ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 04 6) வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துதல் :   நபிகளார் வுழூ செய்த முறையை நாம் ஹதீஸ்களில் நோக்கும் போது வாய் மற்றும் மூக்கினுள் நீர் செலுத்துகையில் பின்வரும் நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடித்திருப்பதை அவதானிக்கலாம் :   1.வலது கையினால் நீரை எடுத்து வாய் மற்றும் மூக்கினுள் செலுத்தி, இடது கையினால் மூக்கை சிந்துதல். இதனை பின்வரும் மூன்று ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன :   அப்துல்லாஹ் இப்னு ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03   

  ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -03     4) பற் துலக்குதல் :   பற் சுத்தம் பேணுவது மார்க்கத்தில் மிக வலியுறுத்தப்பட்ட விடயம். நபியவர்கள் அதிகமாக பற் துலக்கும் பழக்கத்தை கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதற்கு பின்வரும் இரு விடயங்கள் சான்று :   1. ‘நபியவர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் முதலாவது செய்யும் காரியம் என்ன?’ என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘பற் துலக்குவது’ என பதிலளித்தார்கள் (ஸஹீஹ் ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02  

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 02   ஸஹாபாக்கள் விபரித்த ஒழுங்கில் நபிகளார் வுழூ செய்த முறை பற்றி நோக்குவோம் :   1.நிய்யத் அனைத்து வணக்கங்களுக்கும் நிய்யத் அவசியம் என்பதனால் வுழூ செய்ய ஆரம்பிக்கும் போது வுழூ செய்வதாக மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். இதற்கென தனியான அரபு வாசகம் எதுவும் மொழிய வேண்டியதில்லை. நமக்கு வழிகாட்டுவதற்கென்றே அனுப்பப்பட்ட நபிகளார் நிய்யத் வைப்பதற்கென்று அரபு வாசகங்கள் எதையும் வுழூவுக்கும் கற்றுத் தரவில்லை, தொழுகை, நோன்பு போன்ற ... Read more

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் : 01

ஸுன்னாவின் ஒளியில் வுழூ தொடர் -01 சுவர்க்கத்தின் திறவுகோலாக தொழுகை அமைந்திருப்பது போல் தொழுகையின் திறவுகோலாக வுழூ அமைந்திருக்கிறது என்பது நபி மொழியாகும் (திர்மிதி).   தொழுகை என்ற உயர்ந்த, உன்னதமான வணக்கத்தை ஓர் அழகிய அரண்மனையாக கற்பனை செய்தால் அதை திறக்கும் திறவுகோலாக வுழூவை கருத முடியும். அனைத்தலுகினதும் இரட்சகனான அல்லாஹ்வுடன் நாம் நடத்தும் உரையாடல் என நபியவர்களால் வர்ணிக்கப்பட்ட வணக்கமாகிய தொழுகையை வுழூ இன்றி நிறைவேற்றவே முடியாது என்பதன் மூலம் வுழூவின் முக்கியத்துவத்தை நாம் ... Read more

சிறுநீர், மலத்தை அடக்கிக்கொண்டு தொழலாமா?

கேள்வி : குளிர் மற்றும் (இதுபோன்ற) வேறுகாரணங்களினால் தொழுகைக்காகவும், வுழூவை பேணுவதற்காவும் சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்பவர் பற்றிய நிலைப்பாடு என்ன? அவர் மீது ஏதேனும் கடமைகள் இருக்கின்றனவா? பதில் : ஆமாம் அவர்மீது கடமைகள் இருக்கின்றன. ஏனெனில், அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “உணவு வந்து காத்துக்கொண்டிருக்கும்போது அல்லது சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழக்கூடாது.” (ஆதாரம் : முஸ்லிம்-969) அப்படி ஒரு ... Read more

வுளூ இல்லாமல் அதான்/பாங்கு கூறலாமா?

கேள்வி : (முஅத்தின்) தொழுகைக்கான அழைப்பை விடுபவர் வுழூ இல்லாமல் அவ்வழைப்பை மேற்கொள்ளலாமா? பதில் : ஆமாம், வுழூ இன்றி தொழுகைக்கான அழைப்பை மேற்கொள்ளவது ஆகுமானது. ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹுத்தஆலாவை (திக்ர்) நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.” (ஆதாரம் : முஸ்லிம்-608) எனவே, (அதான்) தொழுகைக்கான அழைப்பு என்பது (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூறுவதில் ஒன்றாக இருக்கின்றது. பதிலளிப்பவர் : அஷ்ஷைய்க் முஹம்மத் ... Read more

வாந்தி வுழூவை முறித்துவிடுமா?

கேள்வி : வாந்தி வுழூவை முறித்துவிடுமா? பதில் : வாந்தி என்பது குறைவாகவோ அல்லது கூடுதலாகவே இருந்தாலும் அது வுழூவை முறிக்காது என்பதுவே ஆதாரமான கருத்தாகும். ஏனெனில், வாந்தி என்பது வுழூவை முறிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. எனவே, வுழூ தொடர்ந்திருக்கும் என்பது அடிப்படையாகும். ”ஆதாரத்தின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை (மற்றுமொரு) ஆதாரத்தின் மூலமே அல்லாமல் (நினைத்த விதத்தில்) அதனை முறித்துவிட முடியாது.” என்ற இந்த கோட்பாடு மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் பிரயோஞனமானதாகும். வாந்தி என்பது ... Read more