போது கை உயர்த்துவதின் சட்டமென்ன. பதில்:ஷைய்ஃக் சுலைமான் அர்-ரூஹைலி (ஹபிதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள். பிராத்தனை செய்யும்போது கை உயர்த்துவதற்கு மூன்று நிலைகள் இருக்கின்றது. நபி அவர்கள் பிரார்த்தனை செய்யவும் அப்போது கையை உயர்த்தவும் செய்த நேரங்கள். இந்த நேரங்களில் கை உயர்த்துவது சுன்னத்தும், இபாதத்தும் ஆகும்.உதா: ஸஃபா மர்வா ஏறும்போது பிரார்த்தனை செய்யும் பிரார்த்தனை. நபி அவர்கள் கை உயர்த்தாமல் பிரார்த்தனை செய்த நேரங்கள்.இந்த நேரங்களில் கை உயர்த்தல் பித்அத்தாகும். காரணம் நபி அவர்கள் அந்த ... Read more

ஒரு மாணவன் மாணவிக்கு ஸலாம் கூறுவது குறித்த சட்டம்

கேள்வி: நான் ஒரு பல்கலைகழகத்தில் மாணவனாக இருக்கின்றேன், சில நேரங்களில் பெண்களுக்கு ஸலாம் கூறுகின்றேன். இது போன்று ஒரு மாணவர் தன்னுடன் பயிலும் மாணவிக்கு ஸலாம் கூறுவது ஹலாலா அல்லது ஹராமா? பதில்: பெண்களும் ஆண்களும் ஒரே இடத்தில், ஒரே பள்ளியில் கல்வி கற்பது அனுமதிக்கப்பட்டது அல்ல, இது தான் ஃபித்னா எழுவதற்கு ஆகப்பெரிய காரணம். ஆகையால் மாணவ மாணவிகள் இவ்வாறு ஒரே இடத்தில் இணைந்து படிப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல. ஃபித்னா எழாது என்ற நிலையில் ஷரியத் ... Read more

பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா?

கேள்வி: பெண்களின் குரல் அவ்ரத்தானது(அந்நிய-மஹ்ரமல்லாத ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாதது) என்று கூறப்படுகிறதே, அது சரியான கருத்தா? பதில்: புகழனைத்தும் இறைவனுக்கே. ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதரின் மீது உண்டாகட்டும். பெண்களின் குரல் அடிப்படையில் அவ்ரத்தானது அல்ல, ஏனென்றால் பெண்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, முறையிட்டுள்ளனர், மார்க்கம் சம்பந்தமான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்றே நேர்வழி பெற்ற கலீஃபாக்களிடமும் رضي الله عنهم செய்துள்ளனர், அவர்களுக்கு பின்னர் வந்த அமீர்களிடமும். மேலும் அந்நிய ஆண்களுக்கு ... Read more

குஃப்ரின் வகைகள், படித்தரங்கள்

கேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா? அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை ... Read more

கப்ர் ஸியாரத்(சந்திப்பு) செய்வதின் சட்டம் என்ன? பெண்கள் கப்ரு ஸியாரத் செய்வது குறித்த மார்க்க தீர்ப்பு

கேள்வி: கப்ர் ஸியாரத் செய்வது குறித்த சட்டம் என்ன? பதில்: கப்ருகளை ஸியாரத் செய்வது நபி صلى الله عليه وسلم வழிகாட்டிய ஒரு சுன்னத்தான விடையம். முதலில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை தடுத்திருந்தார்கள், பின்னர் கப்ரு ஸியாரத் செய்யுமாறு கட்டளை இட்டார்கள். நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “நான் உங்களை கப்ரு ஸியாரத் செய்வதை விட்டும் தடுத்திருந்தேன். இனி நீங்கள் கப்ரு ஸியாரத் செய்யுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்) ... Read more

இஸ்லாத்தின் பார்வையில் தேசியவாதமும், இனவாதமும்

கேள்வி: மார்கத்தின் பால் மக்களை ஆழைப்பதைவிட, இனம்/மொழியின் அடிப்படையில் மக்களை அழைப்பதற்கு முக்கியத்துவம் தரும் தேசியவாதம்/இனவாதம் பற்றி உங்களின் கருத்து என்ன. இந்த கூட்டம் நாங்கள் மார்கத்தை எதிர்க்கவில்லை, ஆனால் இனவாதம்/தேசியவாதத்திற்க்கு முக்கியத்துவம் தருகிறோம் என்று கூறுகின்றனர்.இந்த அழைப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? பதில்: இந்த அழைப்பு ஜாஹிலியா எனும் அறியாமை ஆகும், இந்த அழைப்பில் இணைவதும், இந்த அழைப்பில் ஈடுபடுவோருக்கு துணை நிற்பதும்,இஸ்லாத்தில் ஆகுமானது அல்ல. இன்னும் கூறினால் இதை தடுப்பது மார்கக் கடமை. ... Read more

பித்அத் என்றால் என்ன

கேள்வி: இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படையில் எப்போது ஒரு செயல் பித்அத் என்று கூறப்படும்? பித்அத் என்பது வெறுமனே வணக்க வழிபாடுகளில் மட்டுமா அல்லது வணக்க வழிபாடுகள் மற்றும் நடைமுறைகளிலும் உள்ளதா? பதில்: பித்அத் என்பது தூய்மையான இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் மக்களால் புதிதாக செய்யப்பட்ட குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படை ஆதாரம் இல்லாத செயல்பாடுகள் ஆகும். நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் ... Read more

குர்ஆன் ஓதிய பிறகு சதகல்லாஹுல் அதீம் என்று கூறுவது

கேள்வி: குர்ஆன் ஓதி முடிக்கும் போது ُصَدَقَ اللّٰه ٱلعَظِيْمُ என்று கூறுவது ‘பித்அத்’ என்று கூறும் பலரை கேட்டிருக்கிறேன். சிலர் இது கூடும் என்றும் அதற்கு ஆதாரமாக (அல்லாஹ் உண்மையே கூறினான், முற்றிலும் நேரான வழியில் சென்ற இப்ராகிம் (அலை) அவர்களை பின்பற்றுங்கள்-3:195) எனும் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். மேலும் சில கல்விமான்கள் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதும் நபரை (ஓதுவதை) நிறுத்த நாடினால் “போதுமானது” என்ற வார்த்தையையே பயன்படுத்தினார்கள் அல்லாஹ் உண்மையே ... Read more