ரமலானுக்கு தயராவதற்கான 10 குறிப்புகள்

  நாம் ரமழானுக்கு எப்படி தயாராக வேண்டும்? இந்த புனித மாதத்தில் செய்யும் அமல்களிலேயே மிகச் சிறந்த அமல்கள் என்ன? பதிலின் சுருக்கம் ரமலானுக்காக தயராகவது 1) உளப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்பது 2) துஆ(பிராத்தனை) செய்வது 3) புனித மாதம் வருவதால் சந்தோஷம் அடைவது 4) விடுபட்ட நிலுவையில் உள்ள கடமையான நோன்புகளை நோற்பது 5) மார்க்க அறிவை தேடுவது 6) வழிபாடுகளைச் செய்வதிலிருந்து உங்களைத் திசைதிருப்பக்கூடிய  பணிகளையு விரைந்து முடிப்பது. 7) குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து ... Read more

குறிப்பிட்ட ஒரு நபருடன் திருமணம் ஆக வேண்டும் என்று துஆ கேட்பது

கேள்வி : நான் அறிந்த பெண் ஒருவள் இருக்கிறாள், பல நேரம் அவள் எனது மனைவியாக வேண்டும் என்று இறைவனிடம் துஆ கேட்கிறேன், அவ்வாறு துஆ கேட்கும் பொது சில நேரம் என் இதயத்தில் படபடப்பு ஏற்படுகிறது, சில நேரம் இவ்வாறு குறிப்பிட்டு துஆ கேட்காமல் பொதுவாக கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன், இருந்த போதும் பல நேரம் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டே கேட்க என் உள்ளம் நாடுகிறது. நான் என்ன செய்ய வேண்டும், பொதுவாக ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்டவை என சித்தரிக்கப்படும் போலியான விடயங்கள

அறிஞர்கள் சிலர் யுத்தங்களில் மேளம் முழங்குவதை ஹலாலெனக்கருதினர். அவ்வாறே சமகால சில அறிஞர்கள் இராணுவத்தினரால் பாடப்படும் இசையையும் இதனுடன் இணைத்துள்ளனர். பின்வரும் நியாயங்களின் அடிப்படையில் இதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. *முதலாவது :* இசை ஹராம் என்று விளக்கும் ஹதீஸ்களிலிந்து இப்படியொரு விளக்கம் அளிப்பதற்கு எதுவித முகாந்திரமுமில்லை. இது வெறுமனே செல்லுபடியற்ற ஓர் அபிப்பிராயம் மாத்திரமேயாகும். *இரண்டாவது :* யுத்தங்களின் போது முஸ்லிம்கள் முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்ப வேண்டும் என்பதே அவர்களின் பொறுப்பாகும். அல்லாஹ் ... Read more

இசையில் அனுமதிக்கப்பட்ட விடயங்கள்

  திருமண வைபவங்கள் மற்றும் பெருநாள் தினங்களில் பெண்கள் சலங்கை மணிகள் இல்லாத ரப்பான் (துஃப்) அடிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல ஏற்கத்தக்க ஆதாரங்கள் உள்ளன. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “திருமணம் போன்ற வைபவங்களில் பல்வேறு வகையான கேளிக்கை விடயங்களை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள். அந்த வகையில் திருமணம் மற்றும் ஏனைய மங்கலகர நிகழ்வுகளின் போது பெண்கள் ரப்பான் அடிப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்.  நபியவர்களது காலத்தில் இருந்த ஆண்களைப் பொறுத்தவரை, அவர்கள் யாரும் ... Read more

 ஜனாஸா தொழுகை தொழும்‌ முறை – ஜனாஸா சட்டங்கள் – இமாம் அல் அல்பானி

ஜனாஸா தொழுகைக்காக 4 அல்லது 5 தக்பீர்‌ கூற வேண்டும்‌. இவை அனைத்தும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ செயலை அடிப்படையாகக்‌ கொண்டதாகும்‌. இவற்றில்‌ எதைக்‌ கடைப்பிடித்தாலும்‌ சரியாகிவிடும்‌. நபியவர்கள்‌ நான்கு முறையாகவும்‌ ஐந்து முறையாகவும்‌ தக்பீர்‌ கட்டியுள்ளார்கள்‌. தொழுகையில்‌ தக்பீர்‌ கட்டியவுடன்‌ பாத்திஹா சூரா ஓதுவதற்கு முன்‌ ஓதும்‌ துஆக்கள்‌, அத்தஹியாத்தில்‌ ஸலவாத்தில்‌ இப்ராஹீமிய்யா என்பன வித்தியாசப்பட்டது போன்று இவ்வித்தியாசமும்‌ நபியவர்‌களின்‌ நடைமுறையையொட்டியே எழுந்ததாகும்‌. ஒரு மூறையையே பின்பற்ற வேண்டும்‌ என நினைத்தால்‌ 4 தக்பீர்களை வழமைப்படுத்திக்‌ ... Read more

