“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன?
– அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி
– அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி
– அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல்
கேள்வி:
“(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், தெளிவான ஆதாரத்தின் மீதே நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன்” (12:108)
(என்ற ஆயத்திற்கும்) “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற பிரபலமான ஹதீஸிற்கும் மத்தியில் எவ்வாறு இணக்கம் ஏற்படுத்தி (புரிந்து) கொள்வது? மேலும், மக்களுக்கு நினைவூட்டுவதற்கும், அவர்களுக்கு தஃஅவத் செய்வதற்கும் கல்வியானது நிபந்தனையாகுமா?
அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல்’உஸைமி ஹஃபிதஹுல்லாஹ்:
இவ்விரண்டிற்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை.
(நபி) ﷺ அவர்களுடைய “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற கூற்றானது, “அதாவது என்னிடமிருந்து கிடைத்த ஆயத்தில் எதில் உங்களுக்கு பஸீரத் (தெளிவான ஞானம்) இருக்குமோ, (அதை) எத்தி வையுங்கள் என்பதாகும்.”
அதாவது, அதனுடைய பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதிலிருந்து நாடப்படுவதை உறுதி கொண்டிருப்பீர்கள். எனவே, கல்வியிலிருந்து ஏதேனும் ஒன்றை உறுதியாக (அறிந்திருப்பீர்கள் என்றால்), அது ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே, அதனை (பிறருக்கு) நீங்கள் எத்தி வைக்கலாம்.
அவ்வாறல்லாது நீங்கள் ஒரே ஒரு ஆயத் அல்லது ஒரே ஒரு ஹதீஸை மட்டும் தெரிந்து கொண்டு, பின்னர் அதல்லாத மற்றதை எத்திவைப்பதை பொறுத்தமட்டில், இதுவே தடுக்கப்பட்டதாகும்.
எனவே, தஃஅவாவுடைய நிபந்தனைகளிலிருந்து உள்ளதாவது, அது பஸீரத்தின் மீது அமைந்திருப்பதாகும்; அதாவது கல்வியின் மீதும், தெளிவான ஆதாரத்தின் மீதும் அமைந்திருப்பதாகும்.
எனவே, நீங்கள் குறைவாக அறிந்து கொண்டு, குறைவாகத் தெரிந்து கொண்டு, அதிகமாக தஃஅவத் செய்வது, “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற (நபி) ﷺ அவர்களின் கூற்றைக் கொண்டு நாடப்படவில்லை.
மாறாக (அதைக் கொண்டு) நாடப்படுவதாவது, நீங்கள் கல்வியைக் கொண்டு தஃஅவா செய்ய வேண்டும் என்பதாகும்; கல்வியிலிருந்து நீங்கள் அடைந்து கொண்டது ஒரு ஆயத் அளவு இருந்தாலும் சரியே.
🔗https://youtube.com/watch?v=fstRDJ4d8y8&si=A0Oxu0IeBk77OTNf
அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ்:
அல்லாஹ்வை நோக்கிய தஃஅவத்தானது, இது கடமையான, தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
சத்தியத்திலிருந்து நீ அறிந்துக்கொண்டதின் பக்கம் நீ அழைப்பதென்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும்.
ஆம். கட்டாயமாக நீ தஃஅவா செய்ய வேண்டும். (ஆனால்) எதை நோக்கி அழைக்கின்றாயோ அதைப்பற்றி நீ அறிந்தவனாக இருக்கின்றாய் என்ற நிபந்தனையுடன் (அதனை செய்ய வேண்டும்).
இந்த விடயமானது, இதில் (சில) விவரம் உள்ளது.
“கல்வியானது தஃஅவாவில் நிபந்தனையாகும், நானோ இன்னும் (கல்வி) தேடலின் தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றேன், என் மீதும் தஃஅவா செய்வது கடமையா?” என்று சில மக்கள் கேட்கின்றனர்.
(அதற்கான) பதிலானது, தஃஅவாவுடன் கல்விக்கு இருக்கும் தொடர்பில் சில விவரம் உள்ளது.
தஃஅவாவிற்காக (ஷைஃகாக அல்லது ஆசிரியராக மக்கள்) முன்னிலையில் வருபவருக்கும், அவ்வாறல்லாதவருக்கும் மத்தியில் வேறுபாடு உள்ளது.
