ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04 6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :   நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :   1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :   அப்துல்லாஹ் இப்னு ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03   

  ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03     4) பற் துலக்குதல் :   பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று :   1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02   ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் :   1.நிய்யத் அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 01

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -01 சுவர்க்கத்தின் திறவுகோலாக தொழுகை அமைந்திருப்பது போல் தொழுகையின் திறவுகோலாக வுழூ அமைந்திருக்கிறது என்பது நபி மொழியாகும் (திர்மிதி).   தொழுகை என்ற உயர்ந்த, உன்னதமான வணக்கத்தை ஓர் அழகிய அரண்மனையாக கற்பனை செய்தால் அதை திறக்கும் திறவுகோலாக வுழூவை கருத முடியும். அனைத்தலுகினதும் இரட்சகனான அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் உரையாடல் என நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட வணக்கமாகிய தொழுகையை வுழூ இன்றி நிறைவேற்றவே முடியாது என்பதன் மூலம் வுழூவின் முக்கியத்துவத்தை நாம் ... Read more

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் |

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய மார்க்கத்தை ... Read more

ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன?

ஈத் நாள் வெள்ளிக்கிழமை அன்று வந்தால், ஈத் தொழுகையை ஒருவர் இமாமுடன் தொழுதிருந்தால், அன்றைய தினம் அவர் மீது ஜும்ஆ தொழுவது கடமை அல்ல, சுன்னத் மட்டும் தான். அவர் ஜும்ஆ தொழுகைக்கு வரவில்லை என்றால் அவர் மீது ளுஹர் தொழுவது கடமை. இச்சட்டம் இமாம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான். இமாமைப் பொறுத்தவரை அவர், ஜும்மா தோழ வேண்டும் முஸ்லிம்களுக்கு ஜுமுஆ தொழுகை நடத்துவது அவர் மீது கடமை. மக்கள் அனைவரும் முற்றிலுமாக ஜும்ஆ தொழுகையை விட்டு ... Read more

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்   கேள்வி:-   என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.   பதில்:-   தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:   பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.   ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 2   திக்ரானது துஆவை விடச் சிறந்தது   துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.   இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 1️⃣

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் 1️⃣ | திக்ர் மூன்று வகைப்படும்: அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நினைவுகூர்தல், அவனைப் போற்றிப்புகழ்தல், அவன் எந்தக் குறைகளும் அற்றவன் என அவனது தூய்மையைத் துதித்தல் போன்ற செயல்பாடுகள்: இந்த வகை திக்ரை இரண்டாகப் பிரிக்கலாம். 1 : துதி செய்பவர் தன்னளவில் அல்லாஹ்வைப் புகழ்வது. உதாரணமாக: ஸுப்ஹானல்லாஹ் – سبحان الله، அல்ஹம்துலில்லாஹ் – الحمد لله، லா இலாஹ இல்லல்லாஹ் – لا اله الا ... Read more