இப்ன் பாஸ்
கேள்வி :நோன்பாளி பகல் பொழுதுகளில் நறுமணங்களை / வாசனைத் திரவியங்களைபயன்படுத்துவதன் சட்டம் என்ன? பதில்: ரமளான் பகல் பொழுதுகளில் அதை பயன்படுத்துவதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் தவறில்லை. எனினும் தூபத்தை(சாம்பிராணி, சந்தனம் போன்றதைத்) தவிர, ஏன் எனில் அதில் புகை என்ற வயிற்றை சென்றடையும் பொருள் உள்ளது. – மஜ்மூஃ ஃபதாவா வ-ராஸில் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமின்(ரஹிமஹுல்லாஹ்) கேள்வி :வேண்டுமென்றே உணவு ரமழானில் ஒரு நாள் உட்கொண்டு, பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பவரின் நிலை என்ன? …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து)
بسم الله الرحمن الرحيم ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) 1. அப்துர்ரஹ்மான் இப்னு ஸைத் இப்னு அஸ்லம் (ரஹிமஹுல்லாஹ்) (தபஉத் தாபிஈன்களில் ஒருவர்): எமது ஆசிரியர்களிலும் அறிஞர்களிலும் எவரும் ஷஃபானின் நடு இரவு விடயத்தில் கவனம் செலுத்தியதாக நாம் அறியவில்லை. மக்ஹூல் என்பவர் (ஷஃபான் தொடர்பாக) கூறிய ஹதீஸை வேறு எவரும் கூறவில்லை. ஏனைய இரவுகளை விட இந்த இரவுக்கு சிறப்பு இருப்பதாக அவர்களில் யாரும் கருதவில்லை. …
ஷஃபான் 15ம் இரவு பற்றிய சரியான நிலைப்பாடு (அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகளிலிருந்து) Read More »
மது அருந்துவது, வட்டி வாங்குவது, விபச்சாரம் செய்வது போன்ற பாவங்கள் செய்வோருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவது.
கேள்வி 1): மது அருந்தும் வழக்கம் உடையவர், மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழலாமா? உங்களிடம் நல் உபதேசத்தை எதிர்பார்க்கிறேன், அல்லாஹ் நற்கூலியை உங்களுக்கு வழங்கட்டும். பதில்: ஆம், பாவம் செய்பவர்களாக இறந்தவர்களுக்கு, அவர்கள் முஸ்லிமாக இருந்திருந்தால் ஜனாஸா தொழவேண்டும். அவர் மது அருந்துபவராக இருந்தாலும், அல்லது பெற்றோருக்கு மாறுசெய்பவராக இருந்தாலும், அல்லது உறவுகளை துண்டிப்பவராக இருந்தாலும், அல்லது வட்டி வாங்குபவராக இருந்தாலும், அல்லது இது போன்ற ஏனைய பாவங்கள் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவருக்கு ஜனாஸா தொழவேண்டும். …
பல குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான மார்க்கச் சட்டம்.
கேள்வி: திரிபோலியில், பாதிஹ் பல்கலைக்கழகத்திருந்து நேயர்; முஹம்மத் அம்மார் நஜ்ஜார் கேள்வி கேட்டனுப்பியிருக்கிறார்: கருத்தடை மாத்திரைகள் அல்லது கருப்பையக சாதனம் (IUD) அல்லது பிற முறைகளைப் பயன்படுத்தி, தற்காலிக குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வது தொடர்பான இஸ்லாமிய சட்டம் என்ன?அத்தோடு அதிகமான குழந்தைகளை பெற்றெடுத்த பின், நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான சட்டம் என்ன? அல்லாஹ் உங்களுக்கு நற்கூழியை வழங்குவானாக! பதில்: தேவை ஏற்படின், அதாவது அதிகமான குழந்தைகளை ஒரு தாய் பராமரிப்பது சிரமம் என்பதனால் அல்லது அவள் …
பல குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு நிரந்தர கருத்தடை செய்வது தொடர்பான மார்க்கச் சட்டம். Read More »
குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால்
கேள்வி: முஸ்லிம் விலங்கை அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால் அது ஹராம் ஆகிவிடுமா? அதை உன்ன அனுமதி இல்லையா? பதில்: முஸ்லிம் விலங்கை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அல்லது உதூ செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டால், அவருடைய பலியிடுதல் உதூ ஆகியவை சரியானவையே. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஹஜ்ஜின் போது ஹதி செய்யும்போதும், ஹஜ்ஜில் ஏற்படும் தவறுகளுக்கு ஃபித்யா கொடுக்கும்போதும் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்துவிட்டாலும் சரியே, இவற்றில் …
குர்பானி கொடுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துவிட்டால் Read More »
உழ்ஹிய்யா குறித்த சில கேள்வி பதில்கள்
1.இடது கையால் குர்பானிப் பிராணியை அறுப்பது பற்றிய மார்க்கத் தீர்ப்பு : கேள்வி : நான் இடக்கை வழக்கமுடையவன்…. இடக்கையால் குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிட்டால் அது கூடுமா ? இமாம் இப்னு பாஸ்z (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் பதில் : நீங்கள் அவ்வாறு இடக்கையால் அறுத்தாலும் அது கூடும். இமாம் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத் தளத்திலிருந்து http://www.binbaz.org.sa/noor/10976 மொழியாக்கம் : முஹம்மத் அத்னான் முராத் {السلفي } 2.உழ்ஹிய்யா இறைச்சியை எப்படி பங்கிடுவது???? இமாம் இபின் பாஸ் …
ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன?
