தொழுகையில் கண்களை மூடலாமா?

بسم الله الرحمن الرحيم தொழுகையில் கண்களை மூடலாமா? தொழுகையில் கண்களை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மூடிக்கொள்வது குற்றமில்லை. உதாரணமாக ஒருவர் தொழுகையை ஆரம்பித்து தொழும்போது, முன்னால் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அல்லது தொழுகையின் கவனத்தை திருப்பக்கூடிய ஏதாவது ஒன்றை அவர் கண்டு கொண்டால் அவர் அச்சமயத்தில் கண்களை மூடுவது குற்றமாகாது. காரணமின்றி கண்களை மூடுவது, இன்னும் அது இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று கருதுவது ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில், இவ்வாறு கண்களை மூடுவது வெறுக்கத்தக்கதாகும். ... Read more

கணவர் இரண்டாவது திருமணம் செய்தால் மனைவி விவாகரத்து கேட்கலாமா ?

கேள்வி : ஒரு பெண் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்ய நாடினால், அவரிடமிருந்து விவாகரத்து கேட்பது ஆகுமானாதா? ஏனென்றால் அந்த பெண்ணினால் சுய மரியாதையின் காரணமாக அவருடன் வாழ முடியாது என்று கூறுகிறாள். ஆகையால் இவ்வாறு விவாகரத்து கோரினால் அவள் மீது குற்றமா? ஷரியத்தில் இதன் சட்டம் என்ன? நிச்சயமாக இந்தப் பெண் தன் கணவனுக்கு இரண்டாவது மனைவிக்கான மஹர் கொடுப்பதில் உதவுவதுதான் பொருத்தமானது. ஏனென்றால் கணவர் தன் மனைவிகள் மத்தியில் நீதியாக இருக்க இயலும், ... Read more

ஜனாஸாவை தூக்கிச்‌ செல்லல்‌, ஜனாஸாவை பின்தொடர்தல் – பாகம் 2

ஜனாஸாவைக்‌ கொண்டு செல்பவர்கள்‌ நடையை விரைவுபடுத்துவது வாஜிபாகும்‌. அபூஹுரைரா (رضي الله عنه) அறிவிக்கிறார்கள்‌: “ஜனாஸாவை வேகமாகக்‌ கொண்டு செல்லுங்கள்‌. ஜனாஸாவுக்குரியவர்‌ நல்லவராக இருந்தால்‌ அவரைச்‌  சீக்கிரமாக நல்லடக்கத்திற்குக்‌ கொண்டு சென்றவராவீர்கள்‌” என நபி (صلى الله عليه وسلم ) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.  (புகாரி, முஸ்லிம்‌, அபூதாவூத்‌, திர்மிதி, இப்னுமாஜா)   இந்த நபிமொழி ஓடாமல்‌ வேகமாக நடப்பதும்‌ கட்டாயம்‌ என்றே வலியுறுத்துகிறது. இதனையே “இப்னு ஹஸீம்‌” (5ம்‌ பாகம்‌, 154, 155ம்‌ பக்கங்களில்‌) உறுதிப்‌ படுத்துகின்றார்‌. ... Read more

சொந்த நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு எனும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது

கேள்வி: அஸ் ஸலாமு அலைகும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” என்று வந்துள்ள ஹதீஸின் நம்பகத்தன்மை என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. அல்லாஹ்வின் தூதரின் மீது ஸலாத்தும் ஸ்லாமும் உண்டாகட்டும். “நாட்டை நேசிப்பது ஈமானின் ஒரு பங்கு” எனும் ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட போலியான ஹதீஸாகும், இது அல்லாஹ்வின் தூதரின் கூற்று அல்ல. அவ்வாறே இமாம் அஸ் ஸகானி, மற்றும் இமாம் அல் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர். பார்க்க ழயீஃப் அல்ஜாமிஃ, ஸில்ஸிலது அஹாதீஸ் அத்ழயீஃபா ... Read more

ஜனாசா சட்டங்கள் – மையித்தைக்‌ கபனிடுதல்‌ – பாகம் 2

ஒரே துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. அல்லது அதற்கதிகமான துணியிலும்‌ கபன்‌ செய்யலாம்‌. முஸ்‌அப்‌ (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்‌) அவர்கள்‌ செய்தது. (இதே பிரிவு பாடத்தில்‌ 34ம்‌ பகுதி) ஆதாரமாக இருக்கின்றது.   இஹ்ராம்‌ கட்டியவராக மரணித்தவரை அவருடைய இரு ஆடைகளிலேயே கபனிடப்பட வேண்டும்‌. (இதற்குரிய ஆதாரம்‌ முன்னர்‌ 17ம்‌ இலக்கத்தில்‌ கூறப்பட்‌டுள்ளது)   கபன் செய்யும் போது சில விடயங்கள் விரும்பத்தக்கது முதலாவது: கபன்‌ துணி வெள்ளையாக இருத்தல்‌.    “நீங்கள்‌ வெண்மையான ஆடைகளை அணியுங்கள்‌. ... Read more

