ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 01

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -01 சுவர்க்கத்தின் திறவுகோலாக தொழுகை அமைந்திருப்பது போல் தொழுகையின் திறவுகோலாக வுழூ அமைந்திருக்கிறது என்பது நபி மொழியாகும் (திர்மிதி).   தொழுகை என்ற உயர்ந்த, உன்னதமான வணக்கத்தை ஓர் அழகிய அரண்மனையாக கற்பனை செய்தால் அதை திறக்கும் திறவுகோலாக வுழூவை கருத முடியும். அனைத்தலுகினதும் இரட்சகனான அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் உரையாடல் என நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட வணக்கமாகிய தொழுகையை வுழூ இன்றி நிறைவேற்றவே முடியாது என்பதன் மூலம் வுழூவின் முக்கியத்துவத்தை நாம் ... Read more

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது | ஷெய்க் ஸாலிஹ் அல் பௌஸான் |

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். மேலும், உங்களுடைய மார்க்கத்தை ... Read more

ஈத் வெள்ளிக்கிழமை அன்று வந்தால் ஜும்ஆ தொழுகையின் சட்டம் என்ன?

ஈத் நாள் வெள்ளிக்கிழமை அன்று வந்தால், ஈத் தொழுகையை ஒருவர் இமாமுடன் தொழுதிருந்தால், அன்றைய தினம் அவர் மீது ஜும்ஆ தொழுவது கடமை அல்ல, சுன்னத் மட்டும் தான். அவர் ஜும்ஆ தொழுகைக்கு வரவில்லை என்றால் அவர் மீது ளுஹர் தொழுவது கடமை. இச்சட்டம் இமாம் அல்லாதவர்களுக்கு மட்டும் தான். இமாமைப் பொறுத்தவரை அவர், ஜும்மா தோழ வேண்டும் முஸ்லிம்களுக்கு ஜுமுஆ தொழுகை நடத்துவது அவர் மீது கடமை. மக்கள் அனைவரும் முற்றிலுமாக ஜும்ஆ தொழுகையை விட்டு ... Read more

ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா?

கேள்வி   ஸகாத்துல் ஃபித்ரை சர்க்கரை, தேநீர் மற்றும் டின்னில் அடைத்த பொருட்கள் (இன்னும் இது போன்ற மற்ற பொருட்கள்) போன்றவற்றில் இருந்து கொடுக்கலாமா?   பதில்   அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.   முதலில்:   மக்கள் முக்கிய உணவாகக் கருதும் பொருட்களைத் தவிர, ஸகாத்துல் ஃபித்ராக வேறு பொருட்களை கொடுப்பது அனுமதிக்கப்பட்டது அல்ல.   ஸஹிஹுல் புகாரியில் அபூ ஸயீத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஹதீஸின் மூலம் இது உறுதிபடுத்தபடுகிறது.   ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣5️⃣ : ரமழானின் பகல் நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவதன் மார்க்கச் சட்டத்தை அறியாமல், அவ்வாறான செயலில் ஈடுபட்ட நபர் குறித்த சட்டம் யாது..? பதில் : முன்னர் குறிப்பிட்டதுபோல, பரிகாரம் செய்வது அந்நபர் மீது கட்டாயமாகும்; ஏனென்றால், (இது பற்றிய) ஹதீஸ் பொதுவானதாக வந்துள்ளது.   கேள்வி 2️⃣6️⃣ : (ரமழான் நோன்பின்போது) தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣3️⃣ : ரமழானின் பகல் பொழுதில் தம் கணவனை தம்முடன் உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதித்த பெண் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.? அப்பெண் தம் கணவனை தடுக்காததின் சட்டம் என்ன.?   பதில் :   இந்த செயலுக்கு அவள் சம்மதித்தால், பாவம் செய்தவளாக ஆகிவிடுவாள்; அவள் மீதான கடமையான பரிகாரத்தை பொறுத்தமட்டில், அதனை செய்யுமாறு அந்த பெண்ணிற்கோ ... Read more

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்  

بسم اللــــه الرحمـــــــــن الرحيم   ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்   கேள்வி 2️⃣2️⃣ : ரமழானின் பகல் பொழுதில் (நோன்பு நோற்ற நிலையில்) தம் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட நபர் குறித்த மார்க்கச் சட்டம் என்ன.?   📝பதில் :   நபி ﷺ அவர்கள் கூறுவதாக அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :   “அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் ... Read more

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்   கேள்வி:-   என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.   பதில்:-   தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ... Read more

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |  

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் | தொடர் -03 |   குர்ஆனை ஓதுவது திக்ர் செய்வதை விடச் சிறந்ததாகும்:   பொதுவாக திக்ர் செய்வதை விட குர்ஆனை ஓதுவது சிறந்தது. திக்ர் செய்வது துஆ கேட்பதை விடச் சிறந்தது.   ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் பொதுவாக சிறப்புக்குரியதாக இருக்கின்ற ஒன்றை விட அதைவிடச் சிறப்பில் குறைந்த ஒன்று வேறு காரணங்களுக்காக ஏற்றமானதாக, முன்னுரிமை பெறக்கூடியதாக, பயனுள்ளதாக அல்லது கட்டாயமானதாகக் கூட இருக்கலாம். உதாரணமாக றுகூஃ, ஸுஜூத்களில் ... Read more