بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்
கேள்வி 2️⃣0️⃣ :
நோன்பாளியாக இருக்கும் பெண் சமைக்கும்போது அதிலுள்ள (புளிப்பு, உவர்ப்பு, காரம்,… போன்ற)சுவைகளை சரிபார்க்கும் நோக்கில் அதனை நாவில் வைத்து சுவை பார்க்கலாமா.?
📝பதில் :
அவ்வாறு செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் அந்த உணவு அவளது தொண்டையை அடையக்கூடாது. (அவ்வாறு அடைந்தால் நோன்பு முறிந்துவிடும்).
கேள்வி 2️⃣1️⃣ :
மூச்சுவிடுதலில் சிரமப்படும் நபர்கள் நோன்பின்போது ஆஸ்துமா குழாயை பயன்படுத்துவதன் மார்க்கச் சட்டம் என்ன.?
📝பதில் :
அது ஒரு உணவாகவோ/ பானமாகவோ கருதப்படாது. ஆகையால், இது நோன்பை முறிக்குமா என்பது பற்றி எனக்குத் தெரியாது.
மூலநூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)
Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்: