உழ்ஹிய்யா குறித்த சில கேள்வி பதில்கள்

1.இடது கையால் குர்பானிப் பிராணியை அறுப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு : கேள்வி : நான் இடக்கை வழக்கமுடையவன்…. இடக்கையால் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட்டால் அது கூடுமா ? இமாம் இப்னு பாஸ்z (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதில் : நீங்கள் அவ்வாறு இடக்கையால் அறுத்தாலும் அது கூடும். இமாம் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலிருந்து http://www.binbaz.org.sa/noor/10976 மொழியாக்கம் : முஹம்மத் அத்னான் முராத் {السلفي } 2.உழ்ஹிய்யா இறைச்சியை எப்படி பங்கிடுவது???? இமாம் இபின் பாஸ் ... Read more

கடன் வாங்கி உத்ஹிய்யா/குர்பானி கொடுக்கலாமா?

உத்ஹிய்யா கொடுப்பது கடமையா இல்லையா என்பது குறித்து உலமாக்கள் மத்தியில் கருத்து வருபாடு நிலவுகிறது. பெரும்பாலான அறிஞர்கள் அது ஸுன்னா முஅக்கதா (வலியுறுத்தப் பட்ட சுன்னத்) என்ற கருத்தையே தேர்வு செய்கின்றனர். இதுவே ஷாஃபியி, மாலிகி மற்றும் ஹம்பலி மத்ஹபுகளின் கருத்தாகும். சிலர் அது கடமை என்று கூறுகின்றனர். இதுவே ஹனஃபி மத்ஹபின் கருத்தாகும். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் இரு கருத்துகளில் இதுவும் ஒன்று. ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமியா ... Read more

மன்ஹஜூஸ் ஸலஃப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம் – அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்-ருஹைய்லி ஹஃபிதஹுல்லாஹ்

கேள்வியாளர் : ஸலஃபி மன்ஹஜை பற்றிய தெளிவும், விளக்கமும் எனக்கு வேண்டும். ஏனென்றால், தற்போது நமக்கு மத்தியில் இருக்கின்ற ஒவ்வொரு கூட்டமும் (தான்தான்) சத்தியத்தில் இருப்பதாக உரிமை கொண்டாடுகின்றன. அதற்கு அஷ்ஷைஃக் ஸுலைய்மான் அர்-ருஹைய்லி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் : [இதனை விளக்குவதற்கு பத்து நாட்கள் தேவை, (எனினும் நிகழ்ச்சியின் காரணமாக) தன்னிடத்தில் பத்து நிமிடங்கள் தான் இருப்பதாக கூறுகின்றார், அதிலும் சில நிமிடங்கள் கழிந்த விட்டன.] எனினும் அதற்குறிய பதிலாவது: மன்ஹஜுஸ் ஸலஃபானது, தெளிவான மன்ஹஜாகும் ... Read more

இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன?

கேள்வி: இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன? பதில்: “ஏகத்துவக் கொள்கைகளை அல்குர்ஆன், நபிமொழி மற்றும் நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (நபித்தோழர்கள், அவர்களை பின்தொடர்ந்த தாபிஈன்கள், அவர்களை பின்தொடர்ந்த தபஉத் தாபிஈன்கள்) விளக்கங்களிலிருந்தும் நாம் எடுக்க வேண்டும். (இதற்கு மாறாக) மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான கலாச்சாரத்திலிருந்தும், அங்கிருந்தும் இங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளிலிருந்து ஏகத்துவக் கொள்கைகளை எடுப்பதில் எவ்விதமான பயன்களையும் நாம் அடைந்து ... Read more

ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி ... Read more

அல்குர்ஆன் உள்ள அறையில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?

கேள்வி: குர்ஆன் உள்ள அறையில்(வேறு எந்த அறையும் இல்லாத நிலையில்) மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா? பதிலின் சுருக்கம்: (இங்கு கேள்வியானது) முஷாஃப் இருக்கும் ஒரு அறையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது குர்ஆனை அவமதிப்பதாகுமா என்பதுதானே தவிர மாறாக அறைகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது அல்ல. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆனுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம்: அல்குர்ஆனுக்கு மரியாதை தருவதும் அதைக் கவனமாகக் ... Read more

ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன?அது கட்டாய கடமையா?

கேள்வி ஷவ்வால் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதன் சட்டம் என்ன? அது கட்டாய கடமையா? பதிலின் சுருக்கம்: ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பவர் ஒரு வருடம் முழுவதும் நோன்பு நோற்றது போல் அவருக்கு நற்கூலியைப் பதிவு செய்திருப்பார். மேலும் அறிய, விரிவான பதிலைப் பார்க்கவும். பதில்: உள்ளடக்கம்: • ஷவ்வால் நோன்பு கடமையா? • ஷவ்வால் 6 நாட்கள் நோன்பு நோற்பதன் சிறப்புகள் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஷவ்வால் நோன்பு கடமையா? ரமழானின் கடமையான நோன்பிற்குப் ... Read more

ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா?

கேள்வி : ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா? ஆம் என்றால், இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒருவர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தாலோ, அல்லது ஷவ்வால் மாத பிறையை தான் பார்த்து, அத்தகவலை காழியிடமோ அல்லது ஊர் மக்களிடமோ சொல்லும்போது அவர்கள் அவருடைய சாட்சியை ஏற்கவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு நோற்க வேண்டுமா? அல்லது மக்களுடன் சேர்ந்து நோன்பு இருக்க வேண்டுமா? எனும் விடயத்தில் ... Read more

பெருநாள் தர்மம் (ஸகாத்துல் ஃபித்ர் – زكاة الفطر) தொடர்பான 30 கேள்விகளும் – அதற்கான பதில்களும்

بســـم اللــه الرحــمــن الـرحـــيــم பெருநாள் தர்மம் (ஸகாத்துல் ஃபித்ர் – زكاة الفطر) தொடர்பான 30 கேள்விகளும் – அதற்கான பதில்களும் _- அஷ்ஷெய்க் அபூ பிலால் ஹதரமீ அல்-யமானி (حفظه الله) அவர்களது பாடத்திலிருந்து தொகுக்கப்பட்டது._ 1. ஸதகத்துல் ஃபித்ர் என்றால் என்ன.? பதில் : ‘ஸதகா’ என்பது அல்லாஹ்வின் கூலியை நாடி கொடுக்கப்படக்கூடியதாகும். ஃபித்ர் என்பதன் மொழியியல் அர்த்தம் : நோன்பின் முடிவு பகுதி. மார்க்க ரீதியில், ‘ஸகத்துல் ஃபித்ர்’ என்பது நோன்பின் ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more