“பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குஃப்ர் ஏற்படுத்துபவர்களுக்கான மறுப்பு

கேள்வி: புஹாரியில் உள்ள “பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலமாக முஆவியா ரழியல்லாஹு‌அன்ஹு அவர்கள் காஃபிர் என்பதற்கு தெளிவான ஆதாரம்‌ என்று ராபிழா(ஷிஆ)க்களின் சிலர் கூறுகின்றனர்.இந்த தவறான வாதத்திற்கு இணையத்தில் பதில்கள் ஏதும் இல்லை.தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் பதில்: முதலில் நபித்தோழர்கள் விஷயத்தில் நபியவர்களுடன் தோழமை கொள்வதற்கு அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதால் அவர்கள் மீது நல்லெண்ணம் ... Read more

ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

கேள்வி: ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்… ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன? ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ... Read more

ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வகைப்படுத்தியுள்ளது பற்றி தங்களது கருத்து என்ன? 

கேள்வி : இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸுன்னத்தான ஸூபித்துவம், பித்அத்தான ஸூபித்துவம் என்று வகைப்படுத்துகிறாரே!? என்று எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் கேட்கின்றார். குறிப்பாக கலாநிதி முஸ்தபா ஹில்மீ போன்ற ஸலபி அழைப்பாளர்களும் இக்கருத்தை தமது புத்தகங்களில் கூறியுள்ள நிலையில் இதுகுறித்து தங்களது கருத்து என்ன?   பதில் : ஸூபித்துவம் என்பது எவ்வகையிலும் புகழப்படக் கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் அது ஸூபித்துவம். என்றாலும் குர்ஆன் ஹதீஸில் உள்ள ஒரு விடயம் ஸூபித்துவத்தில் இருந்தால் ... Read more

சுவனத்திற்கு இறுதியாக நுழைபவரும் அல்லாஹ்வை பார்ப்பாரா?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சுவனவாசிகளுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கும் மிகப்பெரிய அருள் தான் அல்லாஹ்வின் மிகமகத்தான முகத்தை பார்ப்பதாகும்.அல்லாஹுத்தஆலா நம் அனைவருக்கும் அப்பாக்கியத்தை தருவானாக! சுவனவாசிகள் மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பது பற்றி அதிகமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலிருந்து யாரும் விதிவிளக்காக்கப்பட மாட்டார்கள். ஆதாரங்கள் அனைத்தும் பொதுப்படையாகவே வந்துள்ளது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “சுவனவாசிகள் சுவனத்தில் நுழைந்த பின் ஓர் அழைப்பாளன் “சுவனவாசிகளே! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒன்று உள்ளது என்று கூறுவார் .அதற்கவர்கள் “அது ... Read more