இசை பற்றிய இமாம்களின் கூற்று

இசை தடுக்கப்பட்ட அசத்தியமான விடயங்களைச் சார்ந்ததாகும் என்று அல்காசிம் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.  வலீமா வைபவத்தில் (இசை போன்ற) வீணான செயல்கள் இடம்பெறுமானால், அவர்களின் அழைப்புக்கு பதிலளிக்கப்படமாட்டாது என்று அல் ஹஸன் (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அல் ஜாமிஃ லில் கௌரவானி. பக்கம் 262-263 ) “அனைத்து விதமான இசைக்கருவிகளும் ஹராமாகும்” என்று நான்கு மத்ஹப்களின் இமாம்களும் கூறியுள்ள னர். “விபச்சாரம்,பட்டு,மது,இசை போன்றவற்றை ஹலாலெனக்கருதும் ஒரு கூட்டத்தினர் எனது சமூகத்தில் தோன்றுவார்கள் அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் உருமாற்றம் ... Read more

இசை, நடனம், மற்றும் பாடல் தொடர்பான இஸ்லாத்தின் தீர்ப்பு – பாகும் 1

கேள்வி: இசை, நடனம் மற்றும் பாடல் என்பன இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் பொதுவாகவே கேள்விப்பட்டிருக்கிறேன். எனது கேள்வி:ஆண், பெண் கலப்பில்லாமலும் மது பரிமாறப்படாமலும் இருக்கும் நிலையில், இசை, பாடல் மற்றும் நடனம் என்பன இடம்பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று நிறைய கட்டுரைகள் இருப்பதை நான் ஒரு இணையதளத்திற்குச் சென்ற போது பார்த்தேன். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைத்து நபியவர்கள் இதற்கு இணக்கம் தெரிவித்ததாக நிரூபிக்க முயல்கின்றனர். எனக்கு ... Read more

அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும் என்று துஆ கேட்பது

கேள்வி: ” அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்” என்று துஆ செய்வது குறித்த சட்டம் என்ன? பதில்: புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உசைமீன் கூறினார்கள்: “நீண்ட ஆயுளை மட்டும் கேட்பது உகந்தது அல்ல. ஏனென்றால் நீண்ட ஆயுள் என்பது நன்மையாகும் அமையலாம், தீமையாகவும் அமையலாம், ஏனெனில் நீண்ட காலம் வாழ்ந்தும் கெட்ட செயல்களில் தன் வயதை கழித்தவனே மக்களில் மிக மோசமானவன் ஆவான். ஆகையால் ‘நன்மையான செயல்களை ... Read more

மது அருந்துவது, வட்டி வாங்குவது, விபச்சாரம் செய்வது போன்ற பாவங்கள் செய்வோருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது.

கேள்வி 1): மது அருந்தும் வழக்கம் உடையவர், மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா? உங்களிடம் நல் உபதேசத்தை எதிர்பார்க்கிறேன், அல்லாஹ் நற்கூலியை உங்களுக்கு வழங்கட்டும். பதில்: ஆம், பாவம் செய்பவர்களாக இறந்தவர்களுக்கு, அவர்கள் முஸ்லிமாக இருந்திருந்தால் ஜனாஸா தொழவேண்டும். அவர் மது அருந்துபவராக இருந்தாலும், அல்லது பெற்றோருக்கு மாறுசெய்பவராக இருந்தாலும், அல்லது உறவுகளை துண்டிப்பவராக இருந்தாலும், அல்லது வட்டி வாங்குபவராக இருந்தாலும், அல்லது இது போன்ற ஏனைய பாவங்கள் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவருக்கு ஜனாஸா தொழவேண்டும். ... Read more

சுவர்க்கத்தில் விமானங்களும் விமான நிலையங்களும் இருக்குமா?

கேள்வி : எனது கேள்வி சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம், ஒருவன் இவ்வுலகில் எதையாவது மிகுந்த அன்புடன் நேசித்தால், அவன் அதை சுவர்க்கத்தில் பெறுவானா? உதாரணமாக, அவன் விமானங்களை விரும்பினால், அவற்றை சுவர்க்கத்தில் பெறுவானா ? விமான நிலையமும் அங்கு இருக்குமா ? பதில் :அல்ஹம்துலில்லாஹ். இந்தக் கேள்வி சிறுபிள்ளைத் தனமானதல்ல, மாறாக நல்லதைக் கேட்டுப் பலனடைவதற்கும் சுவர்க்கத்தின் மீதான ஆசையையும்,அதனை அடைவதற்கான நற்கருமங்களை அதிகப்படுத்துவதற்கும் காரணமாக அமையக்கூடிய மார்க்கம் சார்ந்த அறிவுபூர்வமான விடயமாகவே இது உள்ளது. சில நபித்தோழர்கள் ... Read more