தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா??

கேள்வி: தற்போது நம்மத்தியில் உள்ள அனைத்துக் கூட்டத்தினரும் அழிவை ஏற்படுத்தும் 72 கூட்டத்தினருக்குள் நுழைவார்களா? பதில்:- ஆம், இஸ்லாத்தின் பால் தம்மை இணைத்துக் கொண்ட எந்தவொரு கூட்டத்தினராவது, அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அழைப்புப் பணியிலோ அல்லது கொள்கையிலோ அல்லது ஈமானின் அடிப்படை அம்சங்களின் ஒன்றிலோ மாற்றம் செய்வார்களாயின் அந்த வழிகெட்ட கூட்டத்தினுள் அவர்கள் நுழைந்து விடுவார்கள். மேலும், அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினரருக்கு அவர்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு (மறுமையில்) இழிவும், தண்டனையும் கிடைக்கும். ... Read more

நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?

நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா? விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும்.‌ எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) ஓட்டுவது ... Read more

அகீதாவில் கவனம் செலுத்துவது குறித்த இளைஞர்களுக்கான உபதேசம்…!

கேள்வி: தற்போதைய காலகட்டத்தில் வாலிபர்கள் இஸ்லாமிய கொள்கையை (அகீதாவை) கற்பதில் பாராமுகமாக இருக்கின்றனர். அத்துடன், வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வாலிபர்களுக்கு நீங்கள் என்ன உபதேசம் செய்ய விரும்புகிறீர்கள்?? பதில்: “எல்லா விடயங்களுக்கும் முன் முதலில் கொள்கையில் (அகீதாவில்) கவனம் செலுத்துமாறு வாலிபர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன். ஏனெனில், அதுவே (இஸ்லாத்தின்) அத்திவாரமாகும். அதன் மீது தான் அனைத்து அமல்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. எனவே, அகீதா சரியானதாக இருப்பதோடு மனத்தூய்மையுடனும், நபி ... Read more

இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன?

கேள்வி: இஸ்லாமிய கொள்கையை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்? சிந்தனை ரீதியாக எழுதப்பட்ட நூற்களிலிருந்து எடுப்பதன் சட்டம் என்ன? பதில்: “ஏகத்துவக் கொள்கைகளை அல்குர்ஆன், நபிமொழி மற்றும் நமது முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்களின் (நபித்தோழர்கள், அவர்களை பின்தொடர்ந்த தாபிஈன்கள், அவர்களை பின்தொடர்ந்த தபஉத் தாபிஈன்கள்) விளக்கங்களிலிருந்தும் நாம் எடுக்க வேண்டும். (இதற்கு மாறாக) மக்கள் மத்தியில் காணப்படும் பொதுவான கலாச்சாரத்திலிருந்தும், அங்கிருந்தும் இங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட சிந்தனைகளிலிருந்து ஏகத்துவக் கொள்கைகளை எடுப்பதில் எவ்விதமான பயன்களையும் நாம் அடைந்து ... Read more

பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா?

  கேள்வி: ரியாத் நகரில் வசிக்கும் அஹ்மது மிஸ்ரி என்பவர் கேட்கிறார்: கண்ணியம் மிகுந்த ஷேக், பொருளாதாரம் என்பது அருட்கொடையா அல்லது சோதனையா? பதில்: பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளும், அவனின் சோதனைகளும் ஆகும். அல்லாஹ் கூறுகிறான்: وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.( அல் ... Read more

அல்குர்ஆன் உள்ள அறையில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா?

கேள்வி: குர்ஆன் உள்ள அறையில்(வேறு எந்த அறையும் இல்லாத நிலையில்) மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது குறித்த தீர்ப்பு என்ன? இது குர்ஆனை அவமரியாதை செய்வதாகக் கருதப்படுமா? பதிலின் சுருக்கம்: (இங்கு கேள்வியானது) முஷாஃப் இருக்கும் ஒரு அறையில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளுதல் என்பது குர்ஆனை அவமதிப்பதாகுமா என்பதுதானே தவிர மாறாக அறைகள் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருத்தது அல்ல. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆனுக்கு மரியாதை காட்டுவதன் முக்கியத்துவம்: அல்குர்ஆனுக்கு மரியாதை தருவதும் அதைக் கவனமாகக் ... Read more

“பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குஃப்ர் ஏற்படுத்துபவர்களுக்கான மறுப்பு

கேள்வி: புஹாரியில் உள்ள “பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலமாக முஆவியா ரழியல்லாஹு‌அன்ஹு அவர்கள் காஃபிர் என்பதற்கு தெளிவான ஆதாரம்‌ என்று ராபிழா(ஷிஆ)க்களின் சிலர் கூறுகின்றனர்.இந்த தவறான வாதத்திற்கு இணையத்தில் பதில்கள் ஏதும் இல்லை.தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் பதில்: முதலில் நபித்தோழர்கள் விஷயத்தில் நபியவர்களுடன் தோழமை கொள்வதற்கு அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதால் அவர்கள் மீது நல்லெண்ணம் ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more

இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா?

கேள்வி: இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அறிவைத் தேடுவது நற்செயல்களில் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் இது ஒரு நபர் தனது நேரத்தை செலவிடுவதற்கான சிறந்த வழியாகும்,மேலும் முஸ்லிமை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சிறந்த பாதையாகும். இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள்: கல்வி கற்பது என்பது இறைவழிபாடுகளில் ஒன்று. ஜாமி’ பயான் அல்-இல்ம் (1/104). சுஃப்யான் அத்-தவ்ரி(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: ... Read more

நான்கு மத்ஹப்களில் ஏதேனும் ஒன்றைப் பின்னற்றுவது அவசியமா?

கேள்வி: நான்கு மத்ஹப்களில் ஏதேனும் ஒன்றைப் பின்னற்றுவது அவசியமா? பதில்: ஒரு முஸ்லிமுக்கு நான்கு மத்ஹப்களில் ஏதேனும் ஒரு மத்ஹபில் இணைந்து கொள்வது அனுமதிக்கப்பட்டது என்பதே அதிகமான உலமாக்களில் கருத்தாகும். நான்கு மத்ஹப்களில் ஒன்றில் இணைவது அனுமதியுள்ளது ஆனால் அவசியம்,கட்டாயம் கிடையாது ஒரு முஸ்லிமிற்கு இணைந்து கொள்ளவும் முடியும் இணையாமல் இருக்கவும் முடியும். ஆனால் குறித்த ஒரு மத்கபைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது ஹராமாகும்.ஒருபோதும் இப்படி நடப்பது கூடாது. யாருடைய ஆதாரம் பலமாக இருக்கின்றதோ அப்படியான அங்கீகரிக்கப்பட்ட உலமாக்களின் ... Read more