ஜனாசா சட்டங்கள் – மையித்தைக்‌ கபனிடுதல்‌ – பாகம் 1

ஒரு மையித்தைக்‌ குளிப்பாட்டி முடிந்தவுடன்‌ அதனைக்‌ கபனிடுவது கட்டாயமாகும்‌. அதற்குரிய நபி மொழி ஆதாரம்‌ மூன்றாவது பிரிவில்‌ கூறப்பட்டுள்ளது. (இஹ்ராம்‌ கட்டிய நிலையில்‌ வாகனத்திலிருந்து வீழ்ந்து  மரணித்தவர்‌ செய்தியில்‌ பார்த்துக்‌ கொள்ளலாம்‌).   மரணமடைந்தவரின்‌ சொந்தப்‌ பணத்திலிருந்து கபனிடுதல்‌ வேண்டும்‌. வேறு யாராவது முன்‌ வந்தும்‌ செலவு செய்யலாம்‌. கப்பாப்‌ இப்னுல்‌ அரத்‌ (ரழி) அவர்கள்‌ அறிவித்துள்ள நபிமொழி இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.  “நாங்கள்‌ நபி (ஸல்‌) அவர்களோடு அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்‌) சென்றோம்‌. அல்லாஹ்வின்‌ ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 2

இமாம் அல் அல்பானி கூறுகிறார்: இரண்டு நிபந்தனைகளுடன் குளிப்பாட்டுபவர்களுக்கு நிறைந்த நற்கூலி அல்லாஹ்வினால்‌ வழங்கப்‌படுகின்றது. முதலாவது: குளிப்பாட்டுபவர்‌ மையித்தின்‌ உடம்பில்‌ எதாவது குறைபாடுகளைக்‌ கண்டால்‌ அதை வேறு யாருக்கும்‌ கூறாமல்‌ மறைத்து விட வேண்டும்‌. “ஒரு முஸ்லிமைக்‌ குளிப்பாட்டி அவரிலுள்ள குறைபாடுகளை வெளியிடாது மறைத்துக்‌ கொண்டால்‌ நாற்பது முறை அல்லாஹ்‌ குளிப்பாட்டியவனை மன்னிக்கிறான்‌. கப்ரு தோண்டியவனுக்கு நல்லிருப்பிடத்தை மறுமை வரை அளிக்கின்றான்‌. கபனிட்டவனுக்கு அல்லாஹ்‌ மறுமையில்‌ சுவர்க்கத்தில்‌ மெல்லியதும்‌ அழுத்தமான துமான உடைகளை அணிவிக்கின்றான்‌” என நபி ... Read more

மையித்தைக்‌ குளிப்பாட்டுதல்‌ – பாகம் 1

இமாம் அல் அல்பானி கூறுகிறார் ஒருவர்‌ இறந்து விட்டால்‌ ஏனைய மக்கள்‌ சிலரின்‌ மீது மரணித்தவரைக்‌ குளிப்பாட்ட அவசரப்படுவது கடமையாகும்‌. இவ்வாறு அவசரப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை மூன்றாம்‌ பிரிவில்‌ கூறிவிட்டோம்‌. குளிப்‌பாட்டுவதற்குரிய ஆதாரத்தையும்‌ முன்னரே கூறிவிட்டோம்‌. ஹஜ்ஜுக்‌ கடமையின்‌ போது வாகனத்திலிருந்து விழுந்து கழுத்து முறிந்து இறந்த தோழரை தண்ணீரினாலும்‌, இலந்தையிலையினாலும்‌ குளிப்பாட்டுங்கள்‌…. என்ற நபிமொழி முதலாவதாகவும்‌, இரண்டாவதாக நபி (ஸல்‌) அவர்களின்‌ மகள்‌ ஜைனப்‌ (ரழி) அவர்கள்‌ மரணமடைந்த வேளை அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ... Read more

மரணித்தவரை மக்கள்‌ புகழ்தல்‌

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார: உண்மையான முஸ்லிமாக மரணித்தவருக்கு அயல்‌ ஊரிலுள்ள அவரையறிந்த முஸ்லிம்கள்‌ பலர்‌ அவரைப்பற்றி நல்லது கூறுவார்களேயானால்‌ அவரும்‌ சுவனவாசியே யாவார்‌. மரணித்தவரைப்‌ போற்றுபவர்கள்‌ குறைந்த பட்சம்‌ இரண்டு பேராயிருப்பினும்‌ சரியே! இதற்கு ஆதாரமாகப்‌ பல நபிமொழிகள்‌ உள்ளன. அவற்றில்‌ மூன்று நபிமொழிகளை மட்டும்‌ இங்கு பார்ப்போம்‌.   ௮. அனஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:  ‘நபியவர்களுக்குப்‌ பக்கத்தில்‌ ஒரு ஜனாஸா ஊர்வவம்‌ சென்றது.    ... Read more