எந்தவித காரணமுமின்றி ரமழானின் ஒரு நோன்பை விட்டால்? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன்

கேள்வி : எந்தவித காரணங்களுமில்லாமல் ரமழான் மாதத்தின் ஒரு நோன்பை விட்ட காரணத்தினால் அதற்காக ஒரு நோன்பு நோற்றால் போதுமானதா அல்லது இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டுமா?

பதில் : ஏன் அவர் நோன்பை விட்டார் என்பது தெரியாது.

நோன்பு காலத்தில் பகல்பொழுதில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது ஹராமான விடயம் என்பது அறிந்தநிலையில்; மனைவியுடனான உடலுறவினால் நோன்பை விட்டார் என்றிருந்தால், அவர்மீது (கீழ்வரும் ஒன்றில்) குற்றப்பரிகாரம் கடமையாகின்றது,
– ஒரு அடிமையை விடுதலை செய்வது. (இது முடியவில்லை என்றால்)
– தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பது. (இதுவும் முடியவில்லை என்றால்)
– அறுபது (60) ஏழைகளுக்கு உணவு கொடுத்தல்.

உடலுறவு என்ற காரணத்தினால் இல்லாமல் நோன்பை விட்டிருந்தால்; அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் என்பதுடன் அவர் விட்ட அந்த நோன்பை வேறுநாளில் கழா செய்யவேண்டியது அவர் மீது கடமையாகின்றது.

பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்)
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d