தஃஅவாவிற்காக முற்படக்கூடியவர், இந்த இடத்திற்கு அவரைத் தகுதியாக்கக்கூடிய (போதுமானதொரு) அளவை மார்க்கக் கல்வியிலிருந்து பெற்றிருப்பது அவசியமாகும்.
ஏனெனில், அவர் (பிறரை) வழிநடத்தக்கூடிய இடத்தில் உள்ளார். இன்னும், சில வேளைகளில் ஃபத்வா அளிக்கக்கூடிய இடத்திலும் இருக்கக்கூடும்.
எனவே, கல்வியிலிருந்து (போதுமானதொரு) அளவை அடைந்திருப்பது (இத்தகையவர் மீது) கட்டாயமான ஒன்றாகும்.
அதற்கு கீழுள்ள (நிலைகளைப்) பொறுத்தவரையில், அது ஒரு மனிதர் அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து அறிந்து கொண்டதின் பக்கம் தஃஅவா செய்வதாகும்.
(உதாரணத்திற்கு) “லா இலாஹ இல்லல்லாஹ்”வின் அர்த்தத்தை அறிந்துள்ளார், எனவே அறியாதவருக்கு அதனைக் கற்றுக் கொடுப்பது கட்டாயமாகும்.
சரியான முறையிலான தொழுகையைக் கற்றுக்கொண்டார்; அதனை கற்றுக்கொடுக்க வேண்டும். மக்கள் அவர்களுடைய கொள்கையில் அல்லது அவர்களுடைய நடத்தையில் ஏற்படக்கூடிய தவறுகளை அறிந்தார், அதனைப் பற்றி அறியாதவருக்கு அதைக் கற்றுக்கொடுப்பது அவர் மீது கடமையாகும்.
எனவே, இந்த இடத்தில் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகும்.
ஏனெனில் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” நீ அறிந்து கொண்ட ஆயத்தை, இன்னும் நீ விளங்கிய ஹதீஸைப் (பிறருக்கு) எத்திவைப்பது உன்மீது கடமையாகும். எனவே (இந்தக கண்ணோட்டத்தில்) நாம் இவ்விரு நிலைகளுக்கும் மத்தியில் வேறுபடுத்திப் பார்ப்போம்.
📚 _ஷர்ஹ் ‘ஸலா’ஸதில் உஸூல், பக்கம்: 19, 20_
அஷ்ஷைஃக் அஹ்மத் பாஸ்மூல் ஹஃபிதஹுல்லாஹ்:
(மார்க்கத்தைப் பற்றி சரியான) அறிவில்லாத தப்லீக் ஜமாஅத்தினர், இன்னும் அவர்கள் அல்லாத மற்றவர்கள் (அவர்களுடைய வழிகேடான அழைப்புப்பணிக்கு) அதிகமாக “என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே” என்ற நபி ﷺ அவர்களின் வார்த்தையைக் கொண்டே ஆதாரம் காட்டுகின்றனர்.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து பேசுவதும், மக்களுக்கு தஃஅவத் செய்வதும் அனைவருக்குமானது என்ற நோக்கத்தில் (அவ்வாறு செய்கின்றனர்).
ரஸூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஒட்டுமொத்த உம்மத்தையும் (இந்த) மார்க்கத்தை மக்களுக்கு எத்திவைக்கக்கூடிய பணியைச் செய்யுமாறு ஏவியுள்ளார்கள், அது ஒரு ஆயத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதன் மூலமாயினும் சரியே என்ற கோணத்தில் (இந்த ஹதீஸைக் கொண்டு) ஆதாரம் காட்டுகின்றனர்.
இது ஒரு சத்தியமான வார்த்தையாகும், (எனினும்) அதனைக் கொண்டு அசத்தியம் நாடப்படுகின்றது.
அது பின்வரக்கூடிய (காரணங்க)ளினால் ஆகும்:
1️⃣ முதலாவது:
ஒரு ஆயத் அல்லது ஒரு ஹதீஸ் அல்லது உலமாக்களிடமிருந்து செவிமடுத்த ஒரு கல்வி சார்ந்த விடயம் என சத்தியத்தை எத்திவைப்பதற்கும், அறிவிலிகள் மற்றும் மனோ இச்சைகளைப் (பின்பற்றும்) வழிகெட்ட மக்கள் அநேகரின் நிலையைப் போன்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து கல்வியறிவு இல்லாமல் பேசுவதற்கும் மத்தியில் வித்தியாசம் உள்ளது
அஷ்ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் கூறினார்கள்:
அறியாமையானது ஒரு கடுமையான நோயாகும் – அல்லாஹ் பாதுகாப்பானாக – இது இன்றைய தினத்தில் அதிகமான தா’ஈக்களுடைய முஸீபத்தாகும்; அவர்கள் எத்தகையவர்களெனில் அறியாமையின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைக்கின்றனர், தவ்ஹீதுடைய விடயங்களில் பொடுபோக்காக இருக்கின்றனர்!
