அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் – தொடர் 2

அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்வோம் தொடர் 2

 

  • திக்ரானது துஆவை விடச் சிறந்தது

 

துஆ எனும் வணக்கத்தை விட திக்ர் எனும் வணக்கம் சிறந்ததாகும். ஏனெனில் திக்ர் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள், அருட்கொடைகள் ஆகியவற்றைக் குறித்து அவனைப் புகழ்வதாகும். துஆ என்பது அடியான் தனது தேவையை கேட்பதாகும். இதுவும் அதுவும் சமமில்லை.

 

இதனால்தான் துஆ கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு தேவையை வேண்டுவது முஸ்தஹப்பாக இருக்கின்றது. இது துஆ அங்கீகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமையும் என்ற வழிகாட்டலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

 

திக்ர், புகழ் இன்றி துஆ கேட்பதைவிட அல்லாஹ்வைப் புகழ்ந்து திக்ர் செய்துவிட்டு துஆ கேட்பது சிறந்தது. மட்டுமல்லாமல், அது துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் உகந்தது.

 

அத்தோடு ஒரு அடியான் தனது நிலைமையையும், தேவையையும், இயலாமையையும் அல்லாஹ்விடத்தில் தெரியப்படுத்திப் பிரார்த்தனை செய்வது மேலும் சிறந்ததாகவும், இன்னும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதிக வாய்பையும் கொடுக்கின்றது. இதனைக் குர்ஆனில் [28:24, 21:87, 7:23] இடம்பெற்றிருக்கின்ற மூஸா நபி, யூனுஸ் நபி, ஆதம் நபி (அலைஹிமுஸ்_ஸலாம்) ஆகிய நபிமார்களின் பிரார்த்தனைகளிலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிரார்த்தனைகளில் நாம் அவதானிக்கலாம்.

 

பெரும்பாலானவை இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆய்விலிருந்து சுருக்கி எடுக்கப்பட்டுள்ளன.

 

முக்கிய உசாத்துணை:

الوابل الصيب للإمام ابن القيم

தமிழில் : ஹுஸைன் இப்னு றபீக் மதனி

தொடரும்…

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d