ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 1️⃣8️⃣ :

ரமழானின் பகல்பொழுதின்போது மயக்கம், தன்னிலை மறத்தல், வாந்தி போன்றவை (ஒருவருக்கு) ஏற்பட்டால் அதனுடைய மார்க்கச் சட்டம் என்ன..?

 

📝 பதில் :

 

மயக்கம், வாந்தி போன்றவற்றின் மூலமாக நோன்பு முறியாது.

ஏனென்றால் நபி ﷺ அவர்கள் கூறுவதாவது :

 

مَن ذَرَعَهُ القَيْءُ و هو صائمٌ فليس عليه قضاء ، و مَنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ

“(வேண்டுமென்றே இல்லாமல் எதேச்சையாக) ஒருவர் வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க தேவையில்லை. ஆனால் ஒருவர் வேண்டுமென்றே வாந்தி எடுத்தால், அவர் அந்த நோன்பை திரும்ப வைக்க வேண்டும்.”

 

பார்க்க : [முஸ்னத் அஹ்மத் 10463, அபூதாவூத் 2380, திர்மிதீ 720 || இமாம் அல்பானி رحمه الله அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என இர்வாவுல் ஙலீல் (4/51)-ல் கூறியுள்ளார்கள்].

 

கேள்வி 1️⃣9️⃣ :
ரமழானின் பகல் நேரத்தில் நீச்சல் மற்றும் Diving செய்வதன் மார்க்கச் சட்டம் என்ன..?

📝 பதில் :
(அவ்வாறு செய்யலாம்), ஆனாலும் தண்ணீர் அவரது தொண்டையை அடையாதவாறு பார்த்துக்கொள்வது முக்கியமானது.

குறித்த நபர் கடலில் குளிக்கும்போது கடல்நீர் உப்பாக இருந்தால், அது தொண்டையை சென்றடைய வாய்ப்புள்ளது. நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் நான் கடலில் நீந்தியுள்ளேன்; நாம் கவனிக்காத போது கடல்நீர் நம் தொண்டையை அடைந்துவிடும். எனவேதான் (நோன்பு நோற்ற நிலையில்) கடலில் குளிப்பதை தவிர்க்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.

கடல்நீர் உப்பாக இல்லாவிட்டால், அது நம் தொண்டையை அடையாது, எனினும் சிலபோது அவ்வாறு அடைய வாய்ப்புள்ளது.

📝 மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply