ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா?

கேள்வி : ஒரு மனிதர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தால் – அவர்மீது நோன்பு நோற்பது கடமையா? ஆம் என்றால், இதற்கு ஆதாரம் உள்ளதா? பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஒருவர் ரமழானின் தலைப்பிறையை பார்த்தாலோ, அல்லது ஷவ்வால் மாத பிறையை தான் பார்த்து, அத்தகவலை காழியிடமோ அல்லது ஊர் மக்களிடமோ சொல்லும்போது அவர்கள் அவருடைய சாட்சியை ஏற்கவில்லை என்றால், அவர் தனியாக நோன்பு நோற்க வேண்டுமா? அல்லது மக்களுடன் சேர்ந்து நோன்பு இருக்க வேண்டுமா? எனும் விடயத்தில் ... Read more

“பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குஃப்ர் ஏற்படுத்துபவர்களுக்கான மறுப்பு

கேள்வி: புஹாரியில் உள்ள “பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்” என்ற ஹதீஸ் மூலமாக முஆவியா ரழியல்லாஹு‌அன்ஹு அவர்கள் காஃபிர் என்பதற்கு தெளிவான ஆதாரம்‌ என்று ராபிழா(ஷிஆ)க்களின் சிலர் கூறுகின்றனர்.இந்த தவறான வாதத்திற்கு இணையத்தில் பதில்கள் ஏதும் இல்லை.தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் பதில்: முதலில் நபித்தோழர்கள் விஷயத்தில் நபியவர்களுடன் தோழமை கொள்வதற்கு அல்லாஹ் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதால் அவர்கள் மீது நல்லெண்ணம் ... Read more

பாவம் செய்யும் ஒருவர் “ஈமான் எனது உள்ளத்தில் உள்ளது” என்று கூறினால் அவருக்கு எவ்வாறு பதிலளிப்பது?

கேள்வி: சிலர் தாடியை மழித்தல், புகைபிடித்தல் போன்ற ஹராமான செயல்களைச் செய்கிறார்கள், அதைச் செய்வதை நிறுத்துங்கள் என்று அறிவுறுத்தினால், அவர்கள் “இறைநம்பிக்கை(ஈமான்) என்பது தாடி வளர்ப்பதிலோ அல்லது புகைபிடிப்பதைக் கைவிடுவதிலோ அல்ல, மாறாக அது எமது உள்ளத்தில் உள்ளது”என்றும் மேலும் “அல்லாஹ் உங்கள் உடல்களைப் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளத்தை பார்க்கிறான்” என்றும் கூறுகின்றார்.இந்த விஷயத்தில் நாம் அவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த வார்த்தைகள் சில அறியாமையுள்ள அல்லது தவறான ... Read more

ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?.

கேள்வி: ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் தர்மம் செய்வது சிறந்ததா? அல்லது அந்த சிறப்பு வாய்ந்த நாட்களை இரவு தொழுகையிலும் திக்ருகளிலும் கழிப்பது சிறந்ததா?. பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ரமழானின் கடைசிப் பத்து இரவுகளில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸ்ஸல்லம்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது என்னவென்றால், அந்த இரவுகளை தொழுகையிலும், திக்ருலும் கழிக்க வேண்டும் என்பதே. தர்மம் செய்வதை பொறுத்தவரை மற்ற நேரங்களில் தர்மம் செய்வதை விட ரமழானில் தர்மம் சிறந்தது,ஆனால் கடைசி பத்து நாட்களில் தர்மம் செய்வது (மற்ற ... Read more

இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா?

கேள்வி: இஸ்லாமிய மார்க்க விளக்கம் பற்றி பதிவு செய்யப்பட்ட(ஆடியோ/வீடியோ) பாடங்களைக் கேட்பதன் மூலம் முஸ்லிமிற்கு நன்மைகள் கிடைக்குமா? பதில்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அறிவைத் தேடுவது நற்செயல்களில் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் இது ஒரு நபர் தனது நேரத்தை செலவிடுவதற்கான சிறந்த வழியாகும்,மேலும் முஸ்லிமை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சிறந்த பாதையாகும். இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் கூறினார்கள்: கல்வி கற்பது என்பது இறைவழிபாடுகளில் ஒன்று. ஜாமி’ பயான் அல்-இல்ம் (1/104). சுஃப்யான் அத்-தவ்ரி(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: ... Read more

குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் ஓதலாமா?

