உஸைமீன்
கேள்வி09: ஸகாத் கடமையான பொருட்கள், சொத்துக்கள் ஸகாத் கொடுப்பவரின் கைவசம் காணப்பட வேண்டும்.இது பற்றிய விளக்கத்தை தரவும்? பதில்:- அதாவது, ஸகாத் கடமையாகும் பொருட்கள், சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட வேண்டும். சில நேரங்களில் இவருக்கு சொந்தமான சொத்துக்கள் வேறொருவரின் கைவசம் காணப்படும். ஆனால் இவருக்கு அவைகள் கிடைப்பதற்கு பல நாட்கள் செல்லலாம். அல்லது சில நேரங்களில் அவைகள் அழிந்து விடலாம். எனவே இப்படிப்பட்ட சொத்துக்களில் ஸகாத் கடமையாக மாட்டாது. ⛳ பார்க்க:- “الشرح الممتع …
நோன்பு குறித்த கேள்வி பதில்கள்
கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன? பதில்: ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது. – மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? …
ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்
கேள்வி: 7.ஸகாத் உடைய அளவீடு என்றால் என்ன? அது ஸகாத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதற்கு ஆதாரம் என்ன? பதில்:- சொத்துக்களில் ஸகாத் கடமையாவதற்கு குறிப்பிடப்பட்ட ஒரு அளவீட்டை மார்க்கம் வைத்துள்ளது. அதை ஒருவர் எத்திக்கொண்டால் ஸகாத் கடமையாகும். இதற்கு அரபு மொழியில் “நிஸாப்b” என்று கூறப்படுகிறது. அந்த அளவீடு ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே ஒருவரிடம் எந்த வித சொத்துக்களும் இல்லையெனில் அவரின் மீது ஸகாத் கடமையாக மாட்டாது. அதேபோல் ஒருவரிடம் சில சொத்துக்கள் காணப்படுகின்றன. …
ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்
கேள்வி: 05. ஸகாத் கடமையாகுவதற்குறிய நிபந்தனைகள் யாவை? பதில்:- 1. ஸகாத் கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். 2. சுதந்திரமானவராக இருக்க வேண்டும். 3. ஸகாத் கொடுக்க வேண்டிய பொருட்கள் (அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட)அளவை அடைந்திருத்தல். 4. அவைகள் அவரின் கைவசம் காணப்பட வேண்டும். 5. அவைகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். ஆனால் பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லை. பார்க்க:- “مجموع فتاوى ورسائل العثيمين” (16/18) கேள்வி: 06. இறை …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)
بسم الله الرحمن الرحيم ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »
ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்
ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள் 3.கேள்வி:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும், மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும் ஒரு உதாரணம் கூறுக? பதில்:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் கால்நடைகள், பயிர்கள், பழங்கள் மற்றும் வியாபாரப் பொருட்களாகும். மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் தங்கம் மற்றும் வெள்ளியாகும். ஏனெனில் இவ்விரண்டும் அசையாமல் இருந்தாலும் இவ்விரண்டின் மூலமாக விரும்பிய நேரத்தில் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும். ⛳ பார்க்க:- “الشرح الممتع للشيخ ابن العثيمين” (1/455) …
ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்
கேள்வி:- 1.ஸகாத் என்றால் என்ன? பதில்:- அரபு மொழியில் ஸகாத் என்றால் “வளர்ச்சியடைதல்” ,”அதிகரித்தல்” என்ற கருத்தாகும். மார்க்க ரீதியாக “ஸகாத்” என்றால் “குறிப்பிடப்பட்ட சொத்தில் வரையறுக்கப்பட்ட அளவை குறிப்பிடப்பட்ட கூட்டத்தினருக்கு வழங்குவதற்கு கூறப்படுகிறது”. கேள்வி:- 2.இஸ்லாத்தில் ஸகாத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமும், அந்தஸ்தும் யாது? பதில்:- ஸகாத் என்பது கடமையான ஒன்றாகும். இதனுடைய அந்தஸ்தைப் பொறுத்தவரையில், இஸ்லாத்தின் தூண்களில் மூன்றாவதாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழும் ஒருவர் “இது கடமை” என்பதை மறுத்தால், அவர் காபீராகி விடுவார். ஏனெனில், …
நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா?
கேள்வி:நெடுஞ்சாலையில் வாகனத்தை அதிவேகமாக ஓட்டுபவரின் மீதான சட்டம் என்ன? வேக பாதையில் அதிக வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவர், தற்கொலை செய்தவராக கருதப்படுவாரா? விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வேகமாக (வாகனம்) ஓட்டியதால் மரணம் அடைந்தவரின் மீதான சட்டம் என்ன? பதில்: அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது நல்லதல்ல ஏனெனில் அதன் காரணமாக விபத்துகளும், ஆபத்துகளும் ஏற்படக்கூடும். எனவே தான் அறிஞர்கள் இதை பற்றி கடுமையாக பேசுகிறார்கள். வேக கட்டுப்பாட்டை மீறி (வாகனத்தை) …
துல்ஹஜ் மற்றும் உழ்ஹிய்யா குறித்த சில மார்க்க தீர்ப்புகள்
1.கேள்வி:வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பான மார்க்க சட்டம் என்ன? அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் வெள்ளிக்கிழமையில் அரஃபா நோன்பு நோற்பது தொடர்பாக வினவப்பட்ட போது கீழ் காணுமாறு பதிலளித்தார்கள்: “உன் மீது குற்றம் ஏதும் இல்லாமல் இருக்க ஆதரவு வைக்கிறேன். ஏனெனில், நீ தனியாக அத்தினத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று நாடவில்லை. மாறாக, அத்தினம் அரஃபா தினம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக மாத்திரமே நீ நோன்பு நோற்றாய். என்றாலும், அதனுடன் சேர்த்து வியாழக்கிழமையும் …
துல்ஹஜ் மற்றும் உழ்ஹிய்யா குறித்த சில மார்க்க தீர்ப்புகள் Read More »
பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா?
கேள்வி: ரியாத் நகரில் வசிக்கும் அஹ்மது மிஸ்ரி என்பவர் கேட்கிறார்: கண்ணியம் மிகுந்த ஷேக், பொருளாதாரம் என்பது அருட்கொடையா அல்லது சோதனையா? பதில்: பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, ஆனால் அல்லாஹ்வின் அனைத்து அருட்கொடைகளும், அவனின் சோதனைகளும் ஆகும். அல்லாஹ் கூறுகிறான்: وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ சோதிப்பதற்காக துன்பத்தைக் கொண்டும் இன்பத்தைக் கொண்டும் உங்களை நாம் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.( அல் …
பொருளாதாரம் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையா அல்லது சோதனையா? Read More »