முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள் மற்றும் அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு மறுப்பு

  முஆவியா(رضي الله عنه) அவர்களது சிறப்புகள்   1) முஆவியா(رضي الله عنه) சிறப்பு       قال أبو مسهر عن سعيد بن عبد العزيز عن ربيعة بن يزيد عن عبد الرحمن بن أبي عميرة – وكان من أصحاب النبي صلى الله عليه وسلم – عن النبي – صلى الله عليه وسلم – قال : ( اللهم ... Read more

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது?

ஆஷுரா தின நோன்புடன், முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்க ஏன் அறிவுறுத்தபடுகிறது? கேள்வி- இன்று நான் ஆஷூரா நாள் பற்றிய அனைத்து ஹதீஸ்களையும் படித்துவிட்டேன், ஆனால் யூதர்களுக்கு மாற்றமாக முஹர்ரம் 11 வது நாள் நோன்பு வைக்குமாறு நபி ﷺ கூறிய எந்த ஹதீஸையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக ,“இன்ஷா அல்லாஹ் – அடுத்த ஆண்டில் நான் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று நபி ﷺ ... Read more

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா?

உத்ஹிய்யா கொடுக்கும்போது அகீகாவின் நியத்தையும் சேர்த்து எண்ணிக்கொள்வது அனுமதிக்கப்பட்டதா? புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்காய் ஸலாத்தும் ஸலாமும் அவனின் தூதரின் மீது உண்டாகட்டும். இந்த விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர் அதை அனுமதித்தனர், இதுவே இமாம் அஹ்மதின் மத்ஹபின் கூற்று, சிலர் அது தவறு என்று கூறினர், ஏனென்றால் இவ்விரு காரியங்களின் நோக்கம் வெவ்வாறாக இருப்பதனால். உத்ஹிய்யா கொடுப்பதன் நோக்கம் தனக்காக அறுத்து தியாகம் செய்வது, அகீகா கொடுப்பதன் நோக்கம் குழந்தைக்காக ... Read more

உத்ஹிய்யா கொடுப்பவர் அதை உண்ணும் வரை மற்ற உணவுகளை தவிர்த்துக் கொள்வது சுன்னத்

கேள்வி: குடும்பத்தார் அனைவரும் ஈத் அல் அத்ஹா அன்று உத்ஹிய்யா இறைச்சி உண்ணும்வரை மற்ற உணவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவேண்டுமா? அல்லது குடும்பத் தலைவர் மீது மட்டும் தான் இது கடமையா? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவ்னுக்கே, ஸலாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அவாின் குடும்பத்தார் மீதும் தோழர்களின் மீதும் உண்டாகட்டும். புறைதா رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி صبى الله عليه وسلم ஈதுல் ஃபித்ராவுடைய நாளில் உணவுன்னாமல் வெளியேரமாட்டார்கள், ... Read more

குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால்

கேள்வி: முஸ்லிம் விலங்கை அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால் அது ஹராம் ஆகிவிடுமா? அதை உன்ன அனுமதி இல்லையா? பதில்: முஸ்லிம் விலங்கை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அல்லது உதூ செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அவருடைய பலியிடுதல் உதூ ஆகியவை சரியானவையே. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஹஜ்ஜின் போது ஹதி செய்யும்போதும், ஹஜ்ஜில் ஏற்படும் தவறுகளுக்கு ஃபித்யா கொடுக்கும்போதும் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டாலும் சரியே, இவற்றில் ... Read more

துல்ஹஜ் மற்றும் உழ்ஹிய்யா குறித்த சில மார்க்க தீர்ப்புகள்

1.கேள்வி:வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பான மார்க்க சட்டம் என்ன? அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பாக வினவப்பட்ட போது கீழ் காணுமாறு பதிலளித்தார்கள்: “உன் மீது குற்றம் ஏதும் இல்லாமல் இருக்க ஆதரவு வைக்கிறேன். ஏனெனில், நீ தனியாக அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று நாடவில்லை. மாறாக, அத்தினம் அரஃபா தினம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மாத்திரமே நீ நோன்பு நோற்றாய். என்றாலும், அதனுடன் சேர்த்து வியாழக்கிழமையும் ... Read more

உழ்ஹிய்யா குறித்த சில கேள்வி பதில்கள்

1.இடது கையால் குர்பானிப் பிராணியை அறுப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு : கேள்வி : நான் இடக்கை வழக்கமுடையவன்…. இடக்கையால் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட்டால் அது கூடுமா ? இமாம் இப்னு பாஸ்z (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதில் : நீங்கள் அவ்வாறு இடக்கையால் அறுத்தாலும் அது கூடும். இமாம் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலிருந்து http://www.binbaz.org.sa/noor/10976 மொழியாக்கம் : முஹம்மத் அத்னான் முராத் {السلفي } 2.உழ்ஹிய்யா இறைச்சியை எப்படி பங்கிடுவது???? இமாம் இபின் பாஸ் ... Read more

கடன் வாங்கி உத்ஹிய்யா/குர்பானி கொடுக்கலாமா?

உத்ஹிய்யா கொடுப்பது கடமையா இல்லையா என்பது குறித்து உலமாக்கள் மத்தியில் கருத்து வருபாடு நிலவுகிறது. பெரும்பாலான அறிஞர்கள் அது ஸுன்னா முஅக்கதா (வலியுறுத்தப் பட்ட சுன்னத்) என்ற கருத்தையே தேர்வு செய்கின்றனர். இதுவே ஷாஃபியி, மாலிகி மற்றும் ஹம்பலி மத்ஹபுகளின் கருத்தாகும். சிலர் அது கடமை என்று கூறுகின்றனர். இதுவே ஹனஃபி மத்ஹபின் கருத்தாகும். இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்களிடம் இருந்து அறிவிக்கப்படும் இரு கருத்துகளில் இதுவும் ஒன்று. ஷேக் அல் இஸ்லாம் இப்னு தைமியா ... Read more

இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா?

கேள்வி இஸ்லாத்தில் நிர்வாணமாக குளிக்க அனுமதி உள்ளதா? பதில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் மேனியிலிருந்து சிறிதளவு கூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால் தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக் கொண்டார்கள். அப்போது, பனூ இஸ்ராயீல்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘இவருடைய சருமத்தில் ஏதோ ... Read more

ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?

கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி ... Read more