கேள்வி: இமாம் அப்துல் அஜீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி இவ்வாறு கேட்கப்பட்டது: முன் சென்ற நல் அடியார்களின் கப்ருகளுக்குச் சென்று அவர்களிடம் பரகத் பெற்று மற்றும் சன்மானம் பெறும் நோக்கில் மவ்லிதுகளிலும், மற்ற சந்தர்ப்பங்களில் குர்ஆன் ஓதுபவரின் பின்னால் நின்று தொழுவதன் சட்டம் என்ன? அதற்கு இமாம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்: இது விரிவாக பார்க்க வேண்டியது. அவர் ஷிர்க் ஏதும் செய்யாமல் மவ்லித் மட்டும் கொண்டாடுகிறார் என்றால், அவர் ஒரு பித்அத்வாதி …
ஷிர்க் செய்யும் இமாமின் பின்னால் தொழுவதன் சட்டம் என்ன? Read More »
இகாமத்தின் வாக்கியங்கள்
கேள்வி: நான் வங்காளதேசத்தை சார்ந்தவன், எங்கள் நாட்டில் பாங்கைப் போலவே இகாமத்தின் ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு முறை கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான அரபு நாடுகளில் இகாமத்தின் வாக்கியங்கள் ஒருமுறை தான் கூறப்படுவதை காண்கிறான், இதற்கான ஸஹீஹான ஆதாரம் என்ன? பதில்: புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே. நபி صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்களிடமிருந்து இகாமத் பல முறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் வடிவம் (பதினோரு வாக்கியங்கள்): 1) அல்லாஹு அக்பர்; 2)அல்லாஹு அக்பர்; 3)அஷ்ஹது அன் …
விமானம், கார், ரயில், கப்பல் ஆகியவற்றில் தொழுவது
ஒருவன் விமானத்திலிருக்கும் போது தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும்? தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே விமானத்தில் வைத்துத் தொழுதுவிடுவது சிறந்ததா? அல்லது அதன் கடைசி நேரத்திற்குள் விமானம் நிலையத்தை அடைந்துவிடும் என்றிருந்தால் விமானம் நிலையத்தை அடையும் வரை காத்திருப்பது சிறந்ததா? பதில்: விமானத்திலிருக்கும் ஒரு முஸ்லிமின் கடமை என்னவெனில் தொழுகை நேரம் வந்துவிட்டால் அவன் தனது சக்திக்கேற்ப தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும். நின்று தொழ முடிந்தால்- நின்ற நிலையிலிருந்தே ருகூவையும் சுஜுதையும் நிறைவேற்ற முடிந் தால் அவ்வாறு …
விமானம், கார், ரயில், கப்பல் ஆகியவற்றில் தொழுவது Read More »
தொழும்போது தடுப்பு வைத்துக் கொள்ளுவது
தொழும்போது தமக்கு முன்னால் ஒரு தடுப்பு வைத்துக் கொள்ளும் விஷயத்தில் அதிகமான சகோதரர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். எந்த அளவுக்கெனில் பள்ளியில் இருக்கும்போது காலியான ஒரு தூண் கூட அவர்களுக்குக் கிடைக்காத போது வேறு தடூப்பு கிடைக்கும் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர். தடூப்பு ஏற்படுத்திக் கொண்டு தொழாதவர்களை ஆட்சேபிக்கவும் செய்கின்றனர். இன்னும் சிலர் இவ்விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். இதில் எது உண்மை? தடூப்பு இல்லாதபோது தடுப்புக்குப் பதிலாக கோடூ போட்டுக் கொள்ளலாமா? இதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? …