2️⃣ இரண்டாவது:
*தஃஅவாவில் கருத்தில் கொள்ளப்படுவதாவது பஸீரத்தின் (உறுதியான ஞானம் மற்றும் தெளிவான ஆதாரத்தின்) மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது
அஷ்ஷைஃக் இப்னு உ’தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்:
ஒரு மனிதரிடத்தில் அவர் எதனை நோக்கி அழைக்கின்றாரோ, அதைப்பற்றிய பஸீரா கண்டிப்பாக இருத்தல் வேண்டும். அவர் கல்விக்கடலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
அவர் தொழுகையினுடைய விடயத்தில் கல்வியறிவைப் பெற்றுக்கொண்டார் என நாம் வைத்துக்கொள்வோம். பின்னர் தொழுகையை சரிப்படுத்துவது மற்றும் பூரணப்படுத்துவதன் பக்கமும், மேலும் அதனை ஸுன்னாஹ்வில் வந்துள்ளது போல் நிறைவேற்றுவதன் பக்கமும் மக்களை அழைக்கத் தொடங்கிவிட்டார்.
(இவ்வாறு) இந்த கல்வியைக் கொண்டு அல்லாஹு த’ஆலாவின் பக்கம் அழைப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை.
கல்விக்கடலான ஆலிமாக இரு, இல்லையென்றால் மக்களுக்கு தஃஅவத் செய்யாதே என்று நாம் கூறுவதைப் பொறுத்தவரையில், இது தவறாகும். (ஏனெனில்) நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்:
“என்னிடமிருந்து எத்தி வையுங்கள் (அது) ஒரு ஆயத்தாக இருந்தாலும் சரியே.”
3️⃣ மூன்றாவது:
ஒரு முஸ்லிமானவர் நன்மையானவற்றிலிருந்து தான் கற்ற, அறிந்து வைத்துள்ள விடயத்தை பிறருக்கு எத்திவைப்பதில் எந்தவொருத் தடையும் இல்லை. ஆனால், மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஒரு முஃப்தியாக, ஒரு ஆலிமாக தன்னை ஆக்க வேண்டும் என்பது அதற்கு அர்த்தமில்லை, அதற்கு அவர் தகுதியானவராக இருந்தாலே தவிர
இப்னு உ’தைமீன் ரஹிமஹுல்லாஹு த’ஆலா கூறினார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய ஷரீ’அத்திலிருந்து தான் அறிந்தவற்றை – அது குறைவாக இருந்த போதிலும் – (பிறருக்கு) எத்திவைக்குமாறு ஏவப்பட்டுள்ளார். ஆனால், அவர் தன்னை ஒரு பெரிய முஃப்தியாக ஆக்கிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது அவர் மீது கடமையாகும்.
ஏனெனில், சில மக்கள் ஒரு உபதேசமளித்து, பின்னர் அங்கு பங்குபெற்றவர்கள் எழுந்து அவரிடம் கேள்விகள் கேட்டால், அவரோ (அந்நேரத்தில்) சரியானவற்றையும், தவறானவற்றையும் கொண்டு பஃத்வா கொடுப்பவராக மாறிவிடுகிறார்!
”எனக்குத் தெரியாது” என்று நீ (அவர்களிடத்தில்) கூறினால்,” உன்னுடைய அந்தஸ்தானது மக்களிடத்தில் இறங்கிவிடும்” என்று அவருடைய நஃப்ஸ் அவரிடத்திலே கூறும்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இது (முற்றிலும்) தவறான ஒன்றாகும். ஏனெனில், ஒரு மனிதர் தனக்குத் தெரியாத ஒரு விடயத்தில் ”எனக்குத் தெரியாது” என்று கூறினால், அல்லாஹ்விடத்தில் அவருடைய அந்தஸ்து உயர்வடைவதைப் போல, மக்களிடத்திலும் அவருடைய அந்தஸ்தானது உயர்வடையும்.
🔗https://www.radiosunna.com/articles_96.html
📜 அரபியுடன் வாசிக்க:
https://tinyurl.com/33wnn976
🌐 இணையதளம்:
salafiyyah.in
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: