ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

___﷽_____

 

கேள்வி: ரமலானில் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய செய்வது?

 

பதில்:

🎙️ ஷைய்ஃக் அஜீஸ் ஃபர்ஹான் அல்-அனஸி (ஹபீதஹுல்லாஹ்) கூறிகின்றார்கள்:

 

▪️ சர்க்கரை நோயாளிகள் பல வகையில் உள்ளனர்.அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை.

 

▪️ நோன்பு வைக்க இயலுகின்ற சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.

 

▪️ ஆனால் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக நோன்பு நோற்க முடியாதவர்களும் இருக்கிறார்கள்.

 

▪️ அவர்கள் வேறொரு நாளில் அந்த நோன்புகளை கழா செய்ய வேண்டும்.

 

▪️ அதேபோன்று எப்போதும் நோன்பு நோற்க இயலாத சர்க்கரை நோயாளிகளும் இருக்கின்றார்கள்.

 

▪️ அவர்கள் நோன்பு நோற்றால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

 

▪️ அப்படிப்பட்டவர்கள் நோன்பு நோற்பதை தவிர்த்து ஒவ்வொரு நோன்பிற்க்கும் ஃபித்யா (ஒரு ஏழைக்கு உணவளிக்க) வேண்டும்.இதுவே அந்நோன்புக்கான பரிகாரமாகும்.

 

📽️இதை அரபியில் கேட்க :

 

மொழிபெயர்ப்பு: السلفي -கற்கைக்கூடம் Telegram Channel

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply