மனைவியை அணுகும் போது, அவளிடம் மென்மையை கடைபிடிப்பது.

தாம்பத்ய உறவை துவங்குகையில் மனைவியிடம் மென்மையாக நடந்துகொள்வது விரும்பத்தக்கது. உதாரணமாக  அவளுக்கு குடிப்பதற்கு ஏதேனும் கொடுப்பது. இதை அஸ்மா பின்த் யஸீத் இப்னஸ்ஸகன் رضي الله عنه அறிவிக்கும் ஹதீஸில் காணலாம்.

அவர் அறிவிக்கிறார்: நான் ஆயிஷா رضي الله عنه அவர்களை அல்லாஹ்வின் தூதருக்காக صلى الله عليه وسلم அழங்கரித்தேன், பின்னர் அவரிடம் சென்று ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்காக அழைத்தேன்.  அவர் ஆயிஷாவின் அருகில் அமர்ந்து, ஒரு பெரிய கோப்பையில் பாலை எடுத்த வந்து குடித்தார். பின்னர் அதை ஆயிஷாவிடம் கொடுத்தார், அவர் வெக்கத்தில் தலை குனிந்தார். அஸ்மா கூறுகிறார், நான்நபியின் صلى الله عليه وسلم கையிலிருந்து வாங்கிக்கொள்என்று ஆயிஷாவை கடிந்தேன். வாங்கி கொஞ்சம் குடித்தார். நபி صلى الله عليه وسلم உன் தோழிக்கும் கொஞ்சம் கொடு என்றார். அதற்கு நான்யா ரசூலுல்லாஹ், நீங்கள் குடித்தபின் எனக்கு கொடுங்கள் என்றேன்’. அவர் எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு எனக்கு கொடுத்தார். நான் அமர்ந்து நபி صلى الله عليه وسلم எந்த இடத்தில வாய் வைத்து குடித்தார்களோ அந்த இடத்தை தேடி கண்டுபிடித்து அதே இடத்தில வாய் வைத்து குடித்தேன். பின்னர் அங்கிருந்த பெண்களை பார்த்து, அவர்களுக்கும் கொடு என்றார். ஆனால் அவர்கள் எங்களுக்கு பசிக்கவில்லை என்றார்கள், அதற்க்கு நபி صلى الله عليه وسلم பசியையும் பொய்யையும் ஒரே நேரத்தில் சேர்க்காதீர்கள்  என்றார் [அதாவது உங்களுக்கு பசியிருக்கும் போதேஎங்களுக்கு பசியில்லைஎன்று பொய் சொல்லாதீர்கள்]

[இந்த ஹதீஸை இமாம் அஹ்மத் ஒன்றுக்கு ஒன்று பலம் சேர்க்கும் இரு அறிவிப்பாளர் தொடருடன் (ஸணதுடன்) அறிவிக்கிறார், முஸ்னத் அல்ஹுமைதியிலும் இடம் பெறுகிறது]

– இமாம் நாஸிருத்தீன் அல் அல்பானி

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d