கேள்வி: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை சஜ்தாவில் கேட்டால், தொழுகை கூடுமா? உதாரணமாக: رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும் எங்கள் மக்களையும் எங்களுக்கு கன் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! என்று கேட்பது. பதில்: குர்ஆன் ஆயத்துகளில் வரும் துஆக்களை துஆ செய்யும் நிய்யத்தில் (எண்ணத்தில்) ஸுஜூதிலும், ருகூவிலும் ஓதுவதில் தவறில்லை, குர்ஆன் கிராஅத் ஓதும் நிய்யத்தில் ஓதக்கூடாது. உதாரணமாக நீங்கள் கூறிய இந்த துஆவைப் போல்: رَبَّنَا ... Read more

அவ்வாபீன் தொழுகை

கேள்வி: அவ்வாபீன் தொழுகை என்பது மஃரிபுக்கு பின்பு தொழுகப்படும் ஆறு ரக்ஆத் தொழுகையா? பதில்: இது ஸஹீஹ் அல்ல, ஆனால் மஃரிபுக்கும் இஷாவிர்க்கும் இடையில் நஃபில் தொழுவது விருமத்தக்கது, அது ஆறு ரக்ஆத்துகளுக்கு அதிகமாக இருந்தாலும் சரி. (அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டு, அவனுக்கு  கட்டுப்பட்டு , அனைத்து நேரங்களிலும் அவனிடம் திரும்புபவர்கள் அவ்வாபீன் என்று அழைக்கப்படுகின்றனர்) அவ்வாபீன் தொழுகையை பொறுத்தவரை, ழுஹா தொழுகையே அவ்வாறு அழைக்கப்படுகிறது, அதாவது ழுஹா நேரத்தின் வெயில் கடுமை ஆகும்நெரும் தொழுகப்படும் தொழுகை ... Read more

ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன?

கேள்வி: ஸகாதுல் பித்ருடைய முழுமையான சட்டம் என்ன? பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்… ரமழான் மாதத்தின் இறுதிப் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையே ஸகாதுல் பித்ர் ஆகும். இதற்கு ஸதகதுல் பித்ர் என்றும் கூறப்படும். இதனுடைய சில சட்டதிட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். ஸகாதுல் பித்ருடைய சட்டம் என்ன? ஸகாதுல் பித்ர் கடமையான ஓர் இபாதத் ஆகும். இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு ... Read more

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது)  ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..?

கேள்வி: கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு விடுபட்ட ரமழானுடைய நோன்புகளை திரும்ப கழா செய்ய வேண்டுமா ..? (அல்லது) ஒவ்வொரு நோன்பிற்கு பகரமாக ஏழைகளுக்கு உணவளித்தால் போதுமா..? 📝 பதில் : அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடும் கருத்து வேறுபாடு காணப்படுகிறது; எனவே அவர்களுக்கு மத்தியில் பல நிலைப்பாடுகள் உள்ளது. ... Read more

ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்? எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா?

கேள்வி: ஃபஜ்ர் அல்லது மக்ரிப் இவற்றில் எது நாளுடைய ஆரம்பம்? எது நடுத் தொழுகை? நடுத்தொழுகை அஸ்ர் என்றால், ஃபஜ்ர் என்பது நாளின் ஆரம்பம் இல்லையா? குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருந்து எனக்கு தெளிவுபடுத்துங்கள். பதில் : அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடுத் தொழுகையைக் அறிவோம்… “தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள்” [அல்-பகரா 2:238] இது அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ள விஷயங்களில் ஒன்றாகும். ஹாஃபிழ், ... Read more