ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர். பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. *முதலாவது :* இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும். *இரண்டாவது :* யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும். அல்லாஹ் ... Read more

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

ஸகாத் பற்றிய  கேள்வி பதில்கள்   3.கேள்வி:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும், மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும் ஒரு உதாரணம் கூறுக? பதில்:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் கால்நடைகள், பயிர்கள், பழங்கள் மற்றும் வியாபாரப் பொருட்களாகும். மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் தங்கம் மற்றும் வெள்ளியாகும். ஏனெனில் இவ்விரண்டும் அசையாமல் இருந்தாலும் இவ்விரண்டின் மூலமாக விரும்பிய நேரத்தில் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும். ⛳ பார்க்க:- “الشرح الممتع للشيخ ابن العثيمين” (1/455)   ... Read more

ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா?

بسم اللــــه الرحمـــــــــن الرحيم ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும் கேள்வி 3️⃣ : ஒருவர் ரமழான் மாத ஆரம்ப (தின)த்தில் (இன்னும் இரவுப்பொழுது இருக்கிறது என்று நினைத்து உறங்கிவிட்டு) ஃபஜ்ருக்குப் பிறகு எழுந்து (சஹர்) சாப்பிடுகிறார், ஆனால் இந்த நாள் ரமழான் என்று அவர் அறிந்திருக்கவில்லை, பின்னர் அவருக்கு (அது பற்றி) தெரிவிக்கப்படுகிறது. அந்நபருக்கு நோன்பு நோற்பது அவசியமா? இல்லையா? பதில் : ஆமாம்.! அந்நபர் கட்டாயம் நோன்பு வைக்க வேண்டும்; மேலும் ... Read more

ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்

கேள்வி:- 1.ஸகாத் என்றால் என்ன? பதில்:- அரபு மொழியில் ஸகாத் என்றால் “வளர்ச்சியடைதல்” ,”அதிகரித்தல்” என்ற கருத்தாகும். மார்க்க ரீதியாக “ஸகாத்” என்றால் “குறிப்பிடப்பட்ட சொத்தில் வரையறுக்கப்பட்ட அளவை குறிப்பிடப்பட்ட கூட்டத்தினருக்கு வழங்குவதற்கு கூறப்படுகிறது”. கேள்வி:- 2.இஸ்லாத்தில் ஸகாத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமும், அந்தஸ்தும் யாது? பதில்:- ஸகாத் என்பது கடமையான ஒன்றாகும்.  இதனுடைய அந்தஸ்தைப் பொறுத்தவரையில், இஸ்லாத்தின் தூண்களில் மூன்றாவதாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழும் ஒருவர் “இது கடமை” என்பதை மறுத்தால், அவர் காபீராகி விடுவார். ஏனெனில், ... Read more

நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣ : நிய்யத் வைப்பதற்கு ஏதேனும் குறிப்பான வார்த்தைகள் உள்ளனவா? மேலும் நிய்யத்தை சத்தமாக கூற அனுமதியுள்ளதா?அதேபோல, நோன்பை முறிக்கும் போது கூறவேண்டிய துஆக்கள் ஏதேனும் உள்ளதா? ஆம் எனில் அந்த துஆவை சத்தமாக ஓதலாமா?   பதில் :   நோன்பின் நிய்யத்தை வைப்பதற்கென (ஸுன்னாவில்) குறிப்பிட்ட வார்த்தைகள் எதுவுமில்லை. ஹஜ் விடயத்தில் கூட ஒரு நபர் எந்த விதமான வணக்க வழிபாட்டுக்கான நிய்யத்தையும் ... Read more

ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா?  

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 1️⃣ : ரமழான் மாதத்தில் ஒவ்வொரு நாள் நோன்பிற்கும் தனித்தனியே நிய்யத் வைப்பது கட்டாயமா? (அல்லது) ரமழான் முழுவதும் நோன்பு நோற்க ஒரு நிய்யத் மாத்திரம் போதுமானதா.? ஒருவர் எப்போது தனது நிய்யத்தை வைக்க வேண்டும்.?   பதில் :   நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :   إنما الأعمال بالنية و إِنَّمَا لِكُلِّ أَمْرِي مَا نَوَى ‘செயல்கள் அனைத்தும் ... Read more

வானியல் கணக்குகளை பின்பற்றாமல் பிறை பார்ப்பது நபிவழியாகும்

கேள்வி: ரமழான் மற்றும், ஈதுல் பித்ர் தொடங்கும் நேரம் குறித்து முஸ்லிம் அறிஞர்களிடையே பெரும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் பிறை பார்த்தவுடன் செயல்படுகிறார்கள். ஏனெனில் ஹதீஸ்களில், பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; என்று வந்துள்ளது. மற்றவர்கள், வானியல் நிபுணர்களின் கணக்குகளை நம்பி, இந்த விஞ்ஞானிகள் வானியல் அறிவியலில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சந்திர மாதங்கள் எப்போது தொடங்குகிறது என்பதை அவர்களால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் யார் ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

  திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.  நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் ... Read more

 ஜனாஸா தொழுகை தொழும்‌ முறை – ஜனாஸா சட்டங்கள் – இமாம் அல் அல்பானி

ஜனாஸா தொழுகைக்காக 4 அல்லது 5 தக்பீர்‌ கூற வேண்டும்‌. இவை அனைத்தும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ செயலை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. இவற்றில்‌ எதைக்‌ கடைப்பிடித்தாலும்‌ சரியாகிவிடும்‌. நபியவர்கள்‌ நான்கு முறையாகவும்‌ ஐந்து முறையாகவும்‌ தக்பீர்‌ கட்டியுள்ளார்கள்‌. தொழுகையில்‌ தக்பீர்‌ கட்டியவுடன்‌ பாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்‌ ஓதும்‌ துஆக்கள்‌, அத்தஹியாத்தில்‌ ஸலவாத்தில்‌ இப்ராஹீமிய்யா என்பன வித்தியாசப்பட்டது போன்று இவ்வித்தியாசமும்‌ நபியவர்‌களின்‌ நடைமுறையையொட்டியே எழுந்ததாகும்‌. ஒரு மூறையையே பின்பற்ற வேண்டும்‌ என நினைத்தால்‌ 4 தக்பீர்களை வழமைப்படுத்திக்‌ ... Read more