உஸைமீன்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள்   கேள்வி:-   என்னிடம் ஒரு தொகைப் பணம் உள்ளது. மூன்று வருடங்களாக அதற்கு ஸகாத் கொடுக்கவில்லை. தற்போது நான் எவ்வாறு ஸகாத் வழங்க வேண்டும்.   பதில்:-   தங்கம், வெற்றியைப் போன்று பணத்தை 40 பங்குகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஸகாத்தாக வழங்க வேண்டும். நீங்கள் கூறியதைப் போன்று மூன்று வருடங்களாக ஸகாத் வழங்கவில்லையெனில் உங்களது பணத்தை 40 பகுதிகளாகப் பிரித்து அதில் ஒரு பங்கை …

ஸகாத் தொடர்பான கேள்வி – பதில்கள் Read More »

ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்

ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள்   கேள்வி: 13. வியாபாரத்தின் மூலம் கிடைக்கின்ற இலாபத்திற்கு வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை உள்ளதா? அதனை உதாரணம் கூறி தெளிவு படுத்தவும்..   பதில்:-   வருடம் பூர்த்தியாக வேண்டிய நிபந்தனை இல்லாத பொருட்களில் இது மூன்றாவதாகும்.   உதாரணமாக, காணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு காணியை வாங்குகிறார். (அதனை வாங்கி) ஒரு வருடம் பூர்த்தியாகும் போது அதன் விலை இரண்டு இலட்சம் …

ஸகாத் குறித்த கேள்வி – பதில்கள் Read More »

ஸகாத் குறித்த கேள்வி பதில்கள்

ஸகாத் குறித்த கேள்வி பதில்கள் கேள்வி: 11. பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லையா? இதனை சற்று தெளிவு படுத்தவும்???   பதில்:- பழங்களையும், வித்துக்களையும் அறுவடை செய்யப்பட்டதும் அவைகளது ஸகாத்தை வழங்க வேண்டும். ஒருவர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யும் போது, அறுவடை செய்யும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஸகாத் கொடுப்பது அவருக்கு கடமையாகும். கேள்வி: 12. கால் நடைகள் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு …

ஸகாத் குறித்த கேள்வி பதில்கள் Read More »

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி09: ஸகாத் கடமையான பொருட்கள், சொத்துக்கள் ஸகாத் கொடுப்பவரின் கைவசம் காணப்பட வேண்டும்.இது பற்றிய விளக்கத்தை தரவும்? பதில்:- அதாவது, ஸகாத் கடமையாகும் பொருட்கள், சொத்துக்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட வேண்டும். சில நேரங்களில் இவருக்கு சொந்தமான சொத்துக்கள் வேறொருவரின் கைவசம் காணப்படும். ஆனால் இவருக்கு அவைகள் கிடைப்பதற்கு பல நாட்கள் செல்லலாம். அல்லது சில நேரங்களில் அவைகள் அழிந்து விடலாம். எனவே இப்படிப்பட்ட சொத்துக்களில் ஸகாத் கடமையாக மாட்டாது.   ⛳ பார்க்க:- “الشرح الممتع …

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும் Read More »

நோன்பு குறித்த கேள்வி பதில்கள்

கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன? பதில்: ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது. – மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? …

நோன்பு குறித்த கேள்வி பதில்கள் Read More »

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி: 7.ஸகாத் உடைய அளவீடு என்றால் என்ன? அது ஸகாத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும் என்பதற்கு ஆதாரம் என்ன? பதில்:- சொத்துக்களில் ஸகாத் கடமையாவதற்கு குறிப்பிடப்பட்ட ஒரு அளவீட்டை மார்க்கம் வைத்துள்ளது. அதை ஒருவர் எத்திக்கொண்டால் ஸகாத் கடமையாகும். இதற்கு அரபு மொழியில் “நிஸாப்b” என்று கூறப்படுகிறது. அந்த அளவீடு ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனவே ஒருவரிடம் எந்த வித சொத்துக்களும் இல்லையெனில் அவரின் மீது ஸகாத் கடமையாக மாட்டாது. அதேபோல் ஒருவரிடம் சில சொத்துக்கள் காணப்படுகின்றன. …

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும் Read More »

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி: 05. ஸகாத் கடமையாகுவதற்குறிய நிபந்தனைகள் யாவை? பதில்:- 1. ஸகாத் கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். 2. சுதந்திரமானவராக இருக்க வேண்டும். 3. ஸகாத் கொடுக்க வேண்டிய பொருட்கள் (அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட)அளவை அடைந்திருத்தல். 4. அவைகள் அவரின் கைவசம் காணப்பட வேண்டும். 5. அவைகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். ஆனால் பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லை. பார்க்க:- “مجموع فتاوى ورسائل العثيمين” (16/18) கேள்வி: 06. இறை …

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும் Read More »

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)

بسم الله الرحمن الرحيم   ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …

ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

ஸகாத் பற்றிய  கேள்வி பதில்கள்   3.கேள்வி:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும், மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கும் ஒரு உதாரணம் கூறுக? பதில்:- யதார்த்தத்தில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் கால்நடைகள், பயிர்கள், பழங்கள் மற்றும் வியாபாரப் பொருட்களாகும். மறைமுகமான அடிப்படையில் வளர்ச்சியடையும் சொத்துக்களுக்கு உதாரணம் தங்கம் மற்றும் வெள்ளியாகும். ஏனெனில் இவ்விரண்டும் அசையாமல் இருந்தாலும் இவ்விரண்டின் மூலமாக விரும்பிய நேரத்தில் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும். ⛳ பார்க்க:- “الشرح الممتع للشيخ ابن العثيمين” (1/455)   …

ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும் Read More »

ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள்

கேள்வி:- 1.ஸகாத் என்றால் என்ன? பதில்:- அரபு மொழியில் ஸகாத் என்றால் “வளர்ச்சியடைதல்” ,”அதிகரித்தல்” என்ற கருத்தாகும். மார்க்க ரீதியாக “ஸகாத்” என்றால் “குறிப்பிடப்பட்ட சொத்தில் வரையறுக்கப்பட்ட அளவை குறிப்பிடப்பட்ட கூட்டத்தினருக்கு வழங்குவதற்கு கூறப்படுகிறது”. கேள்வி:- 2.இஸ்லாத்தில் ஸகாத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமும், அந்தஸ்தும் யாது? பதில்:- ஸகாத் என்பது கடமையான ஒன்றாகும்.  இதனுடைய அந்தஸ்தைப் பொறுத்தவரையில், இஸ்லாத்தின் தூண்களில் மூன்றாவதாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழும் ஒருவர் “இது கடமை” என்பதை மறுத்தால், அவர் காபீராகி விடுவார். ஏனெனில், …

ஸகாத் பற்றிய கேள்வி பதில்கள் Read More »

Telegram மற்றும்  Watsapp  மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

%d bloggers like this: