ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

 

ரமழான் நோன்பு குறித்த கேள்விகளும் – பதில்களும்

 

கேள்வி 1️⃣2️⃣ :

பல வருடங்களாக தொடர் நோயின் காரணமாக ரமழான் நோன்பை முறித்துக் கொள்ளும் நபர் குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?

 

📝 பதில் :

குறித்த நோயானது குணப்படுத்த முடியாதது என மருத்துவர்கள் கண்டறிந்தாலும், நிச்சயமாக அல்லாஹு தஆலா அதனை குணப்படுத்த ஆற்றலுடையவன்.

 

ஆனாலும், குறித்த நோயானது (அவ்வளவு எளிதில்) குணமாக்க முடியாதது என்று முடிவு செய்யப்பட்ட ஒர் நபர் மீது எவ்வித குற்றமுமில்லை. அந்நபர் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது அவசியமாகும்.

 

அல்லாஹு தஆலா கூறுவதாவது :

 

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ

“…. (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்…”

(அல்குர்ஆன் 2:184)

 

 

மூல நூல் : ஃபதாவா ரமழான்; இமாம் முக்பில் பின் ஹாதீ அல்-வாதியீ (ரஹிமஹுல்லாஹ்)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply