ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 2️⃣2️⃣ :

ரமழானின் பகல் பொழுதில் (நோன்பு நோற்ற நிலையில்) தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?

 

📝பதில் :

 

நபி ﷺ அவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :

 

“அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ﷺ) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றார். நபி (ﷺ) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ﷺ) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள்.. அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக்கூடையாகும். நபி (ﷺ) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய(வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது? உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடைய வீட்டார் எவருமில்லை என்று கூறினார், அப்போது நபி (ஸல்) அவர்கள் போ! (போய்) உன் வீட்டாருக்கு இதை உண்ணக் கொடு என்று கூறினார்கள்.”

(நூல் : ஸஹீஹ் புகாரி 2600)

 

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில்,

 

✅ நோன்பு நோற்ற நிலையில் உடலுறவு கொண்ட நபரிடம் அடிமைகள் இருந்து அதனை அவர் விடுவிக்க முடியுமாக இருந்தால், அவர் அதனை செய்யட்டும்;

 

✅ அவ்வாறு முடியாவிட்டால், அவர் தொடர்ச்சியாக 2 மாதங்கள் நோன்பு நோற்கட்டும்.

 

✅ நோன்பு நோற்க சக்திபெறாதவர், அதற்கு பகரமாக 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

 

✅ நோன்பு நோற்க சக்திபெற்றுள்ள நபர், ஏழைகளுக்கு உணவளிக்க முடியாது. ஏனெனில் ஏழைகளுக்கு உணவளிப்பதானது வசதியுள்ள ஒருவருக்கு மிக லேசான காரியமாகும்; அதேசமயம் 2 மாதம் நோன்பு நோற்பதானது கடினமானதாகும்.

 

📝மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply